Tamilnadu

News April 15, 2025

நாமக்கல்லில் கறிக்கோழி விலை திடீர் விலை சரிவு

image

நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், நேற்று நடந்தது. அதில் முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதையடுத்து, 415 காசுக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஒரு கிலோ 85 ரூபாய்க்கு விற்ற முட்டைக்கோழி விலையை, எவ்வித மாற்றமும் செய்யாமல், அதே விலை நிர்ணயம் செய்யப்பட்டது. கறிக்கோழி ரூ.10 குறைந்து ரூ.86 ரூபாய்க்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

News April 15, 2025

விஷச்சாராய வழக்கு 3 மாதத்தில் முடிக்கப்படும்- சிபிஐ

image

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு இன்னும் 3 மாதத்தில் முடிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய குற்றவாளிகளான தமோதிரன், கன்னுகுட்டி ஆகியோர் ஜாமின் வழங்க மனுதாக்கல் செய்திருந்த நிலையில், ஜாமீன் வழங்கக்கூடாது எனவும் சிபிஐ கூறியுள்ளது. மேலும், வழக்கில் எத்தனை பேர் விசாரணையில் உள்ளார்கள் என்பதை தெரிவிக்க சிபிஐக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

News April 15, 2025

தீயணைப்பு நிலையத்தில் தீ தொண்டு வார விழா

image

அருப்புக்கோட்டை தீயணைப்பு மீட்பு பணி நிலையத்தில் ‌தீ தொண்டு வார விழா அனுசரிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் ராமராஜ் தலைமையில் தீ தொண்டு வார விழாவின் ஒரு பகுதியாக நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வீர மரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த வாரம் முழுவதும் தீ விபத்து தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என தீயணைப்பு நிலைய அலுவலர் இன்று தெரிவித்தார்.

News April 15, 2025

அனைத்திலும் இந்தி திணிப்பு – சு. வெங்கடேசன் காட்டம்!

image

மதுரை எம்பி சு. வெங்கடேசன் இன்று (ஏப்.15) அவரது X தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஆங்கில வழி பாடநூல்களின் தலைப்புகள் எல்லாம் இந்தி. ஆங்கிலத்தில் கடிதம் எழுதினால் அமைச்சர்களின் பதில்கள் இந்தி. NCERT தொடங்கி எம்பிக்களுக்கு எழுதப்படும் பதில் வரை நாள்தோறும் இந்தித் திணிப்பு. இனிமேல் எடப்பாடியார் என்பதை இந்தியில்தான் நயினார் நாகேந்திரன் எழுதுவாரா? ” என கேள்வி எழுப்பியுள்ளார்.

News April 15, 2025

கரூரில் மழை பெய்யப் போகிறதாம் குடை முக்கியம்

image

கடலோர ஆந்திரபிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தின் ஒரு இடங்களிலும், கனமான மழையும் லேசான மழையும் மற்றும் கரூர் மாவட்டங்களில் பல பகுதியில் இன்று (ஏப்ரல் 15) இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 15, 2025

கோடை காலத்தில் குடிக்க வேண்டிய பானங்கள்

image

குமரி மக்களே கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க இந்த பானங்களை மட்டும் அருந்துங்கள். இளநீர், மோர், பானகம், தர்ப்பூசணி, வெள்ளரி, கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, அன்னாசி, நுங்கு போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களை எடுத்துக் கொண்டால் உடல் நீர்ச்சத்தோடு ஆரோக்கியமாக இருக்கும். தேவையில்லாமல் உடலுக்கு கேடு விளைவிக்கும் குளிர் பானங்களை அருந்த வேண்டாம். ஷேர் பண்ணுங்க.

News April 15, 2025

காதலித்து விட்டு மறுப்பு சொன்ன காதலியை வெட்டிய காதலன் கைது

image

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருளியுள்ள கற்குடிபகுதி சேர்ந்த திருமலை குமார் தெற்கு மேட்டை சேர்ந்த ஒரு இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் திடீரென காதலி உன்னை பிடிக்கவில்லை என்று கூறியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த காதலன் திருமலை குமார் காதலியை வீடு தேடி சென்று அறிவாளால் வெட்டினார். அரிவாளால் வெட்டிய காதலனை போலீசார் கைது செய்தனர். 

News April 15, 2025

தபால் நிலையங்களில் ஒன்றரை லட்சம் சேமிப்பு கணக்கு தொடக்கம்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த நிதி ஆண்டில் ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 771 சேமிப்பு கணக்குகள் தபால் நிலையங்கள் மூலமாக தொடங்கப்பட்டுள்ளது. அடல் பென்ஷன் திட்டம், பிரதம மந்திரி ஜீவன் ஜோதி திட்டம் உள்ளிட்ட காப்பீட்டு திட்டங்களில் 8394 சேமிப்பு கணக்குகளை வாடிக்கையாளர்கள் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

News April 15, 2025

நெல்லையில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்.

image

நெல்லையில் வரும் ஏப்.17 வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. நெல்லை மாநகர பகுதியில்
மத்திய அரசு அங்கீகாரம் பெற்று இயங்கி வரும் பிரபல நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிய நேர்முகத் தேர்வு நடக்க உள்ளது. அரசு துறையில் ஓய்வு பெற்ற,
வங்கி அலுவலர்கள் இல்லத்தரசிகள்
கல்வி மற்றும் தனியார்த்துறை யில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதி :SSLC, +2, Any Degree, தொடர்பு கொள்ளவும்: 73587 39939

News April 15, 2025

தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விபரம்

image

தேனி மாவட்ட அணைகளின் (ஏப்ரல் 15) நீர்மட்டம்: வைகை அணை: 56.30 (71) அடி, வரத்து: இல்லை, திறப்பு: 72  க.அடி, பெரியாறு அணை: 113.90 (142) அடி, வரத்து: 105 க.அடி, திறப்பு: 105 க.அடி, மஞ்சளார் அணை: 34.50 (57) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை, சோத்துப்பாறை அணை: 94.95 (126.28) அடி, வரத்து: 5.08 க.அடி, திறப்பு: 3 க.அடி, சண்முகா நதி அணை: 38.50 (52.55) அடி, வரத்து: 8 க.அடி, திறப்பு: இல்லை.

error: Content is protected !!