India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு முழுவதும் இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் வழிபட வேண்டிய தலங்கள்: சிக்கல் சிங்காரவேலர் கோயில், சோவிராஜா பெருமாள் கோயில், நெல்லுக்கடை மாரியம்மன், நீலதாட்சட்டி அம்மன் கோயில், திருமறைக்காடார் திருக்கோவில், வலம்புரநாதர் திருக்கோவில், காயாரோகணேசுவரர் கோயில். உங்க குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
ஈரோடு, புஞ்சைபுளியம்பட்டி, புதுப்பாளையத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரது மகன் ராம்குமார் (26). இவர் நேற்று இரவு மது போதையில், வீட்டுக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் வட்டாரம், ஊராட்சி மற்றும் பகுதி அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், சுய உதவி குழுக்களுக்கு மணிமேகலை விருது வழங்கப்பட உள்ளது. உறுப்பினர்கள் திறன் வளர்ப்பு மற்றும் வாழ்வாதார பயிற்சி பெற்றிருப்பதுடன், சமூக நல செயல்பாடுகளில் பங்கேற்று இருக்க வேண்டும். தகுதிவாய்ந்த கூட்டமைப்புகள் வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஏப்.17 அன்று காலை 10 மணிக்கு சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 16 நிறுவனங்கள் பங்கேற்கும் நிலையில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.15,000 – ரூ.50,000 வரை ஊதியம் வழங்கப்படும். மேலும் விவரங்களை இங்கே <
அரியலூரில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நீங்கள் வழிபட வேண்டிய கோயில்கள். 1.திருமழப்பாடி வைத்தியநாதர் கோயில், 2.கங்கை கொண்ட சோழபுரம், 3. மேலப்பழுவூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், 4. கோதண்டராமசுவாமி கோயில், 5. அங்கராயநல்லூர் அய்யனார் கோயில், 6. அழகாபுரம் அழகேசுவரர் கோயில், 7. காமரசவல்லி கார்கோடேஸ்வரர் கோயில், 8. கீழையூர் இரட்டை கோயில்கள், 9. அயன்தத்தனூர் சோழீஸ்வரர் கோயில், 10. ஜமதக்னீஸ்வரர் கோயில்
தருமத்துப்பட்டி-பன்றிமலை சாலையில் அமைதிச்சோலை அருகே 60 அடி ஆழத்தில் ஆதிமூலம் நீரோடை உள்ளது. இங்கு நேற்று மாலை கால்நடை மேய்ச்சலுக்குச் சென்ற சிலர், ஒரு உடல் தீப்பற்றி எரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த கன்னிவாடி போலீசார் பாதி எரிந்த நிலையில் இருந்த ஒரு பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெங்களூரூவை சேர்ந்த கிஷோர்குமார் (44) அவரது மனைவி நித்யா (35) மகன்கள் ஜோஸ்வா (13), ஜோயல் (11) ஆகிய நால்வரும் நேற்று (ஏப்.13) போடிமெட்டு வழியாக காரில் கேரளா சென்று கொண்டிருந்தனர். பூப்பாறை செல்லும் ரோட்டில் அதிவேகமாக சென்ற கார் வளைவில் திரும்பிய போது, நிலை தடுமாறி 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து நொறுங்கியது. இதில் கார் தீப்பற்றி முழுதும் எரிந்தது. நால்வரும் க.விலக்கு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டனர்.
ஒரகடம் பகுதியை சேர்ந்தவர் சிவசங்கர். இவரது மகன் விஷ்வா (13). கடந்த 7 ஆம் தேதி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த விஷ்வாவை தெரு நாய் கடித்தது. இதில் வலது கையில் காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அதிகமான தலைவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் விஷ்வா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடங்கப்படும் குத்துச்சண்டை பயிற்சி மையத்தில் பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளார். இதற்கான விண்ணப்பங்கள் ராணிப்பேட்டை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் வழங்கப்படுகிறது. விண்ணப்பங்களை சமர்பித்திட கடைசி நாள் 20.04.2025 மாலை 5.00 மணி ஆகும். இதற்கான நேர்முகத் தேர்வு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் வரும் 25ஆம் தேதி நடைபெறும்.
தமிழ்நாடு முழுவதும் இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் வழிபட வேண்டிய தலங்கள்: பிரம்மபுரீஸ்வரர் கோயில், ஏகாம்பரேஸ்வரர் கோயில், பஞ்சநதீஸ்வரர் கோயில், சிறுவாச்சூர் மதுராகாளியம்மன் கோயில், அத்தியூர் வடமலை ஈஸ்வரர் கோயில், அந்துர் சிவலோகநாத சுவாமி கோயில், மதனகோபால சுவாமி கோயில். உங்க குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..
Sorry, no posts matched your criteria.