India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரையில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சோழவந்தான் குருவித்துறை கிராமத்துக்கு உட்பட்ட சித்தாதிபுரம் அருவின்னு சொல்லக்கூடிய அணைக்கட்டு கடந்த சில மாதங்களாக டூரிஸ்ட் ஸ்பாட்டா மாறிட்டு வருது. குறிப்பா விடுமுறை தினங்கள்ல இந்த பகுதிக்கு போனீங்கன்னா கூட்டம் சற்று அதிகமாகவே இருக்கும். இருந்தாலும் தென்னை மரம், பனைமரம் போன்ற இயற்கை சார்ந்து இருக்கும்போது செம்ம வைஃப்-ஆ இருக்கும்.. Share It.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் சிறப்பாக செயல்படும் சுயஉதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு சுயஉதவிக் குழுக்கள் உள்ளிட்ட கூட்டமைப்புகளுக்கு ஆண்டுதோறும் மணிமேகலை விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2024-25ம் ஆண்டுக்கான மணிமேகலை விருதுக்கு தகுதியான சமுதாய அமைப்புகள் ஏப்ரல் 15-30 வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
வேலூர் மாவட்ட காவல்துறையினரின் இரவு ரோந்து பணிகள் இன்று 13.04.2025 அன்று இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மேற்கொள்ளப்பட்டன. மாவட்டம் முழுவதும் காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் ஹைவே காவல்படையினர் தங்களின் கடமைகளைச் சுறுசுறுப்புடன் செய்தனர். பொதுமக்களின் பாதுகாப்பிற்காக காவல்துறையினர் பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்கள் பணியை அங்கீகரிக்கும் வகையில், முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டுவருகிறது. நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் சமுதாய நலனுக்காக பணியாற்றபவர்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன்பிடித் தடைக்காலம் இன்று முதல் அமலாகிறது. ஆண்டு தோறும் மீன்கள் இனப்பெருக்க காலம் கடைபிடிக்கப்படும். மீன்கள் இனப்பெருக்க காலத்தையொட்டி, தமிழகத்தின் கிழக்கு கடற்கரையில் விசைப்படகுகள் மீன்பிடித் தடைக்காலம் இன்று நள்ளிரவு முதல் அமலாகிறது. ஜூன் 14 வரை மொத்தம் 61 நாட்கள் இந்த தடைக்காலம் அமலில் இருக்கும்.
தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ இன்று நெல்லைக்கு வருகை தந்தார். வண்ணார்பேட்டையில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு வருகை தந்த நயினார் நாகேந்திரனுக்கு, பாஜகவை சேர்ந்த மகளிர் அணியினர் மலர்தூவி வரவேற்றனர். பாஜக மாவட்ட தலைவர் முத்து பலவேசம் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் மாநில அணி பிரிவு நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
சீர்காழி ஊழியக்காரன் தோப்பு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் பயிலும் சுபாஷினி என்கிற மாணவி நடப்பு கல்வி ஆண்டில் தேசிய அளவில் நடத்தப்பட்ட தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்ட தேர்வில் 97 மதிப்பெண்கள் எடுத்து உதவித்தொகைக்கு தேர்வு பெற்றுள்ளார். தேர்வில் சிறந்து விளங்கியதற்காக மாணவிக்கு ஆசிரியர்கள், சக மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் இன்று (13.04.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள். இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, எங்களது இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யவும் என காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காட்பாடி அருகே வள்ளிமலை முருகன் கோயில் அமைந்துள்ளது. முருகனை கணவனாக அடைய வள்ளி இங்கு வழிபட்டதால், திருமணமாகாத பெண்கள் இங்குள்ள சுனையில் இருக்கும் நீரை எடுத்து தலையில் தடவிக் கொண்டால் விரைவில் திருமணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் நாளை தமிழ் புத்தாண்டு என்பதால் வள்ளிமலை முருகனை வழிபட்டால் சகல ஐஸ்வர்யமும் கிடைக்கும். ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.