Tamilnadu

News April 12, 2025

ஈரோடு: சமையல் உதவியாளர் பணியிடங்கள்

image

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்துணவு மையங்களில், காலியாக உள்ள 139 (51+6+82) சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நிரப்பப்பட உள்ளன. இதற்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை erode.nic.in என்ற வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, ஏப்.,28 மாலை 5.45 மணிக்குள், தொடர்புடைய நகராட்சி, ஊராட்சி அலுவலகங்களில் சமர்பிக்கலாம். வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு இதை SHARE செய்யவும்.

News April 12, 2025

கொடைக்கானல்: முன்னாள் படைவீரர் ஓய்வு இல்லத்தில் பணி!

image

மூஞ்சிக்கல்லில் அமைந்துள்ள முன்னாள் படைவீரர் ஓய்வு இல்லத்தில் காலியாக Watchman பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு மாத ஊதியமாக ரூ. 10,000/- வழங்கப்படும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை வரும் 25 ஆம் தேதிக்குள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

News April 12, 2025

ராமநாதபுரத்தில் 187 சமையல் உதவியாளர் பணி

image

ராமநாதபுரத்தில் உள்ள மாவட்ட பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 187 சமையல் உதவியாளர் பணியிடங்களில் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளன. தேர்வான ஓராண்டுக்கு தொகுப்பூதியமும், அதன் பின்பு சிறப்பு காலமுறை ஊதியமும் வழங்கப்படும். 10-ம் வகுப்பு தோல்வி, தேர்ச்சி பெற்ற 18- 40 வயதுள்ளவர்கள் வரும் ஏப். 29க்குள் சம்பந்தப்பட்ட ஒன்றியம், நகராட்சி, அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.*SHARE பண்ணவும்

News April 12, 2025

கள்ளக்குறிச்சியில் அரசு மானியத்தில் திட்டங்கள்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பழங்குடியின மீனவ பயனாளிகளுக்கு, 90 சதவீத அரசு மானியத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.பயனடைய விரும்புவோர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், நெ.62/56ஏ, தாட்கோ அலுவலக வளாகம், அரசு மருத்துவமனை சாலை, விழுப்புரம்- 605 602 என்ற அலுவலகத்தில் நேரிலும், 04146 – 259329 என்ற தொலைபேசி எண்ணிலும் அழைக்கலாம்.

News April 12, 2025

கரூரில் 10-வது படித்த பெண்களுக்கு அரசு வேலை!

image

கரூர் அங்கன்வாடியில் காலியாக உள்ள, 206 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நியமனம் செய்யப்படவுள்ளன. இப்பணிக்கு, 21 முதல், 40 வயதுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். <>https://karur.nic.in/ <<>>இணையதள முகவரியில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என கரூர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளார். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

News April 12, 2025

மதுரையில் 448 சமையல் உதவியாளர் பணி

image

மதுரை மாவட்ட பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 448 சமையல் உதவியாளர் பணியிடங்களில் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளன. தேர்வான ஓராண்டுக்கு தொகுப்பூதியமும், அதன் பின்பு சிறப்பு காலமுறை ஊதியமும் வழங்கப்படும். 10-ம் வகுப்பு தோல்வி, தேர்ச்சி பெற்ற 18- 40 வயதுள்ளவர்கள் வரும் ஏப். 29க்குள் சம்பந்தப்பட்ட ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.*SHARE பண்ணவும்*

News April 12, 2025

6 வயது சிறுமிக்கு பாலியல் சீண்டல்

image

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பகுதியை சேர்ந்த 1ஆம் வகுப்பு படிக்கும் 6 வயது சிறுமி பள்ளிக்கு செல்லும் போது தின்பண்டங்களை வாங்கி கொடுத்து பாலியல் சீண்டல் செய்ததாக, குழந்தைகள் நல அலுவலர் சுகப்பிரியா கொடுத்த புகாரின் பேரில் ஆலங்காயம் காவல் துறையினர் இன்று (ஏப்.12) காலை விஜயகுமார் என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 12, 2025

கடலூர்: சத்துணவு மையத்தில் வேலை

image

சத்துணவுத் திட்டத்தின் கீழ், கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 320 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் https://cuddalore.nic.in/ என்ற இணைய தளம் வாயிலாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். மற்றவர்களுக்கு SHARE செய்து உதவுங்கள்.

News April 12, 2025

வீடியோ கேம்; தந்தை கண்டித்ததால் சிறுவன் விபரீதம்

image

திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் 4-வது தெருவை சேர்ந்தவர் முனவர் பாஷா. இவரது இளைய மகன் முகம்மது அப்ரார் (14), நேற்று முன்தினம் பகலில் செல்போனில் வீடியோ கேம் விளையாடுவதை முனவர் பாஷா கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த முகமது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 12, 2025

சேலம் 417 அங்கன்வாடி பணியிடம்; விண்ணப்பிப்பது எப்படி?

image

சேலத்தில் காலியாக உள்ள 417 அங்கன்வாடி பணியிடங்கள் நேரடியாக நிரப்பப்படவுள்ளது. சம்பளமாக ரூ.4100 – 24200 வரை வழங்கப்படும். இதர தகவல்களை சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், சேலம் மாநகராட்சி, ஆத்தூர் மற்றும் எடப்பாடி நகராட்சி அலுவலகத்தில் தெரிந்துகொள்ளலாம். அல்லது <>salem.nic.in<<>> என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.(ஷேர் செய்யுங்கள்)

error: Content is protected !!