India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருநெல்வேலியில் இருந்து தென்காசி, கடையநல்லூர் ராஜபாளையம் விருதுநகர் வழியாக ஞாயிற்றுக்கிழமை தோறும் மேட்டுப்பாளையத்திற்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் ஏப்ரல் 13ஆம் தேதி இன்று முதல் ஜூன் 2ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் பல மாவட்டங்களில் வெயில் சதம் அடித்து வருகிறது. இந்நிலையில் இன்று திருவண்ணாமலையில் இன்றைய அதிகபட்ச வெப்பநிலையாக 38 டிகிரி செல்சியஸ் ஆகவும், 100.4 டிகிரி பாரன்ஹீட் ஆகவும் பதிவாகியுள்ளது. மேலும் நண்பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்கவும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 13) இரவு ரோந்து போலீஸ் பட்டியல் விவரங்கள் வெளியாகிவுள்ளது. ஆம்பூர் டவுன், ஆம்பூர் தாலுகா, வாணியம்பாடி டவுன், வாணியம்பாடி தாலுகா, திருப்பத்தூர் டவுன், திருப்பத்தூர் தாலுகா, ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, அலங்காயம், உமராபாத், உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் இன்று இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்ணை அழைக்கலாம்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (ஏப்ரல்- 13) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (13/04/2025) இரவு கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளன.
மயிலாடுதுறையில் இந்தாண்டு மீன்பிடி தடைகாலம் நாளை (14ம் தேதி) நள்ளிரவு முதல் ஜூன் 14ம் தேதி வரை அமல்படுத்தப்படுகிறது. அதன்படி பூம்புகார், கொள்ளிடம், சீர்காழி, தரங்கம்பாடியில் 1,500 விசைப்படகுகளில் 20,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடித்து வருகின்றனர்.நாளை முதல் மீனவதொழிலாளர்கள் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலையிழப்பர். தடைகால மீனவர்களுக்கு தமிழக அரசு தலா ரூ.8000 வழங்குவது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு, தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் வழங்கப்படும் தனிநபர் கடன்,கைவினை கலைஞர் கடன்,சுயஉதவிக்குழுகடன் திட்டங்களுக்கு, விண்ணப்பம் பெற முகாம் நடக்க .கடன் பெற விரும்புவோர்,ரேஷன்,ஆதார் கார்டு,இருப்பிட சான்று, ஜாதிச்சான்று,வருமான சான்று நகல்,பாஸ்போர்ட் அளவு போட்டோ-4,தொழில் நுட்பஅறிக்கை எடுத்து ஈரோட்டில் ஏப்ரல் 24 தேதி வங்கிக்கு வர வேண்டும்.காலை10முதல் மாலை5 மணி வரை நடைபெறும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (13.04.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெற்றால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என 100— டயல் செய்யலாம்.
மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே 94987 94987 என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன் மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.SHARE
Sorry, no posts matched your criteria.