Tamilnadu

News April 15, 2025

மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம்

image

சிவகங்கை மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்புற சமுதாய அமைப்புகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் மணிமேகலை விருதிற்கு வரும் 25.04.2025-ஆம் தேதிக்குள் அந்தந்த வட்டாரங்களிலுள்ள குறிப்பிட்ட அலகுகளில் தகுதியின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கூடுதல் விபரங்களுக்கு திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, சிவகங்கை என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

News April 15, 2025

செல்வம் அருளும் கோடி கொடுத்த நாதர்!

image

ஒரு கோடி சித்தர்கள் வழிபட்ட அதிசய சிவாலயம் ஒன்று விழுப்புரம் மாவட்டம் ஒரு கோடி என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது.ஒரு கோடி சித்தர்கள் சிவபெருமானை வழிபட்ட பகுதி என்பதால், இந்த ஊருக்கு ‘ஒருகோடி’ என பெயர் வந்தது என்கிறார்கள். கோடி கொடுத்த நாதரை வழிபட்டால், கோடி கோடியாய் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. தொழில், வியாபாரத்தில் சிரமப்படும் உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

News April 15, 2025

வேலூரில் இலங்கை மன்னனுக்கு நினைவிடம்

image

இந்திய சுதந்திர போராட்டத்துடன் நெருங்கிய தொடர்புடைய வேலூர் இலங்கையோடும் தொடர்பு கொண்டுள்ளது. இலங்கையின் கண்டி பகுதியை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் விக்ரமராச சிங்கன் வேலூர் கோட்டையில் பிரிட்டிஷால் சிறை வைக்கப்பட்டு உயிரிழந்தார். மன்னர் விக்ரமராச சிங்கன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இங்கு நினைவிடம் உள்ளது. இலங்கை சுதந்திர போரிலும் தொடர்பு கொண்ட வேலூர் பற்றிய தங்களை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க

News April 15, 2025

26 துணை அஞ்சலகங்களில் ஆதார் முகாம்

image

நாகை மற்றும் திருவாரூர் தலைமை அஞ்சலகங்கள் மற்றும் அதன் கீழ் இயங்கும் 26 துணை அஞ்சலகங்களிலும் ஆதார் திருத்த சிறப்பு முகாம் வருகிற 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஆதார் திருத்தம் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் வழங்கப்படுவதால் பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள நாகை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் ஹரிகிருஷ்ணன் கேட்டு கொண்டுள்ளார்.

News April 15, 2025

திருவண்ணாமலை: பல்வேறு நோய்கள் தீர்க்கும் கோவில்

image

திருவண்ணாமலை, படவேடு கிராமத்தில் ரேணுகாம்பாள் அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த அம்மன் கோவிலில் வேப்பிலை தண்ணீர் தீர்த்தமாக வழங்கப்படுகிறது. இதை வாங்கி உடலில் தெளித்தால் 3-5 நாட்களில் அம்மை நோய் விலகிவிடும். மேலும், திருமண வரம், குழந்தை வரம், கண்நோய், கண்பார்வைக்கும் இங்கு வழிப்பட்டால் எல்லாம் நிவர்தியாகும் என்பது ஐதீகம். *திருமணம்&குழந்தைவரம், அம்மை&கண்நோய் உள்ளவர்களுக்கு பகிரவும்*

News April 15, 2025

திருமணத் தடை நீக்கும் ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர்கோட்டையில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஸ்ரீபிரஹன்நாயகி சமேத அர்த்தநாரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. பிரம்மஹத்தி தோஷம் மற்றும் திருமணத் தடை உள்ளவர்கள், இந்த கோயிலின் மாடத்தில் உள்ள சுயம்பு வடிவமாக காட்சி அளிக்கும் அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டால் அனைத்து தோஷங்களும் நீங்கும். உடனடியாக திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க.

News April 15, 2025

கடலூர்: அக்னிவீர் பிரிவுக்கு ஆள் சேர்ப்பு தேதி நீட்டிப்பு

image

திருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்னி வீரர்களின் பல்வேறு பிரிவுகளுக்கான ஆள்சேர்ப்புக்கான பதிவு ஏப்ரல் 25-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நண்பர்களுக்கு Share செய்யுங்கள்

News April 15, 2025

நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு

image

நெல்லை மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளிலும் இனி மாணவர்களின் பைகளை சோதனை செய்ய நெல்லை மாவட்ட முதன்மை கல்வி துறை இன்று (ஏப்.15) உத்தரவிட்டுள்ளது. பாளையங்கோட்டை தனியார் பள்ளியில் மாணவர் மற்றும் ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு விழுந்த நிலையில் ஏற்கனவே அரசு பள்ளிகளில் சோதனை செய்யப்பட்டு வரும் நிலையில் இனி தனியார் பள்ளிகளிலும் சோதனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க

News April 15, 2025

தீராத நோய்களை தீர்க்கும் முத்துமாரியம்மன்

image

புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது இந்த சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் புதைந்து கிடந்து பூசாரி ஒருவரின்அருள்வாக்கின்படி தோன்றிய முத்து மாரியம்மனை வழிப்பட்டால் அனைவரது குறைகளையும் நீக்கி அருள் மாறிப் பொழிந்து அன்னை முத்துமாரி அம்மை நோய் கண்டவர்கள் குடும்பத்தில் யாரேனும் ஒருவர் வந்து தினமும் வழிபட அம்மை நோய் விரைவில் குணமடையும்.

News April 15, 2025

தொழில் பிரச்னைகளை தீர்க்கும் நிமிஷாம்பாள்

image

சென்னை சௌகார்பேட்டை காசி செட்டி தெருவில், பலருக்கும் தெரியாத அன்னை நிமிஷாம்பாள் கோவில் அமைந்துள்ளது. தமிழகத்தில் நிமிஷாம்பாளுக்கு இங்கு மட்டும் தான் கோவில் உள்ளது. இங்கு சென்று வழிப்பட்டால் தொழில் சார்ந்த பிரச்னைகள் நீங்கி, நஷ்டத்திலிருந்து மீண்டு வியாபாரம் லாபகரமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தொழில், வியாபாரத்தில் சிரமப்படும் உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

error: Content is protected !!