Tamilnadu

News May 7, 2025

நாமக்கல் மாவட்ட வானிலை நிலவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்றும், நாளையும் (வியாழக்கிழமை) 3 மி.மீட்டர் மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) 4 மி.மீட்டர் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 102 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 77 டிகிரியாகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News May 7, 2025

பாலக்காடு – திருச்சி ரயில் ரத்து

image

பராமரிப்பு பணிகள் காரணமாக பாலக்காடு – திருச்சி ரயில் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் காரணமாக பாலக்காடு – திருச்சி தினசரி ரயில் மே.2ஆம் தேதி குளித்தலை – திருச்சி இடையே ரத்து செய்யப்படுகிறது. அன்றைய தினம் குளித்தலை – திருச்சி இடையே முன்பதிவு இல்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 7, 2025

மாமன்ற கூட்டத்தில் 75% கவுன்சிலர்கள் பங்கேற்கவில்ல

image

சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் இன்று (ஏப்ரல் 30) ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, கவுன்சிலர்கள் அனைவரும் 10 மணிக்கு வந்திருக்க வேண்டும் என மேயர் பிரியா வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில், இன்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்தின்போது மதியம் 1 மணி நேர நிலவரப்படி 200 கவுன்சிலர்களில் 34 பேர் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்று இருந்தனர். 75 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

News May 7, 2025

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

30 ஏப்ரல் 2025 அன்று, ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவில், வலுவான கடவுச்சொல் பயன்படுத்துவது உங்கள் தரவுக்கான ‘டிஜிட்டல் சீட் பெல்ட்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. “உங்கள் தரவு, உங்கள் பொறுப்பு” என்ற குறிப்புடன், இணைய பாதுகாப்பில் கடவுச்சொல் முக்கியத்துவத்தை விளக்கும் இந்த விழிப்புணர்வு மக்களுக்கு உதவிகரமாக அமைந்துள்ளது.

News May 7, 2025

நடப்பாண்டில் 78 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

image

கோவை மாநகரில் நடப்பாண்டில் 78 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்துள்ளார். பல்வேறு சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மூலம் குற்றங்கள் தடுப்பதற்காக காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த ஆண்டு 51 பேர் மீது இந்த சட்டம் பயன்படுத்தப்பட்டதாகவும், இந்த ஆண்டு இதுவரை 78 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

News May 7, 2025

தொழில் முனைவோர் பயன் பெற அழைப்பு

image

ஈரோட்டில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தை(நீட்ஸ்) செயல்படுத்துகிறது. இத்திட்டத்தில் பிளஸ் 2 தேர்ச்சி அல்லது ஐ.டி.ஐ., படித்தோர், இளங்கலை பட்டம் பெற்ற, 21 முதல் 55 வயதுக்கு உட்பட்டோர் விண்ணப்பிக்கலாம். மேலும் மகளிர், சிறுபான்மையினர் முன்னுரிமையும் அளிக்கப்படுகிறது. விண்ணப்பிக்க இந்த <>லிங்க் <<>>வாயிலாக இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தகவல்.

News May 7, 2025

சேலம் கோட்டத்தில் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

மே தினம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டம் சார்பில் இன்று (ஏப்.30) முதல் மே 05- ஆம் தேதி வரை 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை, ஓசூர், பெங்களூரு, கோவை, திருப்பூர், மதுரை, திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட நகரங்களுக்கு சேலத்தில் இருந்தும் மேற்கண்ட நகரங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

News May 7, 2025

மூன்று பேர் பலி- செந்தில் பாலாஜி இரங்கல்

image

கரூர் எம்எல்ஏ செந்தில் பாலாஜி பதிவில், கரூர், ஜோதிவடம் பகுதியை சேர்ந்த முத்துகிருஷ்ணன், குழந்தைகள் தியா, ரிதன் ஆகியோர், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகவும் மனம் வருந்தினேன்.மழலைகளை இழந்து வாடும் பிரபு ,மதுமதி, குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து கொள்கிறேன்.

News May 7, 2025

பள்ளி குழந்தை பலியான விவகாரம் – இருவர் சிறையில் அடைப்பு

image

மதுரை சிறுமி உயிரிழந்த வழக்கில் 8க்கும் மேற்பட்டோரிடம் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், அலட்சியமாக செயல்பட்டதாக பள்ளி தாளாளர் திவ்யா ராஜேஷ் மற்றும் உதவியாளர் வைரமணி ஆகிய இருவர் கைது செய்து காவல்துறை நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மதுரை மத்திய சிறைச் சாலையில் இருவரையும் அடைத்தனர்.

News May 7, 2025

விருதுநகர் மாவட்டத்தில் 6 மையங்களில் நீட் தேர்வு

image

விருதுநகர் மாவட்டத்தில் வரும் மே.4ஆம் தேதி அன்று நடைபெற உள்ள நீட் தேர்வை 6 மையங்களில் 3012 மாணவ மாணவிகள் எழுதுகின்றனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த ஆண்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் 812 மாணவ மாணவிகள் நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த ஆண்டு 629 மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!