India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி மாவட்டத்தில் உதகை, கோத்தகிரி, கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் 30 காலிபணியிடங்கள் உள்ளன. மாத ஊதியமாக ரூ.15,000 வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. இந்த பணிகளுக்காக இங்கு கிளிக் செய்து உடனே விண்ணப்பிக்கலாம். இதை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள் .
தமிழகத்தில் பல திட்டங்கள் மக்கள் நன்மைக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலொன்றுதான் மக்களுக்கு இலவசம் (ம) குறைந்த விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம். ஆனால் சில காரணங்களால் மக்களுக்கு சரிவர பொருட்களை வழங்காமலும், கடையினை திறக்காமலும் ஊழியர்கள் செயல்படுவதாக புகார் எழுகிறது. இதுபோன்ற சம்பவம் உங்கள் பகுதியில் நடைபெறும் பட்சத்தில் 1800 425 5901 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க.
விழுப்புரம் நகரில் இன்று(ஏப்.14) பிற்பகல் தவெக கட்சி சார்பில் அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினர். தேசத் தியாகி அண்ணல் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு விழுப்புரம் தெற்கு இளைஞரணி பொருளாளர் ஹரி தலைமை தாங்கினார். பின் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
நாமக்கல், பெரியமணலியில் நாகேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் 1000 ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகிறது. நாகம் நேரில் வந்து இங்குள்ள மூலவரை வழிபட்டதால் இத்தல இறைவன் நாகேஸ்வரர் என அழைக்கப்படுவது சிறப்பு. இங்கு வந்து சிவனாரை வழிபட்டுப் பிரார்த்திக்க, நாக தோஷம் முதலான அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. மேலும், திருமணத் தடை நீங்க, கணவன் மனைவி ஒற்றுமையாக வாழ வேண்டிக் கொள்கின்றனர்.
▶️மாவட்ட ஆட்சித் தலைவர் 0424-2262444▶️காவல்துறை கண்காணிப்பாளர் 0424-2260100 ▶️ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் 0424-2258312▶️ மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் 0424-2260455 ▶️மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்-0424-2252052 ▶️மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் 0424-2260255 மிக முக்கிய எண்களான இவற்றை உங்களது நண்பர்களுக்கு பகிரவும்.
விழுப்புரத்தில் கஞ்சா மற்றும் புகையிலை கடத்துவோரை கண்காணிக்க அமைக்கப்பட்ட தனி படைகளை எஸ்.பி. டீம் ரகசியமாக கண்காணித்து வருகின்றது. கஞ்சா குட்கா உள்ளிட்ட பொருட்கள் இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களின் கைகளிலும் சுலபமாக வந்து சேர்கிறது. தற்போது விழுப்புரத்தில் எல்லா காவல் நிலையங்களிலும் எஸ்.பி., சரவணன் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கஞ்சா புழக்கம் குறையும் என கூறுகின்றனர்.
இன்று (14-4-25)காஞ்சிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளான சமத்துவ நாள் விழாவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி 1181 ஆதி திராவிட மற்றும் பழங்குடியின பயனாளிகளுக்கு 24.80 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் உடன் இருந்தார்.
கோவையில் வெளியூர் செல்லும் பொதுமக்கள், தங்கள் வீடுகள் பூட்டப்பட்டிருந்தால், காவல் நிலையங்களில் தெரிவிக்கலாம். திருட்டை தடுக்க கூடுதல் கவனம் செலுத்தப்படும் என காவல் ஆணையர் உறுதி அளித்துள்ளார். பொதுமக்கள் தங்கள் முகவரி மற்றும் வீடு எத்தனை நாட்களுக்குப் பூட்டி இருக்கும் போன்ற தகவல்களை அருகில் உள்ள காவல் நிலையத்திலோ, 81900-00100 எண்ணிலோ தெரிவிக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது. இதை SHARE பண்ணுங்க!
பாவபுண்ணிய கணக்குகளை எழுதும் சித்திரபுத்திரன் நாயனாருக்கு காஞ்சிபுரத்தையடுத்து தேனி மாவட்டம் கோடாங்கிபட்டியில் மட்டுமே தனிக்கோவில் உள்ளது. சித்ரா பௌர்ணமி அன்று மட்டுமே இங்கு திருவிழா கொண்டாடப்படுகிறது. சித்திரபுத்திர நாயனார் சித்ரா பௌர்ணமி அன்று பிறந்ததினால் அன்றைய தினத்தில் இங்கு வந்து வழிபட்டால் பாவங்கள் குறையும் என்பது ஐதீகம். இந்த கோவில் பற்றி தெரியாத நபர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
புதுச்சேரி இணையவழி போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் நேற்று வெளியிட்ட செய்தியில், இணையவழி குற்றங்களில் 85 சதவீதம் ஆன்லைனில் பணம் இழப்பது சம்பந்தமாக நடக்கிறது. அத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள், வங்கி கணக்கு மற்றும் சிம் கார்டு வாங்கி கொடுப்பவர்களை சிக்க வைத்துவிட்டு அவர்கள் தப்பித்து கொள்கின்றனர். எனவே பொதுமக்கள் யாரும் முன்பின் தெரியாதவர்களுக்கு சிம் கார்டு வாங்கி தர வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.