India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வங்கக்கடல் அதை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. புதிதாக உருமாறும் புயலுக்கு டானா என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் சின்னம் காரணமாக நாகப்பட்டினம் துறைமுகத்தில் தொலை தூரத்தில் காற்றழுத்த மண்டலம் உருவாகி இருப்பதை குறிக்கும் விதமாக ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் பல்வேறு பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக இன்று (அக்.22) புதுச்சேரி துறைமுகத்தில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்
குமரி மாவட்டத்தில் அரசு சாரா நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் முதியோர் இல்லங்கள் அனைத்தும், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலவாழ்வு சட்டம் 2007-ன் கீழ் கண்டிப்பாக 10 நாளுக்குள் பதிவு செய்ய வேண்டும். அனுமதியின்றி நடத்தப்படும் முதியோர் இல்லங்கள் மூடப்படும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று(அக்.,21) வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக இன்று (அக்.22) கடலூர் துறைமுகத்தில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று வாராந்திர மக்கள் குறை தீர்பு கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கி, பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, ஆதரவற்றோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 492 மனுக்களை பெற்று, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
ஸ்ரீவி, குன்னூர் நடுநிலைப்பள்ளியில் ரூ.16 லட்சத்தில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன. இங்கு கட்டிடம் கட்டினால் மாணவர்கள் சத்துணவுக் கூடத்திற்குச் செல்ல அவதியடைவார்கள். எனவே அருகில் நத்தம் புறம்போக்கு நிலத்தில் கட்ட கோரி மாற்றுத்திறனாளி முகேஷ் போராட்டத்தில் ஈடுபட்டார். இவருக்கு அப்பகுதி மக்கள் ஆதரவு அளித்த நிலையில் அதிகாரிகள் 1 வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
சிவகங்கை காளையார்கோவில் அருள்மிகு ஸ்ரீ சொர்ணபுரீஸ்வரர் ஆலயம் முன்பாக சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 15 லட்சம் மதிப்பிலான மாமன்னர் மருதுபாண்டியர்கள் கலையரங்கத்தை சிவகங்கை எம்எல்ஏ PR.செந்தில்நாதன் இன்று அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்கள். உடன் அதிமுக ஒன்றிய கழக செயலாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
பொள்ளாச்சி சப் – கலெக்டர் அலுவலக சாலையில் வாகனங்கள் வேகமாக சென்று கொண்டு இருப்பதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும். நேற்று காலை குடி போதையில் இருந்த ஆசாமி அங்கும் இங்கும் சாலையின் நடுவே நடந்து சென்றார். சென்டர் மீடியன் மீது ஏறுவதும், குதிப்பதும் என போக்குவரத்துக்கு இடையே தீராத விளையாட்டு பிள்ளையாய் அட்ராசிட்டியில் ஈடுபட்டார். இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
சென்னை, காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (38). தனியார் நிறுவன ஊழியரான இவர், நேற்று (அக்.21) தனது டூவீலரில் திண்டிவனத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார். மதுராந்தகம் அடுத்த ஊனமலை அருகே வந்தபோது முன்னாள் சென்ற லாரி திடீரென வலதுபுறம் திரும்பியதால் டூவீலர் லாரி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மதுராந்தகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் மழை, வெள்ளம் தொடர்பான புகார்களை தெரிவிக்க 1077, 0424-2260211 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் தொடர்புகொள்ளலாம். மேலும் ‘தமிழ்நாடு அலர்ட்’ செயலி மூலம் வடகிழக்கு பருவமழை பாதிப்பு குறித்த அறிவிப்புகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.