India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமநாதபுரத்தில் எம்ஜிஆர் ஜெயலலிதா காலத்தில் இருந்து அதிமுகவின் மூத்த நிர்வாகியாக செயல்பட்டு வருபவர் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா. இந்நிலையில் பாஜகவுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவிலிருந்து விலகுவதாக வெளியாகும் செய்தியில் உண்மை இல்லை என விளக்கம் அளித்துள்ளார். மேலும் எம்ஜிஆரின் தீவிர விசுவாசியான இவர் அவரின் பிறப்பு,இறப்பு தினங்களில் சுவரொட்டி ஒட்டி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
தமிழக முன்னாள் அமைச்சரும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக முன்னாள் செயலாளருமான என்.சுரேஷ் ராஜன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தலைவராக நியமிக்கப்படுகிறார். இவர் நாளை பதவி பொறுப்பேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் சென்னை புறப்பட்டுச் சென்றார். அவருடன் அவரது ஆதரவாளர்களும் சென்னை புறப்பட்டுச் சென்றனர்.
சேலம் மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 14) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர், வாழப்பாடி ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்கள் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு மாவட்ட கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு -நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் இப்பொழுதே வெளியிட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் தினம்தோறும் நாமக்கல் மாவட்ட காவல் துறை சார்பில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் நியமிக்கப்படுவார்கள்.அதன் அடிப்படையில் இன்று நாமக்கல்-கபிலன், 949817868, ராசிபுரம் நடராஜன், 9442242611, திருச்செங்கோடு சிவகுமார் மற்றும் வேலூர் பிரபாவதி 98427 35374 ஆகியோர் இன்று இரவு பணியில் ஈடுபடுகின்றனர்.
கடலூர் மாவட்டம் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இரவு நேரங்களில் லாரி மற்றும் கனரக வாகன ஓட்டுநர்கள் வாகனம் ஓட்டி செல்லும் சமயத்தில் ஓய்வு எடுக்கும் சூழ்நிலை வரும் பட்சத்தில் நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள் நிறுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட இடம், சுங்கச்சாவடி மற்றும் காவல் நிலையம் அருகில் நிறுத்தி ஓய்வு எடுக்க வேண்டும் என கடலூர் மாவட்ட காவல் துறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (14-04-2025) நிலவரப்படி முட்டை பண்ணை கொள்முதல் விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல் ரூ.4.15 காசுகளாக நீடித்து வருகிறது. கடந்த (ஏப்ரல் 9) முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.4.15 ஆக நிர்ணயப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஐந்து நாட்களாக முட்டை விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல், அதே விலையில் நீடித்து வருகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் இன்று (14.04.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள். இரவு நேர குற்றங்களைத் தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, எங்களது இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யவும் என காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று (14.04.2025) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள, உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள கவலைகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
Sorry, no posts matched your criteria.