Tamilnadu

News April 15, 2025

தேனி:டீ மாஸ்டருக்கு கத்திக்குத்து

image

உத்தமபாளையத்தில் உள்ள ஒர் டீ கடையில் இதே ஊரை சேர்ந்த ராஜா, சுப்ரமணியன் என இருவர் வேலை செய்கின்றனர். இதில் ராஜாவை, கடையின் உரிமையாளர் வேலையை விட்டு நிறுத்தியுள்ளார். இதற்கு சுப்ரமணியன் தான் காரணம் என நினைத்த ராஜா, நேற்று காலை சுப்ரமணியனை கத்தியால் முகம், கழுத்து, கை உள்ளிட்ட பல பகுதிகளில் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். சுப்ரமணியனை தேனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

News April 15, 2025

சிவகங்கை: கொலையில் 4 பேர் கைது

image

சிவகங்கை மாவட்டம் இருப்பான்பூச்சி கிராமத்தில் சரத்குமார் அவரது நண்பர் சிவசங்கருடன் பேசிக்கொண்டிருந்தார். அங்கு டூவீலரில் வந்த மர்ம கும்பல் இருவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினர். இதில் சரத்குமார் பலியானார். சிவசங்கர் காயமடைந்தார். கொலை செய்யப்பட்ட சரத்குமாரின் உறவினர்கள் நேற்று மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய விக்ரம், ஜனா, தவசகுடிபிரபு, சிவா 4 பேரை போலீசார் கைது கைது செய்தனர்.

News April 15, 2025

விழுப்புரத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

image

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 17ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. வேலை வாய்ப்பு முகாமில் 20க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று, 500க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளன. இதில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை பங்கேற்கலாம். செம்ம வாய்ப்பு மிஸ் பண்ணிராதீங்க. ஷேர் பண்ணுங்க.

News April 15, 2025

திருப்பூர்: கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை!

image

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ராபித்ரா பிஸ்வால் (47). இவர், திருப்பூர், பொங்கலூர் மீனாட்சிவலசில் உள்ள, பனியன் கம்பனியில், வேலை செய்து வருகிறார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால், மனைவி அவரை பிரிந்து சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த ராபித்ரா பிஸ்வால், மருதுரையான் வலசில் உள்ள, 50 அடி ஆழ கிணற்றில் குதித்து, தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவிநாசிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 15, 2025

கார் மோதி சாலையோரம் நின்ற சிறுவன்,சிறுமி பலி

image

சாயல்குடியை சேர்ந்தவர் சொர்ணராஜன். இவரது மகள் சண்முகப்பிரியா 13. அவரது உறவினர் மகன் ஹரி சூர்யா பிரகாஷ்.14 இருவரும் பத்ரகாளியம்மன் கோயில் விழாவில் கலந்து கொண்டு வீடு திரும்ப கிழக்கு கடற்கரை சாலையோரம் ஒரமாக நின்றிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒர் கார் இருவர் மீதும் மோதியது சம்பவ இடத்தில் சண்முகப்பிரியா உயிரிழந்தார்.சிறுவன் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News April 15, 2025

கள்ளக்காதலியை எரித்து கொன்ற ஆட்டோ ஓட்டுனரும் உயிரிழப்பு

image

எர்ணாவூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த நுாரிஷாவுக்கும்(42) திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான டில்லிபாபுக்கும்(47) தகாத உறவு இருந்துள்ளது. இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் டில்லிபாபு திடீரென பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டதுடன், நுாரிஷாவையும் கட்டி பிடித்துக் கொண்டார். இதில் கடந்த 11ம் தேதி நுாரிஷா உயிரிழந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று டில்லிபாபுவும் பலியானார்.

News April 15, 2025

மருத்துவர் ரூபத்தில் வந்திறங்கிய கடவுள்

image

ஜோலார்பேட்டை சின்னபொன்னேரியை சேர்ந்தவர் சிவா – லலிதா தம்பதியின் 7 வயது மகள் கனிஸ்ரீ வீட்டில் விளையாடி கொண்டிருக்கும் போது தவறுதலாக 5 ருபாய் நாணயத்தை விழுங்கியுள்ளார். மயக்கமடைந்த சிறுமியை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர் தீபானந்தன் விடுப்பில் இருந்த போதும் மருத்துவமனைக்கு வந்து எண்டோஸ்கோபி மூலம் சிறுமியை காப்பாற்றியுள்ளார். தன்னலமற்ற அவரை பாராட்டலாமே!.

News April 15, 2025

குற்றவாளிகளை 2 மணி நேரத்தில் கைது செய்த போலீஸ்

image

பழனி, புது தாராபுரம் ரோட்டில் நேற்று முன்தினம் ஒருவரை, மூன்று நபர்கள் சேர்ந்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து புகார் அளித்த 2 மணி நேரத்திற்குள், குற்றவாளிகள் மூவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். காவல்துறையின் இந்த மின்னல் வேக நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

News April 15, 2025

ஊட்டி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

ஊட்டி வட்டத்தில் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தில் கள ஆய்வு நடைபெற உள்ளது. இதில், மாவட்ட கலெக்டர் மற்றும் அனைத்து மாவட்ட உயர்நிலை அலுவலர்கள் வருவாய் கிராமங்கள் வாரியாக கள ஆய்வில் ஈடுபடுகிறார்கள். அரசு அலுவலகங்களை ஆய்வு செய்கிறார்கள், ஆய்வு மேற்கொள்ளும் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, நடவடிக்கை மேற்கொள்கிறார்கள். பொதுமக்கள் தங்கள் குறைகளுக்கான மனுக்களை அளிக்கலாம்.

News April 15, 2025

புதுவை ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்

image

புதுச்சேரி மாநிலத்தில் தொடர்ந்து அரசு அலுவலகங்களில் அலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அந்த வகையில் நேற்று துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு அலைபேசி மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து போலீசார் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து இதுபோல் நடப்பதால் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

error: Content is protected !!