India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம்: மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் மின்சாரம் துண்டிக்கப்படும். குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.இதை ஷேர் செய்யுங்கள்.
வந்தவாசியை அடுத்த நூத்தாம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமஜெயம் (46). இவரது மனைவி அஞ்சலை (39), இவர்கள் வீரம்பாக்கம் – தென்இலுப்பை சாலையில், வீரம்பாக்கம் ஏரிக்கரை அருகே மொபட்டில் சென்றனர். அப்போது, எதிரே வந்த டிராக்டர் மொபட்டி மீது மோதியது. இந்த விபத்தில் ராமஜெயம் அதே இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி அஞ்சலை படுகாயம் அடைந்தார். இதுகுறித்து, வந்தவாசி வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் சார்பில் ஏப்.,17ஆம் தேதி கடலூாில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார். (SHARE பண்ணுங்க)
புதுகை தலைமை அஞ்சல் அலுவலகங்களில் வரும் 15ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை சித்திரை திருவிழா மெகா ஆதார் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பெயர், முகவரி, செல்போன் எண் திருத்தம் செய்து கொள்ளலாம். பயோமெட்ரிக் திருத்தம் செய்ய ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை மாவட்டத்திலுள்ள 31 துணை அஞ்சலகங்களில் நன்கு பயன்படுத்திக் கொள்ள கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் முருகேசன் தெரிவித்துள்ளார். (SHARE பண்ணுங்க)
நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், நேற்று நடந்தது. அதில் முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதையடுத்து, 415 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. ஒரு கிலோ 85 ரூபாய்க்கு விற்ற முட்டைக்கோழி விலையை, எவ்வித மாற்றமும் செய்யாமல், அதே விலையிலும் கறிக்கோழி விலையில் ரூ.7 உயர்த்தி ரூ. 96 க்கும் நிர்ணயம் செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் செங்குறிச்சி கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் இன்று ஏப்ரல் 13-ஆம் தேதி, காலை சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் சடலம் மிதப்பதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் விவசாய கிணற்றில் மிதக்கும் வாலிபர் சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மற்றும் விவேஷியல் அகாடமி நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு டிப்ளமோ ஆரி எம்பிராய்டரி மற்றும் ஜவுளியில் கையால் அச்சிடும் பயிற்சி வழங்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தாட்கோ மாவட்ட தாட்கோ அலுவலகத்தை அணுகவும். (SHARE பண்ணுங்க)
திருப்பத்தூர், கரம்பூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (27). இவர் மின்சார வாரிய அலுவலகத்தில் கேங்மேனாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை நாராயணபுரத்தில் மின்மாற்றி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது வெங்கடேசன் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மின்துறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு வராததால் ஆத்திரமடைந்த வெங்கடேசன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தென்காசி மாவட்டம், ஆயக்குடி பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற முருகன் தளமான பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குழந்தை வரம் வேண்டி விரதம் மேற்கொள்பவர்கள் அங்குள்ள அனுமன் நதி கரையில் படி பாயாசம் சாப்பிட்டால் விரைவில் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது நம்பிக்கை. இதற்காக பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் இங்கு வந்து செல்வது வழக்கம்.
முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்படுகிறது. இவ்விருது, ரூ.1,00,000/- ரொக்கம், பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவைகளை உள்ளடக்கியதாகும். 2025ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது எதிர்வரும் 15.08.2025 அன்று நடைபெறும் சுதந்திர தினத்தன்று முதல்வரால் பரிசு வழங்கப்படும் என்றார்.
Sorry, no posts matched your criteria.