India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விவசாயிகள் அரசின் பல்வேறு திட்டப் பலன்களைப் பெறுவதற்கு, தங்களது நில உடைமை விவரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை போன்ற தொடர்புடைய விவசாய அட்டை பதிவிற்கான தேதி நாளையுடன் (15.04.2025 ) முடிவடைகிறது. ஆகவே உங்களுடைய பட்டா, ஆதார் எண், ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை கொண்டு சென்று இ-சேவை மையத்தில் பதிவு செய்யவும். பதிவு செய்ய முடியவில்லை எனில் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரை தொடர்பு கொள்ளவும். *SHARE*
விவசாயிகள் அரசின் பல்வேறு திட்டப் பலன்களைப் பெறுவதற்கு, தங்களது நில உடைமை விவரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை போன்ற தொடர்புடைய விவசாய அட்டை பதிவிற்கான தேதி நாளையுடன் (15.04.2025 ) முடிவடைகிறது. ஆகவே உங்களுடைய பட்டா, ஆதார் எண், ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை கொண்டு சென்று இ-சேவை மையத்தில் பதிவு செய்யவும். பதிவு செய்ய முடியவில்லை எனில் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரை தொடர்பு கொள்ளவும். *SHARE*
விவசாயிகள் அரசின் பல்வேறு திட்டப் பலன்களைப் பெறுவதற்கு, தங்களது நில உடைமை விவரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை போன்ற தொடர்புடைய விவசாய அட்டை பதிவிற்கான தேதி நாளையுடன் (15.04.2025 ) முடிவடைகிறது. ஆகவே உங்களுடைய பட்டா, ஆதார் எண், ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை கொண்டு சென்று இ-சேவை மையத்தில் பதிவு செய்யவும். பதிவு செய்ய முடியவில்லை எனில் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரை தொடர்பு கொள்ளவும். *SHARE*
சிவகாசியில் செயல்படும் தனியார் அலுமினிய தொழிற்சாலையில் மெஷின் ஆபரேட்டர் பணிக்கு 25 காலி பணியிடங்கள் உள்ளன. இதில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 – 40 வயதிற்குட்பட்ட ஆண்கள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.15,000 – 25,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <
தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் மாற்றுத்திறனாளிகள் தங்கள் பிரச்சனைகள் குறித்த மனுக்களை மாநில ஆணையத்திற்கு தபால் அல்லது மின்னஞ்சல் மூலமாக ஏப்ரல் 30க்குள் அனுப்பி வைக்கலாம். முன் கூட்டியே பெறப்பட்ட மனுக்கள் மீது திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் வைத்து மே 29,30 ஆகிய தேதிகளில் சுற்று நீதிமன்றம் நடைபெற உள்ளது. மனுக்கள் தாக்கல் செய்வது குறித்த தகவல்களுக்கு 9499933236 என்ற எண்ணில் அழைக்கலாம்.
மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தை பாதுகாக்க இந்தாண்டு இன்று (ஏப்.15) முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் தடைக்காலம் அமலில் இருக்கும். எனவே கடலுக்கு சென்ற தொண்டி, லாஞ்சியடி, சோலியக்குடி மற்றும் திருப்பாலைக்குடி விசைபடகு மீனவர்கள் இன்று இரவு12:00 மணிக்குள் கட்டாயம் கரைக்கு திரும்ப வேண்டும் என மீன்வள துறை கூறியுள்ளது. அதனைத் தொடர்ந்து 77 மீனவர்களும் கரைக்கு திரும்ப துவங்கியுள்ளனர்.
தமிழக நிறுவனங்கள் சட்டம், தொழிற்சாலைகள் சட்டம் மற்றும் விதிகள் படி, நீலகிரியில் உள்ள அனைத்து உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகளில், விதிமுறைகளுக்கு உட்பட்டு தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும். மே மாதம், 15ம் தேதிக்குள் 100% தமிழில் பெயர் பலகை வைப்பதை உறுதி செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் அபராதம் விதிக்க விதிக்கப்படும் என நீலகிரி மாவட்ட தொழிலாளர் நல உதவி ஆணையர் (அமலாக்கம்) தாமரை மணாளன் கூறியுள்ளார்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பத்ரி மாத்தோ (45) நாமக்கல் காவேட்டிப்பட்டியில் உள்ள கோழித் தீவன ஆலையில் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை, தவிடு மூட்டைகளை லாரியில் ஏற்றும்போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையில் படுகாயமடைந்த அவர், உயிரிழந்தார்.இது குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த தமிழ் புத்தாண்டு சிறக்க புதுவையில் நீங்கள் செல்ல வேண்டிய கோயில்கள். புதுவை மணக்குள விநாயகர் கோயில், திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயில், காரைக்கால் அம்மையார் கோயில், சுந்தரேஸ்வரர் கோயில், தருமபுரம் யாழ்முரிநாதர் கோயில், காரைக்கால் பார்வதீஸ்வரர் கோயில், பஞ்சனதீஸ்வரர் கோயில், வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், காரைக்கால் கைலாசநாதர் கோயில். SHARE செய்யவும்
நல்லம்பள்ளியில் தவறான சிகிச்சையால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹோமியோபதி மருத்துவம் படித்த கிருஷ்ணசாமி காலில் காயத்துடன் வந்த கோவிந்தராஜிக்கு அலோபதி சிகிச்சை அளித்ததில் உயிரிழந்தார். விஷயம் வெளியே தெரியாமல் இருக்க மருத்துவமனை நிர்வாகத்தினர் அவரின் குடும்பத்தினரிடம் ரூ. 10 லட்சம் பேரம் பேசியதாகக் கூறப்படும் நிலையில், அங்கு மாவட்ட சுகாதாரத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.