India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; தென்காசி மாவட்ட மக்களுக்கு பண மோசடி குறித்து OTP யாரும் கேட்டால் சொல்ல கூடாது என தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் சமூக ஊடக வழித்தலங்களில் படவரி பக்கத்திலும் முகநூல் பக்கத்திலும் தென்காசி மாவட்ட காவல்துறை விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. *ஷேர்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் டிகிரி முடித்தவர்கள் வரை, வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. விண்ணப்ப படிவங்களை, வேலைவாய்ப்பு அடையாள அட்டையை காண்பித்து, கள்ளக்குறிச்சி வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பெற்றுக் கொள்ளலாம்.மேலும் https://employmentexchange.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வரும் நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் இன்று காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வெளியில் செல்லும் மக்கள் குடையுடன் முன்னெச்செரிக்கையாக இருங்கள்!.. குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க..
கள்ளக்குறிச்சியில் ஆரி எம்பிராய்டரி மற்றும் ஜவுளியில் கையால் அச்சிடுவதற்கான பயிற்சியில் பங்கேற்க கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார். விண்ணப்பதாரர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். தகுதி வாய்ந்தவர்கள் www.tahdco.com என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். தங்கும் விடுதி, பயிற்சி உபகரணம், உணவு செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வரும் நிலையில் திருச்சி மாவட்டத்தில் இன்று காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வெளியில் செல்லும் மக்கள் குடையுடன் முன்னெச்செரிக்கையாக இருங்கள்!.. குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க..
சிவகங்கை மாவட்டத்தில் குவாரி குத்தகை கோரும் விண்ணப்பதாரர்கள் மற்றும் சுரங்க நிலுவை தொகை சான்றிதழ் (Mining Dues clearance Certificate) கோரும் விண்ணப்பதாரர்கள் வரும் 28-ஆம் தேதி முதல் mimas.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் நேற்று (ஏப்.13) தெரிவித்துள்ளார். SHARE!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வரும் நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று மழை பொழிய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று காலை 10 மணி வரை மாவட்டத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது. வெளியில் செல்லும் மக்கள் குடையுடன் முன்னெச்செரிக்கையாக இருங்கள்!
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் நலனுக்காக மத்திய அரசு செல்வமகள் சேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்காக ஒரு நிதி ஆண்டுக்கு 250 முதல் அதிகபட்சம் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை செலுத்தி கணக்கு தொடங்கலாம். இந்த திட்டத்தில் குமரி மாவட்டத்தில் கடந்த நிதியாண்டு 7,944 பேர் கணக்குத் தொடங்கியுள்ளதாக தபால் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேற்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், உலகின் மூத்த குடி என்ற பெருமை கொண்ட தமிழ் குடிமக்கள் தொன்மையிலும், பன்முகத் தன்மையிலும் ஈடு இணையில்லா பண்பாட்டுப் பெருமை கொண்டவர்கள். தமிழ் மக்கள் கொண்டாடி வரும் சித்திரை முதல் நாளாம் தமிழ் புத்தாண்டில் அனைவரது வாழ்விலும் நலமும், வளமும் பெருகிட எனது மனமார்த்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள், என்றார்.
சிவகங்கை மாவட்டத்தில் வருகின்ற மே மாதம் 15ஆம் தேதிக்குள் அனைத்து விதமான கடை நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், தொழிற்சாலைகளின் வணிகர்கள் தங்களது நிறுவனங்களில், தமிழில் பெயர் பலகையினை வைத்து பராமரித்திடல் வேண்டும். வைக்கப்படாத கடைகள் மற்றும் நிறுவனங்களின் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.