Tamilnadu

News April 13, 2025

கடலூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்றும் தமிழகத்தில் இரவு 7 மணி வரை ஒரு சில மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், கடலூரில் லேசான மழை முதல் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் எச்சரிக்கையுடனும் பாதுகாப்பாகவும் இருக்க அறிவுருத்தப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க

News April 13, 2025

பெரம்பலூர்: சிறுமியை கடித்து குதறிய நாய்

image

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் பேரலி கிராமத்தில் 8ம் வகுப்பு பயின்று வரும் மாணவி புவனேஸ்வரி(14). விடுமுறை என்பதால் தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது அப்பகுதியில் சுற்றித்திரிந்த வெறிநாய் ஒன்று, புவனேஸ்வரியை கடித்துக் குதறியது. இதில், படுகாயம் அடைந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து மருவத்தூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 13, 2025

திருப்பாச்சேத்தியில் உள்ள சிவன் கோவில் வரலாறு

image

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் மருநோக்கும் திருநோக்கிய அழகியநாதர் திருக்கோவில் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பு நளச்சக்கரவர்த்தியால் கட்டப்பட்டு வழிபட்ட சிறப்பு வாய்ந்த தலம். துளசியால் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்யப்படும் ஒரே தலம் இதுவேயாகும். பிரதோஷத்தின் போது இங்குள்ள இரண்டு மரகத லிங்கத்துக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். 20 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

News April 13, 2025

மயிலாடுதுறை: சித்திரை சிறப்பு ஆதார் முகாம்

image

மயிலாடுதுறை அஞ்சல் கோட்டத்தில் சித்திரை மாதத்தை வரவேற்கும் வகையில், மயிலாடுதுறை மற்றும் சீர்காழி தலைமை அஞ்சல் அலுவலகங்களிலும்,அதன் கீழ் இயங்கும் 20 துணை அஞ்சலகங்களிலும் வருகிற ஏப்.15ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை சித்திரை திருவிழா மேகா ஆதார் முகாம் நடைபெறவுள்ளது இந்த முகாமில் ஆதார் குறித்த அனைத்து சேவைகளும் வழங்கப்படுவதால், மக்கள் பயன்படுத்தி கொள்ளவும். SHARE பண்ணுங்க.

News April 13, 2025

மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி

image

அரியலூர் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி ஆர்.சி. தூய மேரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வருகிறது. இதில் 470க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். போட்டிகள் 9,12,15 மற்றும் பொதுப் பிரிவுகள் என நடைபெறுகின்றன முதல் மூன்று இடங்களில் பிடிக்கும் மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளும் கோப்பைகளும் வழங்கப்படும். கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

News April 13, 2025

கரூர்: தமிழ் புத்தாண்டில் போக வேண்டிய கோயில்

image

கரூரில் அஞ்சூர் சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் இக்கோயிலை மற்ற விஷேச நாட்களை காட்டிலும் தமிழ் புத்தாண்டில் வணங்கினால் பல நன்மைகள் உண்டாகுமாம். முருகனை தமிழ் புத்தாண்டில் வழிபடுவதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமாம். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதி, சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டுமாம். இதை SHARE பண்ணுங்க

News April 13, 2025

தமிழ் புத்தாண்டு- வடபழனி முருகன் கோயில் போங்க

image

சென்னை வடபழனி முருகன் கோயிலில் மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் முருகனை, மற்ற விஷேச நாட்களை காட்டிலும் தமிழ் புத்தாண்டில் வணங்கினால் பல நன்மைகள் உண்டாகுமாம். முருகனை தமிழ் புத்தாண்டில் வழிபடுவதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமாம். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதி, சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டுமாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

News April 13, 2025

நயினார்கோவில் நாகநாதர் கோயிலின் சிறப்பு

image

பரமக்குடி நயினார்கோவிலில் அமைந்துள்ளது நாகநாதர் கோயில். இங்கு மருதம், வில்வம் என 2 விருட்சங்கள் உள்ளன. பக்தர்கள் இந்த புற்றடியில் திருமணத் தடை, புத்திர பாக்கியம் இல்லாமை, நோய், வேலை கிடைக்காமை ஆகிய தங்களின் மனக் குறைகள் நீங்க பிரார்த்தித்து மஞ்சள் கயிறு கட்டுகிறார்கள்; இந்த புற்று மண்ணை எடுத்துச் சென்று நீரில் குழைத்து நோய் கண்ட இடங்களில் தடவ, பிணி தீர்வதாகவும் மக்கள் நம்புகிறார்கள்.*ஷேர் பண்ணுங்க

News April 13, 2025

முதலமைச்சர் மாநில இளைஞர் விருது – ஆட்சியர் அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றிய 15 முதல் 35 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் 2025 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 3 ஆண்கள் 3 பெண்களுக்கு வழங்கப்படும். ரூ.1 லட்சமும், பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கமும் வழங்கப்படும். இதற்கு, அதிகாரப்பூர்வ இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர்  தெரிவித்துள்ளார்.

News April 13, 2025

நாகையில் பயிற்சியுடன் கூடிய வேலை

image

ஐ.ஒ.பி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் DEEE முடித்த நாகை மாவட்ட கிராம புறத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு 30 நாட்கள் தொழில் பழகுநர் பயிற்சி இலவசமாக மத்திய அரசு சான்றுடன் வழங்கப்படுகிறது. மே 5ஆம் தேதி தொடங்க உள்ள பயிற்சியில் பங்குபெற 6374005365 / 8870940443 என்ற ஏதேனும் ஒரு எண்ணில் முன் பதிவு செய்ய பயிற்சி நிறுவன இயக்குனர் நடராஜன் கேட்டு கொண்டுள்ளார்.

error: Content is protected !!