India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பள்ளிப்பாளையம் அருகே, வெடியரசம்பாளையம் பகுதியில் 2022ல் வயதான தம்பதியை கட்டிப்போட்டு 30 லட்சம் ரூபாயை சிலர் கொள்ளையடித்து சென்றனர். இந்த கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட கோபாலகிருஷ்ணன் ஜாமினில் வெளியே வந்த பிறகு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இவர் கமுதி பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற பள்ளிப்பாளையம் போலீசார், கோபாலகிருஷ்ணனை கைது செய்தனர்.
சேலம்: காடையாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம், (45). இவரது மனைவி வனிதா(45). இருவரும் நேற்று(ஆக.5) இரவு டூவீலரில் குப்பூர் அருகே காயாடைம்பட்டி நோக்கி சென்று கொடிருந்தனர்ண். சேலத்தில் இருந்து வந்த லாரி டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் லாரி சக்கரத்தில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே வனிதா பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திருச்சி, சேலம், நெல்லை மாநகரங்களில் தாழ்தள பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கும்பகோணம் கோட்டத்திற்கு உட்பட்ட திருச்சி மண்டலத்துக்கு 25 தாழ்தள பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளது. வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தகுதி சான்று பெற்றவுடன் இந்த பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஹையாத் நட்சத்திர விடுதியில் இன்று தொடங்கவிருந்த சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஹையாத் நட்சத்திர விடுதியில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது. விடுதியில் தங்கியிருந்த வீரர்கள் அனைவரும் பாதுக்காப்பாக வேறு இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் தொடர் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 27 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் நாகேந்திரன் உட்பட 17 பேர் குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி, அவர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் கைதான 27 பேரில் 17 பேர் மீது குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் சில மாவட்டங்களில் சோதனை ஓட்டமாக நடத்தப்பட்டது. இது நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது திருச்சி மாவட்டத்தில் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது. திருச்சி மாவட்டத்தில் 70,566 கார்டுதாரர்களுக்கு, 800 வாகனங்கள் மூலம் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக மாவட்ட கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியன் வங்கியின் அப்பரண்டிஸ் பயிற்சிக்கு 20 முதல் 25 வயதிற்குட்பட்ட பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.800, எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் ரூ.175 செலுத்த வேண்டும். வங்கியில் பயிற்சி பெற்று வங்கி பணியில் சேர இது ஒரு நல்ல வாய்ப்பு. வங்கி பணிக்கு செல்லும் கனவோடு தேர்வுக்கு தயாராகி வரும் உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
தமிழக அரசின் TN Rights திட்டத்தில் பணிபுரிய 25 காலிபணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. பட்டப்படிப்பு படித்தவர்கள் வேலையில் சேர விண்ணப்பிக்கலாம். 20,000 முதல் 1.25 லட்சம் வரை சம்பளம் . இத்திட்ட பணிகளுக்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 13ம் தேதி வரை பெறப்படுகிறது. இங்கு <
பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி அப்பரண்டிஸ் பயிற்சிக்கு அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்து 277 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.பயிற்சியின் போது 15,000 வரை ஊக்க தொகை வழங்கப்படும். ஆன்லைன் தேர்வு மற்றும் சென்னை, மதுரை, கோவை போன்ற இடங்களில் எழுத்து தேர்வு நடைபெறும். <
சங்கரன்கோவிலை சேர்ந்த கங்காதரன் ராஜபாளையத்தை தலைமையிடமாக வைத்து மரக்கார் பிரியாணி கடையின் கிளை உரிமம் தருவதாகவும், மாதம் ரூ.50,000 லாபம் பெறலாம் என தமிழகம், ஆந்திரா, கர்நாடகாவை சேர்ந்த 239 பேரிடம் ரூ.12 கோடி பெற்று மோசடி செய்து ஜூலை.7 அன்று சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது இவர் பொருளாதார குற்றத்தில் ஈடுபட்டதாக தமிழகத்திலேயே முதல் முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.