India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (15.04.2025) ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகளின் எண்கள் மேல் உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
திருக்குவளை வட்டத்தில் 16.4.2025 அன்று உங்கள் ஊரில் உங்கள் முதல்வர் திட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி நாளை திருக்குவளைக்கு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வருகை தருகிறார். அப்போது திருக்குவளை வட்டாட்சியர் அலுவலகத்தில் அவரை சந்தித்து பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்து மனுக்கள் கொடுத்து பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை பயணிகள் கவனிக்க; கோடை விடுமுறையையொட்டி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரயில்வே குறிப்பில் திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் ரயில் சேவை மே 11 முதல் ஜூன் 1 வரையும், ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் நாகர்கோவில் – தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் மே 11 முதல் ஜூன் 1 ஆம் தேதி வரையும், திருவனந்தபுரம் – தாம்பரம் ரயில் மே 11 முதல் ஜூன் 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் : 9884098100
சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுத்திடவும், ஏதேனும் விபத்துக்கள், அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றிடவும், இரவு முழுதும் அந்தந்த பகுதி காவல் ஆய்வாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி ஏப்ரல்15 ஆம் தேதியான இன்று இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டது.
இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அவசர சூழ்நிலைகளில் பொதுமக்கள் இதைப் பயன்படுத்தி உடனடி உதவி பெறலாம். பாதுகாப்பை வலுப்படுத்தும் இந்த நடவடிக்கையால், சட்டம் ஒழுங்கு மேலும் உறுதியடையும். அவசர நேரத்தில் காவல் என்னை அழைக்கவும் 9884098100.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
கோடைக்காலத்தை முன்னிட்டு, வரும் ஏப்.19- ஆம் தேதி பெங்களூருவில் இருந்து கொல்லத்திற்கும், ஏப்.20- ஆம் தேதி கொல்லத்தில் இருந்து பெங்களூருவுக்கும் கோடைக்கால சிறப்பு ரயில்கள் (06585/06586) இயக்கப்படுகின்றன. சிறப்பு ரயில்கள் சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக இயக்கப்படுகின்றன. சேலம் ரயில் நிலையத்தில் சுமார் 10 நிமிடங்கள் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் இருந்து இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் உதவி காவல் ஆய்வாளர்களின் இன்றைய (ஏப்ரல் 15) பெயர் பட்டியல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. ஆபத்து நேரங்களில் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்களை பொதுமக்கள் அழைக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. *இரவு தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்*
நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (15-04-2025) நிலவரப்படி முட்டை பண்ணை கொள்முதல் விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல் ரூ.4.15 காசுகளாக நீடித்து வருகிறது. கடந்த (ஏப்ரல் 9) முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.4.15 ஆக நிர்ணயப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஐந்து நாட்களாக முட்டை விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல், அதே விலையில் நீடித்து வருகிறது.
Sorry, no posts matched your criteria.