India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் அரியலூர் கோட்டம் சார்பாக இன்று (ஏப்.15) காலை 11 மணியளவில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம், அரியலூரில் ராஜாஜி நகர் காலேஜ் ரோட்டில் அமைந்துள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது. இதில் மின்நுகர்வோர், விவசாயிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்கள் மூலம் மேற்பார்வை பொறியாளரிடம் தெரிவித்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற இட்லியை விட காஞ்சிபுரம் இட்லி முற்றிலும் வித்தியாசமானது. பல்லவர்கள் காலத்திலிருந்தே காஞ்சிபுரம் கோயில்களில் வழங்கப்பட்ட இந்த இட்லியின் சிறப்பம்சம் இதில் சேர்க்கப்படும் பொருள்களும் அதன் தயாரிப்பு முறையும் தான். நீளமான உருளை வடிவ மூங்கில் அச்சினுள் மந்தாரை இலையைப் பரப்பி, அரிசி, உளுந்து, சீரகம், வெந்தயம், மிளகு போன்ற பொருள்கள் சேர்த்து அரைக்கப்பட்ட மாவை ஊற்றி, வேகவைப்பது தான் காஞ்சிபுரம் இட்லி.
வேலூர் லாங்கு பஜாரில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்வதாக வேலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ஒரு துணிக்கடையில் அருகே பதுக்கி வைத்து மது விற்பனை செய்து கொண்டி ருந்த வேலூர் கொசப்பேட்டை பகுதியை சேர்ந்த வினோத்குமாரை (36) போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த மாதத்திற்கான ‘உங்களை தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாமானது வேப்பந்தட்டை தாலுகாவிற்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் நாளை (ஏப்.16) நடைபெறவுள்ளது. அதன்படி வேப்பந்தட்டை தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களில் நாளை மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைத்து மாவட்ட முதல் நிலை அலுவலர்கள் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு, மக்களின் குறைகளை கேட்டறிந்தும் மனுக்களை பெறவுள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.
செம்பனார்கோவில் அருகே மேட்டிருப்பு மைதானத்தில் விஜய் என்பவர் குடிசையமைத்து மனைவி, மகன் ராகவன்(1½) உடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மக்களுக்கு இலவச உணவு வழங்க வந்த சரக்கு வாகனம் குழந்தை ராகவன் மீது மோதியது. படுகாயமடைந்த குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து வேன் டிரைவர் ரஜினியை(40) போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டில் மன்சூர் அலி என்பவரின் துணிக்கடையில் கடந்த 7ம் தேதி ரூ.50,000 திருடப்பட்டது. மேலும் அருகில் இருந்த கடைகளிலும் பணம் திருடப்பட்டது. இதில் சென்னையை சேர்ந்த அருண், வெள்ளை செல்வா, ராகவேந்திரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தப்ப முயன்ற ராகவேந்திரன், வெள்ளை செல்வா இருவரும் தவறி விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. சிகிச்சைக்குப் பின், மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
பாசார் கிராமத்தில் உள்ள சித்தேரி ஏரியில் நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சிறுமிகள் குளிப்பதற்காக சென்றனர். இந்நிலையில், எதிர்பாராத விதமாக ஏரியில் குளித்துக் கொண்டிருந்த சிவசக்தி(11), ஸ்வேதா(12) ஆகியோர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இது சம்பவம் தொடர்பாக ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விடுமுறையில் குழந்தைகளை கண்காணியுங்கள் பெற்றோர்களே.
ஈரோடு, கோபி அருகே கரட்டிபளையத்தை சேர்ந்தவர் கணேசன் (70). கூலித்தொழிலாளியான இவர், நேற்று சத்தி சாலையில், போடிசின்னம்பாளையம் அருகே சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்று, கணேசன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர், சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கடத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
பெருந்தரக்குடியைச் சேர்ந்த வக்கீல் ஆனந்தன்(38) என்பவரது வீட்டிற்கு அருகில் வசித்து வருபவர் பாலகிருஷ்ணன்(28). இவர் ஆனந்தன் வீட்டிற்கு அருகே தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். இதனை ஆனந்தன் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணன், ஆனந்தனை தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக ஆனந்தன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார், பாலகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தி.மலையில் சிவலிங்க மேனியில் சூரிய ஒளி படும் அற்புத நிகழ்வு நிகழ்ந்துள்ளது. தி.மலை கிரிவலப் பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலை சன்னதியில், சிவலிங்க திருமேனியை சூரிய பகவான் வணங்குவதாக சொல்லப்படும் ஐதீகம். இந்நிலையில் நேற்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இந்நிகழ்வு நடந்தேறியது பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் இந்நிகழ்வை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர். ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.