Tamilnadu

News April 14, 2025

நினைத்ததை நிறைவேற்றும் வதாரண்யேஸ்வரர் திருக்கோவில்

image

மயிலாடுதுறையில் அமைந்துள்ளது அருள்மிகு வதாரண்யேஸ்வரர் திருக்கோவில். இங்கு நினைத்ததை வேண்டி அம்பாளுக்கு வஸ்திரம் சாத்தினால் வேண்டியது நடக்கும் என்பது ஐதீகம். ஐப்பசி அமாவாசை இங்கு மிக சிறப்பான நாளாக கொண்டாடப்படுகிறது. இங்கு வந்து வேண்டினால் திருமணத்தடை, கடன் பிரச்சனை, குழந்தை பிரச்சனை அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை. புத்தாண்டில் இங்கு சென்று வேண்டினால் நினைத்தது நடக்கும். ஷேர் பண்ணுங்க.

News April 14, 2025

போலீஸ் எஸ்.ஐ தேர்வுக்கு இலவச பயிற்சி

image

மதுரை மாட்டுத்தாவணி நேஷனல் இன்ஸ்டிடியூட் சார்பில் போலீஸ் எஸ்.ஐ., தேர்வுக்கான பயிற்சி வகுப்பு துவங்க உள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் இளங்கலை பட்டம் பெற்ற 20 வயது பூர்த்தி அடைந்த அனைத்து மாவட்ட மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். ஏப். 20ல் மையத்தில் நுழைவுத் தேர்வு நடைபெறும். 95666 59484 என்ற எண்ணில் முன்பதிவு செய்யலாம். போலீஸில் சேர விரும்பும் உங்க நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கு SHARE செய்து உதவவும்.

News April 14, 2025

கரூரில் இன்று மழைக்கு வாய்ப்பு!

image

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வரும் நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் இன்று மழை பொழிய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று காலை 10 மணி வரை மாவட்டத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வெளியில் செல்லும் மக்கள் குடையுடன் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

News April 14, 2025

நாமக்கல்லில் இன்று மழைக்கு வாய்ப்பு!

image

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வரும் நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் இன்று மழை பொழிய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று காலை 10 மணி வரை மாவட்டத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வெளியில் செல்லும் மக்கள் குடையுடன் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

News April 14, 2025

டிராக்டர் மீது லாரி மோதி கோர விபத்து

image

விழுப்புரம் மாவட்டம் வி.சாலை கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவர் மயிலம் முருகன் கோவில் திருவிழாவுக்கு தன் உறவினர்களுடன் டிராக்டரில் சென்றார். சுவாமி தரிசனம் முடிந்து நேற்று காலை சொந்த ஊருக்கு புறப்பட்டனர். மயிலம் அருகே வந்த போது, வேகமாக வந்த லாரி, டிராக்டரின் பின்பக்கம் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பாஸ்கர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். 18 பேர் காயமடைந்தனர்.

News April 14, 2025

குமரியில் 2.68 லட்சம் பேருக்கு புற்றுநோய் பரிசோதனை 

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 லட்சத்து 68 ஆயிரத்து 920 பேருக்கு புற்றுநோய் தொடர்பான ஆரம்ப கட்ட பரிசோதனை அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 6,538 பேருக்கு புற்றுநோய் வருவதற்கான ஆரம்ப அறிகுறிகள் கண்டறியப்பட்டு மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதில் 133 பேர்க்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்துள்ளதாக  ஆட்சியர் அழகு மீனா வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 14, 2025

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: ஒருவர் போக்சோவில் கைது

image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூா் மாநகராட்சியில் உள்ள கடை ஒன்றில் நேற்று சாக்லேட் வாங்க வந்த 8 வயது சிறுமிக்கு கடைக்காரர் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஒசூா் அனைத்து மகளிா் போலீசார் வழக்குப் பதிவு செய்து மளிகை கடை உரிமையாளா் சிவசங்கா் (56) என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News April 14, 2025

கடலூர் பாடலீஸ்வரர் கோயில்!

image

கடலூரில் புகழ்பெற்ற பாடலீஸ்வரர் கோயில் உள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் சிவனை, மற்ற விஷேச நாட்களை காட்டிலும் தமிழ் புத்தாண்டில் வணங்கினால் பல நன்மைகள் உண்டாகுமாம். தமிழ் புத்தாண்டில் வழிபடுவதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமாம். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதி, சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டுமாம். இதை SHARE பண்ணுங்க.

News April 14, 2025

விவசாய கிணற்றில் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு

image

சிங்கபெருமாள்கோவில் அடுத்த திருக்கச்சூர் பகுதியில் உள்ள பாழடைந்த விவசாய கிணற்றில், அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் கிடப்பதாக, மறைமலை நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 14, 2025

பச்சிளம் ஆண் குழந்தை சடலம்; தாய் கைது

image

திருவண்ணாமலை மாவட்டம் பெரியகள்ளப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் வெற்றிவேல். இவரது நிலத்தில் நேற்று டிராக்டரில் உழவு செய்தபோது, பச்சிளம் ஆண் குழந்தை சடலம் வெளியானது. இதுகுறித்து தச்சம்பட்டு போலீசார் விசாரித்தனர். அதில், அந்த நிலத்தின் அருகே வசிக்கும் மேகலா(39) என்பவருக்கு கடந்த 10ம் தேதி வீட்டிலேயே ஆண் குழந்தை இறந்து பிறந்ததும், அதை விவசாய நிலத்தில் புதைத்ததும் தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

error: Content is protected !!