India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று(ஏப்ரல்.14) மாலை 7 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று IMD தெரிவித்துள்ளது. அந்தவகையில் தேனி, தென்காசி, குமரி, நெல்லை, விருதுநகர் உட்பட 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே பொதுமக்கள், குழந்தைகள் பாதுகாப்பாக வெளியில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. *நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
சித்திரை மாதம் என்பது சூரிய பகவான் தனது ஓராண்டு பயணத்தை நிறைவு செய்து, மீண்டும் புதிய பயணத்தை துவங்கும் நாளாகும். விசுவாவசு வருடம் சூரிய ஆதிக்கத்தில் இருப்பதால் சிவதலங்களுக்கு செல்லவும். இலையில் அறுசுவை உணவுகள் நிறைந்திருக்க வேண்டும். நெய் வேத்தியமாக பால் சார்ந்த இனிப்புகளை வைக்கலாம். மாலையில் அருகே உள்ள கோவிலுக்கு சென்று இந்த வருடத்தின் முதல் நாளை தொடங்கலாம். அனைவருக்கும் Share செய்யுங்கள்
சித்திரை மாதம் என்பது சூரிய பகவான் தனது ஓராண்டு பயணத்தை நிறைவு செய்து, மீண்டும் புதிய பயணத்தை துவங்கும் நாளாகும். விசுவாவசு வருடம் சூரிய ஆதிக்கத்தில் இருப்பதால் சிவதலங்களுக்கு செல்லவும். இலையில் அறுசுவை உணவுகள் நிறைந்திருக்க வேண்டும். நெய் வேத்தியமாக பால் சார்ந்த இனிப்புகளை வைக்கலாம். மாலையில் அருகே உள்ள கோவிலுக்கு சென்று இந்த வருடத்தின் முதல் நாளை தொடங்கலாம். அனைவருக்கும் Share செய்யுங்கள்
கரூர் மாவட்டத்தில் அஞ்சல் துறை சார்பில் ஆதார் அட்டை பயோமெட்ரிக் புதுப்பிக்கும் சிறப்பு முகாம் நாளை(ஏப்.15) முதல் தொடங்குவதாக கரூர் அஞ்சல் கோட்டை கண்காணிப்பாளர் தமிழனின் இன்று தெரிவித்துள்ளார் . ஆதார் விதிமுறைப்படி 5 மற்றும் 15 வயது கடந்த பள்ளி மாணவர்கள் தங்களின் கைரேகை மற்றும் தற்போது புகைப்படம் உள்ளிட்ட பயோமெட்ரிக் தகவல்களை புதுப்பிக்க அவசியமானது என அறிவுறுத்தப்பட்டுள்ளது .
“விசுவாவசு”என்பது தமிழ் புத்தாண்டு ஆண்டின் பெயர்களில் ஒரு பெயராகும். இது தமிழ் புத்தாண்டு வருடங்களில் அறுபது பெயர்களில் 39வது பெயராகவும், சூரிய பகவானின் ஆதிக்கம் பெற்ற ஆண்டாகவும், சுபமான ஆண்டாகவும், கருதப்படுகிறது. இந்த ஆண்டில் சிவ வழிபாட்டையும், சூரிய வழிபாட்டையும் மக்கள் தினமும் செய்வது சிறப்பாக இருக்கும் என்பது சித்தர்களின் அருள்வாக்கு.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கடத்தூர் அர்ச்சுனேஸ்வரர் ஆலயத்திற்கு ஆயிரம் ஆண்டு கால வரலாறு உள்ளதாம் . அமராவதி நதிக்கரையில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் வழிபட்டால் திருமணத் தடை நீங்கும் எனப் புராணம் சொல்கிறது. ஆம்,குலோத்துங்க சோழன் மகளின் மாங்கல்ய தோஷத்தை தீர்த்து வைத்த தலம் இது என நம்பப்படுகிறது. பிரச்னை உள்ள நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுமலை இமயமலையின் ஒரு பகுதி என ஒரு நம்பிக்கை உண்டு. இந்தப் பகுதியில் மிக உயரமான மலை என்றால் அது வெள்ளி மலை தான். இந்த மலையின் உச்சியில் சுமார் 500 ஆண்டுகள் பழமையான ஒரு சிவலிங்கம் உள்ளது. இந்த சிவலிங்கத்தைக் காண அரைமணி நேரம் நடந்து செல்ல வேண்டும். அப்படி நடந்து சென்றால் கைலாயத்தையே கண்ட ஒரு அனுபவம் உங்களுக்கு கிட்டும். உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
ராமேஸ்வரத்தில் சுற்றி பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள் ▶️தனுஷ்கோடி ▶️ஓல்ட் சர்ச் மற்றும் ரயில் நிலையம் ▶️கோதண்டராமர் கோவில் ▶️அப்துல் கலாம் ஐயா வீடு▶️ஐந்து முகம் ஆஞ்சநேயர் ▶️ராமர் தீர்த்தம் ▶️சீதா தீர்த்தம் ▶️லக்ஷ்மணன் தீர்த்தம் ▶️ராமர் பாதம் ▶️அப்துல் கலாம் நினைவகம் ▶️வில்லூண்டி தீர்த்தம் ▶️பாம்பன் பாலம் *நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க (ஏதேனும் விடுப்பட்ட இடத்தை நீங்கள் கூறலாம்)
தூத்துக்குடி எம்.பி கனிமொழி இன்று (ஏப்.14) முகநூல் பக்கத்தில்; ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை கீற்றாக, ஜனநாயக உரிமைக்காக ஓங்கி ஒலித்த குரலாக, சாதி மத ஆதிக்க சக்திகளுக்கு சிம்ம சொப்பனமாக என்றென்றும் சுடர்விட்டு ஒளிரும் அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் இன்று. அவர் உயர்த்தி பிடித்த அடிப்படை கட்டுமானங்களை அழிக்கத் துடிக்கும் பாசிச சக்திகளிடம் இருந்து நாட்டைப் பாதுகாக்க உறுதியேற்போம் என பதிவிட்டுள்ளார்.
நாமக்கல் நகர நகை வியாபாரிகள் சங்கம் நிர்ணயித்த இன்றைய (14.04.2025) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு. ஒரு கிராம் விலை ரூ.8,755-க்கும், ஆபரண தங்கம் 1 பவுன் ரூ.70,040-க்கும், முத்திரை காசு 1 பவுன் ரூ.70,500-க்கும், முத்திரை காசு 1 கிராம் ரூ.8,813-க்கும், விற்பனை வெள்ளி ஒரு கிராம் ரூ.104-க்கு விற்பனையாகிறது.
Sorry, no posts matched your criteria.