Tamilnadu

News August 7, 2025

திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்தில் “நலம் காக்கும் ஸ்டாலின்” என்ற திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் வரும் 9-ம் தேதி, பாப்பாக்குறிச்சி அருகில் உள்ள உருமு தனலட்சுமி கல்லூரியில் நடைபெற உள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகள் தங்களது பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் -2, ஆதார் நகல் மற்றும் தேசிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டையுடன் கலந்து கொண்டு பயனடையலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News August 7, 2025

வடசென்னை பட பாணியில் கஞ்சா கடத்தல்

image

சேலத்தில் சிறை கைதி மணிகண்டனை இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். பின்பு சிறையின் நுழைவாயிலில் மணிகண்டன் மீது மெட்டல்டிடெக்டர் கருவி கொண்டு சோதித்தனர். அப்போது அவர் ஆசன வாயில் மூலம் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது பின்னர் இனிமா கொடுத்து வெளியே எடுத்தனர். மேலும், அஸ்தம்பட்டி காவல் துறையின் விசாரணை நடத்தினர்

News August 7, 2025

விழுப்புரம் இளைஞர்களுக்கு ஓர் அரிய வேலைவாய்ப்பு

image

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அமைந்துள்ள ரங்கபூபதி கல்லூரியில் நாளை மறுநாள் (ஆக.9) தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாமில் 18 – 40 வயதுடைய இருபாலரும் பங்கேற்கலாம். 8ம் வகுப்பு முதல் முதுநிலை பட்டதாரிகள் வரை அனைவருக்கும் வேலைவாய்ப்பு உள்ளது. தேவைப்படுபவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News August 7, 2025

தருமபுரி ஆரம்ப சுகாதார மையங்களில் வேலை வாய்ப்பு

image

தருமபுரி மாவட்ட ஆரம்ப சுகாதார மையங்களில் காலியாக உள்ள பாரா மெடிக்கல் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியானது. இதன் மூலம் மருத்துவ உதவியாளர், டிரைவர், லேப் டெக்னீஷியன், ஸ்டாப் நர்ஸ் உட்பட 103 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பத்தை <>இணையத்தில் <<>>பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தருமபுரி மாவட்ட சுகாதார இயக்குநர் அலுவலகத்தில் ஆக்.8க்குள் சமர்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News August 7, 2025

அஞ்சல்துறையை கண்டித்து பட்டினி போராட்டம்

image

சாம்பவர்வடகரையை சேர்ந்த ஒற்றைப்போராளி வைத்திலிங்கம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: பன்னெடுங்காலமாய் பயன்பாட்டில் இருந்துவரும் பதிவுத்தபால் முறையை வரும் 1ம் தேதி முதல் ரத்து செய்வதாக அஞ்சல் துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை வாபஸ் பெறக்கோரி தென்காசி அஞ்சல் அலுவலகம் முன்பு 01.09.2025 அன்று 8 மணி முதல் 10 மணி நேரம் பட்டினிப் போராட்டத்தை நான் மேற்கொள்ள இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

News August 7, 2025

உதகையில் நடைபெற்ற தேசிய கைத்தறி விழா

image

நீலகிரி மாவட்டம் உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், கைத்தறி துறை சார்பாக 11ஆவது தேசிய கைத்தறி நாள் விழாவினை முன்னிட்டு, நடைபெற்ற கைத்தறி விற்பனை கண்காட்சியினை, மாவட்ட ஆட்சியினர் லட்சுமி பவ்யா தண்ணீரு, இன்று ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். சி.எச்.198 தோடா எம்பிராய்டரி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News August 7, 2025

BREAKING கோவை: ’பரிதாபங்கள்’ சேனல் மீது புகார்!

image

பிரபல யுடியூப் சேனலான ‘பரிதாபங்கள்’மீது கோவை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் வழக்கறிஞர் தனுஷ்கோடி புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் அந்த சேனலில் இருந்து வெளியான ‘சொசைட்டி பாவங்கள்’வீடியோ வைரலான நிலையில், இந்தப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு குடும்ப விவகாரத்தை சமூக விவகாரமாக மாற்றுவதாக அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்த உங்கள் கருத்தை COMMENT!

News August 7, 2025

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு!

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை, குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிராக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், “குழந்தையை பள்ளிக்கு அனுப்புவோம்; பள்ளி இல்லாமல் வாழ்க்கை இல்லை” என்ற கோஷத்துடன் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அனைவருக்கும் ஷேர் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்க!

News August 7, 2025

JUST NOW: தி.மலைக்கு ‘ஆரஞ்சு அலெர்ட்’

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், நாளை (ஆக.08) மிக கனமழைக்கான ‘ஆரஞ்சு அலெர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று (ஆக.07) தி.மலை உட்பட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆகமொத்தம் மழை வெளுத்து வாங்க போகிறது. முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News August 7, 2025

JUST NOW: திருப்பத்தூருக்கு ‘ஆரஞ்சு அலெர்ட்’

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், நாளை (ஆக.08) மிக கனமழைக்கான ‘ஆரஞ்சு அலெர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று (ஆக.07) திருப்பத்தூர் உட்பட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆகமொத்தம் மழை வெளுத்து வாங்க போகிறது. முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!