Tamilnadu

News April 15, 2025

நாமக்கல்லில் கறிக்கோழி விலையில் மாற்றம் இல்லை!

image

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ (உயிருடன்) ரூ.96-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று (ஏப்.14) நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், அதன் விலையில் ரூ.10 குறைக்கப்பட்டு ஒரு கிலோ ரூ.86 நிர்ணயிக்கப்பட்டது. இன்று (15.04.2025) நடைபெற்ற கூட்டத்தில் கறிக் கோழி விலை மாற்றம் செய்யவில்லை. இதனிடையே முட்டைக்கோழி கிலோ ரூ.85- ஆகவும் அவற்றின் விலைகளில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

News April 15, 2025

திருவள்ளூர் அருகே மின்சாரம் தாக்கி பலி

image

திருவள்ளூர், கனகம்மாசத்திரம் அருகே காவேரி ராஜபுரம் கிராமத்தில் நேற்று இரவு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த ஐந்து நபர்கள் முனிரத்தினம் என்பவரை டிரான்ஸ்பார்மரில் ஏறி பியூஸ் போடக் கூறியுள்ளனர். அப்போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். இதற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். *மின்சாரத்தை கையாளுவதை தவிர்க்கவும்*

News April 15, 2025

மதுரை மாவட்ட காவல்துறை ரோந்து பணி விவரம்

image

மதுரை மாவட்டத்தில் இன்று (ஏப்ரல். 15) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 15, 2025

தூத்துக்குடி மாவட்டம் உருவானது பற்றி தெரியுமா?

image

தூத்துக்குடி மாவட்டம் 1986ஆம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி உருவாக்கப்பட்டது. சிதம்பரனார் மாவட்டம் என்றழைக்கப்பட்டது.1997ம் ஆண்டு மாவட்டத்தின் தலைநகரான தூத்துக்குடியின் பெயரையே மாவட்டத்தின் பெயராகக் கொண்டு தூத்துக்குடி மாவட்டம் என பெயர் சூட்டப்பட்டது. 2008 ஆகஸ்ட் 5ம் தேதி தமிழகத்தில் 10வது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு முதல் மேயராக கஸ்தூரி தங்கம் தமிழக முதல்வர் கருணாநிதியால் நியமிக்கப்பட்டார்.

News April 15, 2025

கடலூரில் சைபர் கிரைம் தொடர்பான விழிப்புணர்வு

image

கடலூர் எஸ்.பி உத்தரவின்படி கடலூர் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின்படி கடலூர் CK பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு சுமார் 25 பேருக்கு சைபர் கிரைம் தொடர்பாக விழிப்புணர்வு மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. OTP தொடர்பான குற்றங்கள், தனிநபர் கடன், டிஜிட்டல் அரெஸ்ட், LOAN APPS, SCHOOL SCHOLARSHIP SCAMS பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

News April 15, 2025

நாமக்கல் காவல் துறை சார்பில் வாகன ஏலம்!

image

நாமக்கல் மாவட்ட மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள 23 வாகனங்கள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. வாகனங்களை ஏலம் எடுப்பவர்கள் முன்பணமாக ரூ. 5 ஆயிரத்தை, 17ம் தேதி தேதி காலை 9 மணி முதல் 10 மணிக்குள், நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் செலுத்த வேண்டும். நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர்களை அனுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 15, 2025

மழை வரவழைக்கும் அதிசய கோயில்

image

ஓசூரில் குன்றின் மேல் அமைத்துள்ளது ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் மலைக்கோயில். இங்கு பிரகாரத்தில் தண்ணீர் தொட்டி போன்ற அமைப்பின் மத்தியில் உள்ள ஜலகண்டேசுவரர் லிங்கம் சிறப்பு வாய்ந்தது. மழை இல்லாத காலத்தில் தண்ணீர் தொட்டியில் தண்ணீர் ஊற்றி சிறப்பு பூஜை நடத்துவார்கள்.தொடர்ந்து 16 நாட்கள் நடைபெறும் இந்த பூஜையில் தொட்டியில் உள்ள தண்ணீர் வற்றாமல் இருந்தால் மழை வரும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க

News April 15, 2025

21 தலைமுறை பாவங்களை நீக்கும் கோயில்!

image

சேலம் மாவட்டம் மேச்சேரியில் மிகவும் சக்தி வாய்ந்த பத்ரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு அருள்பாலிக்கும் அம்மனை தரிசனம் செய்வதால், 21 தலைமுறையில் செய்த பாவங்கள், நோய்கள் போன்றவை நீங்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. மேலும் பில்லி, சூனியம், ஏவல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், இக்கோயிலுக்கு வர அது அவர்களை விட்டு விலகுமாம். இதை நோயால் அவதிப்படும் உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க

News April 15, 2025

நாகர்கோவிலில் மாநில அளவிலான வேலைவாய்ப்பு முகாம்

image

தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாநில அளவிலான வேலைவாய்ப்பு முகாமானது நாளை(16.04.2025) அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாகர்கோவிலில் நடைபெற உள்ளது. இதில் 30க்கும் அதிகமான, புகழ்மிக்க நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவைப்படும் தகுந்த நபர்களை வேலைக்கு தேர்வு செய்ய இருக்கிறார்கள் என இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க

News April 15, 2025

17-ல் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

image

தூத்துக்குடி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் ஆகியவை இணைந்து மாதந்தோறும் சிறிய அளவில் தனியார் வேலை வாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்த மாதத்திற்கான வேலைவாய்ப்பு முகாம் கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வைத்து இம்மாதம் 17ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை வேலை நாடுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு  ஆட்சியர் இளம்பகவத் கேட்டுக் கொண்டுள்ளார்.

error: Content is protected !!