Tamilnadu

News April 14, 2025

சென்னை: திடீர் மின்தடையா ? இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!

image

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!

News April 14, 2025

நாகப்பட்டினத்தில் வேலை வாய்ப்பு

image

நாகப்பட்டினத்தில் மாவட்ட தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் மற்றும் மாவட்ட சித்த மருத்துவத்துறையில் இருக்கும் 20 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் இந்த<> லிங்கை<<>> கிளிக் செய்து ஏப்ரல் 22-ம் தேதிக்குள் விண்ணபிக்கவும். வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News April 14, 2025

திருவாரூரில் டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலை

image

திருவாரூரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள Sales Executive பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விருப்பம் உள்ள டிப்ளமோ படித்தவர்கள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க..

News April 14, 2025

திருப்பூர்: சித்திரையில் கண்டிபாக செல்ல வேண்டிய கோயில்கள்!

image

கொண்டத்துக்காளியம்மன் கோயில் – பெருமாநல்லூர். வலுப்பூர் அம்மன் கோயில் – அழகுமலை. மாரியம்மன் கோயில் – கருவலூர். பொங்காளியம்மன் கோவில் – நல்லூர். பல்லடத்தம்மன் கோயில் – பூமலூர். வஞ்சியம்மன் கோயில் – மூலனூர். மாரியம்மன் கோயில் தாராபுரம். தில்லாபுரியம்மன் கோயில் – தாராபுரம். சித்திரை மாதம் அம்மன் கோயில்களுக்கு செல்வதால் வெப்பத்தினால் ஏற்படும் நோய்கள் அண்டாதாம். இதை SHARE பண்ணுங்க.

News April 14, 2025

ஈரோடு: சித்திரையில் கண்டிபாக செல்ல வேண்டிய கோயில்கள்!

image

மாரியம்மன் கோயில் – பண்ணாரி. பத்ரகாளியம்மன் கோயில் – அந்தியூர். கொண்டத்துக்காளியம்மன் கோயில் – பாரியூர். மாகாளியம்மன் கோயில் – கருங்கல்பாளையம். எல்லையம்மன் கோயில் – பர்கூர். கரியகாளியம்மன் கோயில் – பிச்சரமல்லனூர். செல்லாண்டியம்மன் கோயில் அவல்பூந்துறை. பகவதியம்மன் கோயில் – கோபி. சித்திரை மாதம் அம்மன் கோயில்களுக்கு செல்வதால் வெப்பத்தினால் ஏற்படும் நோய்கள் அண்டாதாம். இதை SHARE பண்ணுங்க.

News April 14, 2025

தென்காசியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்

image

தென்காசி வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் ஏப். 16,17 ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் ஏப்.17 காலை 9 மணி வரை நடைபெற உள்ளது. இந்த வட்டத்தில் அரசால் நிறைவேற்றப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் இசக்கி மஹாலில் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை நிவர்த்தி செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று கேட்டுக்கொண்டார்.

News April 14, 2025

புதுவை மின்துறையில் வேலைவாய்ப்பு

image

புதுவை மின்துறையில் காலியாக உள்ள 177 கட்டுமான உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. GEN – 76, MBC -31, SC – 28 ,OBC -19, EWS – 17, BCM – 2, EBC -2, ST -1, பிற்படுத்தப்பட்ட பழங்குடியினர் 1, என்ற இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்படுகிறது. 18 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மேலும் அறிய <>இங்கு க்ளிக்<<>> செய்யவும். வேலை தேடு நண்பருக்கு SHARE செய்யவும்

News April 14, 2025

திருச்சியில் 12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை

image

திருச்சியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள Sales Executive பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 – ரூ.25,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விருப்பம் உள்ள பிளஸ் 2 படித்தவர்கள் <>இங்கு க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க..

News April 14, 2025

திருவள்ளூரில் அரசு வேலை; நாளையே கடைசி

image

திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் தேசிய நல்வாழ்வு திட்டத்தில் செயல்படும் மாவட்ட நலச் சங்கத்தில் காலியாக உள்ள 7 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மாதம் ரூ.23,000- 60,000 வரை சம்பளம் வழங்கப்படும். இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கை கிளிக் <<>>செய்து நாளை(ஏப்.15)க்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

News April 14, 2025

தைலகாப்பு அலங்காரத்தில் காட்சி தரும் தோணியப்பர்

image

சீர்காழி சட்டைநாதர் கோயிலில் மலைமீது சிவன்-பார்வதி கயிலாய காட்சியாக தோணியப்பர்-உமா மகேஸ்வரி தாயாராக அருள் பாலிக்கின்றனர். அவர்களுக்கு ஆண்டிற்கு ஆறு முறை மட்டுமே தைலக்காப்பு எனும் சாம்பிராணி தைல அபிஷேகம் நடைபெறும். இந்நிலையில் தமிழ் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு இன்று தோனியப்பர் உமாமகேஸ்வரி தாயாருக்கு தைலக்காப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்

error: Content is protected !!