Tamilnadu

News April 13, 2025

தஞ்சையில் கொளுத்தும் வெயில்

image

தமிழகத்தில் கோடை காலம் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு பகுதிகளில் தற்போதே வெயிலில் தாக்கம் சதத்தை அடித்து விட்டது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் தஞ்சை மாவட்டத்தில் 100 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. சில நாட்களாக வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் வீட்ற்குள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கோடைகாலத்தில் இந்த வெப்ப தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

News April 13, 2025

விருத்தாசலம் அருகே 390 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

image

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த வயலூரில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை சோதனை செய்ததில், 390 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போதைப் பொருட்கள் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 13, 2025

75 வயது மூதாட்டியிடம் பாலியல் அத்துமீறல்

image

செங்குன்றம் அருகே சிரங்காவூர் கிராமத்தைச் சேர்ந்த 75வயது மூதாட்டி தனியாக வசித்து வருகிறார். கடந்த 8 ம் தேதி, மூதாட்டி வீட்டில் தனியாக இருந்த போது, வாலிபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்து மூதாட்டியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். மூதாட்டி கூச்சலிடவே வாலிபர் தப்பியோடினார். புகாரின் அடிப்படையில் விச்சூரை சேர்ந்த தமிழன்பன் சந்துரு (23) என்பவரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News April 13, 2025

சட்டத்தை மீறியவர்களுக்கு பாடம்:  4 பேர் மீது  பாய்ந்தது வழக்கு!

image

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே ஆர்ச்சம்பட்டி கருப்ப நாயக்கன் குளம் அருகே அரசு அனுமதி இன்றி மண் அள்ளப்பட்டதாக ஆர்டிமலை கிராம நிர்வாக அலுவலர் ராமநாதன் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து அதே பகுதியைச் சேர்ந்த ராஜா, வெங்கடாசலம், சுப்பிரமணி, சுரேந்திரன் ஆகிய 4 பேர் மீது தோகைமலை போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து உங்கள் கருத்து என்ன?

News April 13, 2025

குமரி : பைக் திருடிய 2 பேர் கைது

image

குழித்துறை பகுதியில் பைஜு என்பவரின் உயர்ரக  பைக் திருட்டு போனது. இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் கொல்லம் பகுதியைச் சேர்ந்த ராகுல் சந்திரன் மற்றும் சுதீஷ் ஆகிய இருவரும் பைக்கை திருடியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்களை மார்த்தாண்டம் போலீசார்  கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

News April 13, 2025

கோவை: ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது

image

கோவை காந்திபுரத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் சில இளைஞர்கள், சந்தேகத்திற்கு இடமாக தங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற போலீசார் அங்கிருந்த ராஜேஷ், சௌந்தர், அருண்குமார், உள்ளிட்ட 7 பேரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்களை கைது செய்த போலீசார், ரூ.1.09 கோடி ரொக்கம், 2 கார்கள், 2 பைக்குகள், 12 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

News April 13, 2025

விழுப்புரம்: மாணவர்கள் வழிகாட்டி நிகழ்ச்சி

image

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞர் அறிவாலயத்தில் இன்று(ஏப்.13) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மாணவர்கள் வழிகாட்டி 2025 நிகழ்வு நடைபெற உள்ளது. மாணவர்கள் +2 முடித்த பிறகு என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? என குழப்பத்தில் இருப்பார்கள். இதற்கு தீர்வுகாணும் பொருட்டு இந்த வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விஜய் இன்போ மீடியா இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம்.

News April 13, 2025

75 வயது மூதாட்டியிடம் பாலியல் அத்துமீறல்

image

செங்குன்றம் அருகே சிரங்காவூர் கிராமத்தைச் சேர்ந்த 75வயது மூதாட்டி தனியாக வசித்து வருகிறார். கடந்த 8 ம் தேதி, மூதாட்டி வீட்டில் தனியாக இருந்த போது, வாலிபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்து மூதாட்டியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். மூதாட்டி கூச்சலிடவே வாலிபர் தப்பியோடினார். புகாரின் அடிப்படையில் விச்சூரை சேர்ந்த தமிழன்பன் சந்துரு (23) என்பவரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News April 13, 2025

டூவீலர் மோதிய விபத்தில் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் பலி

image

வாழப்பாடி அடுத்த சிங்கிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் (54). சேலம் வடக்கு மாவட்ட வன்னியர் சங்க செயலாளரான இவர், கடந்த 9ல் அப்பகுதியில் தம்மம்பட்டி நெடுஞ்சாலையில் நடைப்பயிற்சி சென்றபோது, தினேஷ் என்பவர் ஓட்டி வந்த டூவீலர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த பாண்டியன் சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

News April 13, 2025

நீலகிரி: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம் 

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று (12.04.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!