Tamilnadu

News April 15, 2025

தீராத நோய்களை தீர்க்கும் கொங்கு நாட்டு கோயில்!

image

சூலூரில் வைத்தியநாதர் கோயில் அமைந்துள்ளது. பல நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த இத்தல ஈசன் சுயம்பு மூர்த்தமாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார். கரிகாலச் சோழன் தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்குதற் பொருட்டு, கொங்கு நாட்டில் பல சிவாலயங்களை எழுப்பி திருப்பணி செய்தான். அவற்றுள் இக்கோயிலும் ஒன்று என்கிறது சோழனின் பூர்வ பட்டயம். இங்கு வந்து பூஜை செய்தால் தீராத பிணிகள் கூட தீரும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. SHARE IT!

News April 15, 2025

திருவள்ளூர்: கடன், நோய் தீர்க்கும் திருக்கோயில்

image

திருவள்ளூர் மாவட்ட வட எல்லையில் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணிகை மலை அமைத்துள்ளது. அங்கு வீற்றிருக்கும் முருகனை தணிகாசலம் என்று பக்தர்கள் வழிபடுகின்றனர். இந்த கோவிலில் வந்த முடி காணிக்கை செய்தால் எதிரிகள் தொல்லை, கடன், நோயிலிருந்து விடுபடலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. *எதிரிகள், கடன், நோய்களில் பாதிக்கப்பட்டிருக்கும் உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு இதை ஷேர் செய்யவும்*

News April 15, 2025

மதுரை அரசு அலுவர்களின் தொடர்பு எண்கள்

image

மதுரையில் உள்ள முக்கிய அரசு அலுவலர்களின் தொடர்பு எண்கள்
1.மாவட்ட வருவாய் அலுவலர் – 0452-2532106
2.மாவட்ட வழங்கல் அலுவலா் -0452-2546125
3.உதவி ஆணையா் (கலால்) – 0452-2531718
4.வருவாய் கோட்டாட்சியா் -0452-2530644
5.உதவி இயக்குநா் -0452-2525099
6. தனி துணை ஆட்சியா் – 0452-2521260
உங்கள் நண்பர்ளுக்கு ஷேர் செய்யவும்

News April 15, 2025

கரூரில் இலவச கூடைப் பந்து பயிற்சி !

image

கரூர் மாநகராட்சி மற்றும் கரூர் கூடைப்பந்து கழகம் இணைந்து நடத்தும் கோடைகால இலவச கூடைப்பந்து பயிற்சி முகாம் இன்று(ஏப்.14) முதல் மே.15ஆம் தேதி வரை கரூர் மாவட்ட திருவள்ளுவர் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் 6 – 18 வயது உட்பட்ட வீரர் , வீராங்கனைகள் கலந்து கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 989497960 என்கிற எண்ணை அணுகவும். பயனடைவோருக்கு SHARE பண்ணுங்க!

News April 15, 2025

தேனி: வேலை இல்லாத நபர்களுக்கு உதவித்தொகை

image

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, 31.03.2025 அன்றைய தேதிப்படி ஐந்தாண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ,அரசால் உதவித்தொகை பெற விண்ணப்பம் வரவேற்பு. அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பதிவுதாரர்கள் <>இங்கு கிளிக் <<>>செய்து  விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து,விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார். உடனே ஷேர் செய்யவும்

News April 15, 2025

புதுவை மக்களுக்கு மழை எச்சரிக்கை

image

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில், நாளை(ஏப்.16) முதல் வரும் ஏப்.21ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் 30 முதல் 40 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

News April 15, 2025

நெல்லை: பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்

image

நெல்லை பி.எஸ்.என்.எல் பொது மேலாளர் கிருஷ்ணகுமார் இன்று வெளியிட்ட செய்தியில், வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தும் நோக்கில் ஏப்ரல்.1 முதல் ஏப்ரல் 30 வரை “வாடிக்கையாளர் சேவை மாதம்” எனும் நிகழ்வை தொடங்கியுள்ளது. வாடிக்கையாளர் குறை தீர்க்கும் முகாம் சங்கரன்கோயில் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் 17.4.2025 அன்றுநடைபெறும். புதிய FTTH இணைப்பு சிம் கார்டுகள் மற்றும் குறைகளை நிவர்த்தி செய்யலாம் என கூறியுள்ளார்.*ஷேர்

News April 15, 2025

நாகையில் சத்துணவு பணியிடங்களுக்கு வேலை, ஆட்சியர் அழைப்பு

image

நாகை மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சமையல் உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் என நாகை ஆட்சியர் பா.ஆகாஷ் தெரிவித்துள்ளார். காலியாக உள்ள 93 சமையல் உதவியாளர் பணியிடங்களில் தொகுப்பூதியத்தில் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான கல்வித் தகுதி 10ம் வகுப்பில் தேர்ச்சி அல்லது தோல்வி, தமிழ் சரளமாக பேச வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. Share செய்யுங்கள்

News April 15, 2025

திண்டுக்கல்: கடன் தீர்க்கும் விநாயகர் கோயில்

image

திண்டுக்கல் மத்தியப் பகுதியில் அமைந்துள்ளது 108 விநாயகர் கோயில். இந்தக் கோயிலில் 16 அடி உயர கஜமுக விநாயகரும் உள்ளார். இங்குள்ள 108 விநாயகர்களை தரிசித்தால் வாழ்வில் 108 நன்மைகள் பெறலாம் என்கிறார்கள் பக்தர்கள். மேலும், இந்தக் கோயிலில் உள்ள ஆகர்ஷண பைரவரை வழிபட்டால் கடன் பிரச்னை தீரும் என்பது நம்பிக்கை. பிரச்னை உள்ள நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News April 15, 2025

பெரம்பலூர்: அக்னிவீர் பிரிவுக்கு ஆள் சேர்ப்பு தேதி நீட்டிப்பு

image

திருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்னி வீரர்களின் பல்வேறு பிரிவுகளுக்கான ஆள்சேர்ப்புக்கான பதிவு ஏப்ரல் 25-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் திருச்சி, , அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 16 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW.

error: Content is protected !!