India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி – ராமேஸ்வரம் சாலையில் டேவிஸ்புரம் பகுதியில் பணிப்படை போலீசார் திடீரென வாகன சோதனைகளில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கிடமான முறையில் வந்த லாரி ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 49 மூட்டைகளில் 2.5 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது.வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் தப்பி ஓடினார். அரிசியுடன் வாகனத்தை பறிமுதல் செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் சார்பில் வருகிற 17.4.2025 அன்று கடலூாில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமும் நடைபெற உள்ளது. எனவே இதில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
திருச்செங்கோட்டைச் சேர்ந்த விஜயகுமாரி என்பவரது நிலத்தை அளவீடு செய்து கூட்டு பட்டாவில் இருந்து தனிப்பட்டாவாக மாற்றித் தருவதற்காக, சர்வேயர் பூபதி (36) என்பவர் 9 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து விஜயகுமாரி அளித்த புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்ட போலீசார், லஞ்சம் வாங்க முயன்ற பூபதியை கையும் களவுமாக கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்துார், வாணியம்பாடி ஆசிரியர் நகரை சேர்ந்தவர் முனீர் அஹமத் (56). இவர் நேற்று மதியம் தன்னுடைய இ-பைக்கை, வீட்டின் போர்டிகோவில் சார்ஜிங் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்கசிவு காரணமாக இ-பைக் எரிய தொடங்கியது. அதிர்ச்சியடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மின் இணைப்பை துண்டித்து, உடனடியாக தண்ணீர் ஊற்றி தீயை கட்டுப்படுத்தி அணைத்தார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
தமிழகத்தில் கோடை காலம் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு பகுதிகளில் தற்போதே வெயிலில் தாக்கம் சதத்தை அடித்து விட்டது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டத்தில் 99 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. சில நாட்களாக வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் வீட்ற்குள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கோடைகாலத்தில் இந்த வெப்ப தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள, ஜிஎஸ் காலனியை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவர், சொந்தமாக ‘ஏர்கன்’ வைத்திருந்தார். இந்நிலையில் நேற்று முந்தினம், இவரது வீட்டிலிருந்த சிறுவர்கள், எதிர்பாராதவிதமாக ஏர்கன்னை எடுத்து வெங்கடாச்சலத்தை சுட்டுள்ளனர். இதில் இடுப்பின் கீழ் பகுதியில், அலுமினிய குண்டு பாய்ந்தது, வெங்கடாச்சலம் படுகாயமடைந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திப்பனப்பள்ளியை சேர்ந்தவர் முனியம்மாள்(70). இவரது கணவர் கடந்த, 8 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டதால், மகன், மருமகளுடன் வசித்து வந்தார். கடந்த, 8 அன்று வீட்டிலிருந்து வெளியே சென்ற முனியம்மாள் மாயமான நிலையில், நேற்று முன்தினம் கும்மனுார் தென்பெண்ணையாற்றில் சடலமாக மிதந்தார். மூதாட்டி ஆற்றில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் எனவும், உறவினர்கள் தெரிவித்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
உதகை, குளிச்சோலை பகுதியில் கருஞ்சிறுத்தை மற்றும் சிறுத்தை இரண்டும் ஒன்றாக உலா வந்தன. நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தற்போது வன விலங்குகள் உணவு மற்றும் குடிநீருக்காக, குடியிருப்பு பகுதியை நோக்கி வருவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் கருஞ்சிறுத்தை, சிறுத்தை ஒரே இடத்தில் உலா வந்தது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் நாய்க் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. 2020ல் மொத்தம் 44 ஆயிரத்து 216 பேர் நாய்க்கடிக்கு ஆளாகினர். 2021 ல் 48 ஆயிரத்து 323 பேரும், 2022 ல் 46 ஆயிரத்து 962 பேரும், 2023ல் 47 ஆயிரத்து 291 பேரும், 2024ல் 45 ஆயிரத்து 404 பேரும் பாதிக்கப்பட்டனர். நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏ.ஆர்.வி. தடுப்பூசி செலுத்த வேண்டும் எனச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மானூர் அருகே சங்குப்பட்டியைச் சேர்ந்த வேல்முருகன் அங்குள்ள பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வருகிறார். படித்து முடித்த கல்வி சான்றிதழ் பெறுவதற்காக தனது தந்தையிடம் பணம் கேட்டுள்ளார். ஒரு வாரம் கழித்து தருவதாக தெரிவித்துள்ளார். சக நண்பர்கள் சான்றிதழ்கள் வாங்கி விட்டதால் மனமுடைந்த வேல்முருகன் விஷம் குடித்தார். பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Sorry, no posts matched your criteria.