India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக நாகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். தொடர்ந்து நேற்று நெல்லை வந்த அவரை பொதுமக்கள் கட்சியினர் சிறப்பாக வரவேற்றனர். இதற்கு திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை பகுதியில் பொதுமக்கள் அளித்த அமோக வரவேற்பு என்னை நெகிழ்ச்சியடையச் செய்தது. மாபெரும் வரவேற்பளித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது அன்பு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்
தற்போது கடுமையான வெயில் நிலவி வரும் நிலையில், பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள முண்டந்துறை வனச்சரக அலுவலகத்தில் இருந்து காணி குடியிருப்பு பகுதிக்கு செல்லும் சாலையிலுள்ள பனங்காட்டு ஓடை என்ற பகுதியில் குட்டிகளுடன் கூடிய சுமார் 15க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் நீர் அருந்தி ஓய்வெடுத்து சென்றன.
தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் இப்போது வெளியிட்டுள்ளது.
தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று (ஏப்ரல்-13) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள் தங்கள் பகுதியைச் சேர்ந்த அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு உரிய உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100-ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.
இன்று (ஏப்.13) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் விவரங்கள் ராமநாதபுரம் மாவட்ட காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர். இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறை அதிகாரிகளின் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் தங்களுக்கு ஏதேனும் அவசர தேவை ஏற்பட்டால் புகைப்படத்தில் இருக்கும் எண்களை தொடர்பு கொண்டு அவர்களை உதவிக்கு அழைக்கலாம்.
திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று (ஏப்.13) இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். வள்ளியூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுப்ரமணியன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.
நீலகிரி மாவட்டத்தில் இன்று (13.04.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை போலீசாரின் “Knights on Night Rounds” 13.04.2025 இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம்.
கொள்ளிடம் புலீஸ்வரி அம்மன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. வருடந்தோறும் உற்சவத்தின் 11ஆம் நாள் கொள்ளிடம் ஆணைகாரன்சத்திரம் காவல் நிலையம் சார்பில் மண்டகப்படி விழா நடைபெறும் அதன்படி இன்று கொள்ளிடம் காவலர் குடும்பங்களை சேர்ந்தவர்கள் சீர்வரிசை எடுத்து கோவிலுக்கு வந்தனர். மயிலாடுதுறை எஸ்.பி. ஸ்டாலின் இன்ஸ்பெக்டர் பாலச்சந்திரன் ராஜா போலீசார் பொதுமக்கள் விழாவில்பங்கேற்றனர்.
Sorry, no posts matched your criteria.