Tamilnadu

News August 22, 2025

முந்திரி ஆலை தொழிலாளர்களுக்கு 27% போனஸ்!

image

முந்திரி ஆலை தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்குவது தொடர்பாக C.I.T.U. தொழிற்சங்கத்திற்கும், முந்திரி ஆலை நிர்வாகிகளுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடந்தது. இதில் உடன்பாடு ஏற்பட்டு, கடந்தாண்டு போன்று இந்த ஆண்டும் 20% போனஸ், 2% ஊக்கத்தொகை, 5% விடுப்பு கால ஊதியம் என மொத்தம் 27% போனஸ் வழங்க நிர்வாகத்தினர் முன் வந்தனர் என T.N. முந்திரி பருப்பு C.I.T.U தொழிற்சங்க பொதுச்செயலாளர் சிங்காரன் கூறினார்.

News August 22, 2025

ஈரோடில் டி.என்.பி.எஸ்.சி இலவச பயிற்சி வகுப்பு

image

ஈரோடு தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் திருவாசகம் வெளியிட்ட தகவலில், டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கு தயாராகும் அனைவருக்கும் இலவச பயிற்சி வகுப்பு மற்றும் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. வரும் 24ம் தேதி முதல் தொடர்ந்து மூன்று வார ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும். பதிவு செய்பவர்களுக்கு இடம் தெரிவிக்கப்படும். பயிற்சியுடன் பாடக்குறிப்பு, போட்டித் தேர்வு தொகுப்பும் இலவசமாக வழங்கப்படும்.

News August 22, 2025

திடீரென ஸ்தம்பித்த GST சாலை

image

சென்னை, பல்லாவரம் மேம்பாலத் தடுப்புகளில் கல்லூரி பேருந்து மோதியதால் ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், பல்லாவரம் மேம்பாலம் தற்காலிகமாக ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டு, பல்லாவரத்தில் இருந்து விமான நிலையம் செல்லும் மார்க்கத்தில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில் தாம்பரம் நோக்கிச் செல்லும் வாகனங்கள் மேம்பாலத்தின் கீழே மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர்.

News August 22, 2025

விவசாயிகளுக்கு முதற்கட்டமாக 2000 டன் உரங்கள் தயார்!

image

என்.சி.எம்.எஸ்.,மேலாண்மை இயக்குனர் முத்துகுமார் கூறுகையில்; மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையால், தேயிலை தோட்டங்களை பராமரிக்க நல்ல சீதோஷ்ண நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது,விவசாயிகளுக்கு, 10க்கும் மேற்பட்ட வகையான உரம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 2000 டன் உரம் பெறப்பட்டு தட்டுப்பாடு இன்றி விவசாயிகளுக்கு கிடைக்கும் வகையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் விவசாயிகள் கூட்டுறவு நிறுவனத்தை அணுகலாம்.

News August 22, 2025

அஞ்சல்தலை சேகரிப்பு போட்டி அறிவிப்பு – ரூ.6000 உதவித்தொகை

image

மாணவர்களில் அஞ்சல்தலை சேகரிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் அஞ்சல் துறை தீன் தயாள் ஸ்பர்ஷ் யோஜனா திட்டம் செயல்படுத்துகிறது. இதற்கான போட்டி கோவில்பட்டியில் நடைபெறும் என அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பங்களை செப்.1க்குள் மதுரை தபால் துறைக்கு அனுப்ப வேண்டும். அதிக மதிப்பெண் பெறுவோருக்கு ரூ.6000 உதவித்தொகை வழங்கப்படும்.

News August 22, 2025

திருப்பூர்: பணியன் தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை

image

திருப்பூர்: மத்திய அரசு, பி.எப்.ல், பிரதம மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கர் என்ற புதிய திட்டம் தொடர்பாக தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க(சைமா) அரங்கில் நேற்று(ஆக.21) நடந்த கருத்தரங்கில், மைதிலி, ‘வருங்கால வைப்பு நிதித்திட்டத்தில், பதிவு செய்த நிறுவனங்களில் ஆக.1 முதல் வரும் 2027, ஜூலை 31 வரையிலான காலத்தில் புதிதாக பணியில் சேரும் தொழிலாளருக்கு ஊக்கத்தொகை தரப்படும்’ என்றார்.

News August 22, 2025

தூத்துக்குடி: ரூ.1.31,500 சம்பளத்தில் கோர்ட்டில் வேலை

image

தூத்துக்குடி மக்களே, தமிழக நீதிமன்றங்களில் ASSISTANT PROGRAMMER பணியிடங்களுக்கு 41 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கம்ப்யூட்டர் துறையில் டிகிரி முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். வரும் செப்.9க்குள் உயர்நீதிமன்ற இணையதள பக்கத்தில் <>லிங்க்<<>> விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ரூ.35,900 – ரூ.1,31,500 சம்பளத்தில் பணியமர்த்தப்படுவர். SHARE IT.

News August 22, 2025

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்!

image

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (22-08-2025) காலை நிலவரப்படி, கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை (உயிருடன்) கிலோ ரூ. 90-க்கும், முட்டை கோழி விலை கிலோ ரூ.99-க்கும் விற்பனையாகி வருகின்றது. அதேபோல் முட்டை கொள்முதல் விலை ரூ.5.00 ஆக நீடித்து வருகிறது. கடந்த நான்கு நாட்களாக முட்டை விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

News August 22, 2025

சிவகங்கை மக்களே மதுரை ஐகோர்டில் வேலை வேண்டுமா..!

image

சிவகங்கை மக்களே, மதுரை உயர்நீதிமன்றத்தில் ASSISTANT PROGRAMMER பணியிடங்களுக்கு 41 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கம்ப்யூட்டர் சார்ந்த ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். வரும் செப். 9க்குள்<> இங்கே க்ளிக் செய்து<<>> இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். எழுத்துத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும். டிகிரி முடித்து மதுரையிலே வேலை தேடும் நபர்களுக்கு SHARE செய்யவும்.

News August 22, 2025

ஈரோடு மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

image

ஈரோடு மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம், இன்று ஆக.,22/கீழ்கண்ட இடங்களில் நடைபெற உள்ளது. ஈரோடு மாநகராட்சி மண்டலம்-4(A.M.திருமண மண்டபம், செட்டிபாளையம்), புஞ்சை புளியம்பட்டி நகராட்சி(கே.வி.கே அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பு.புளியம்பட்டி), காஞ்சிக்கோயில் பேரூராட்சி(தங்கம் மஹால், காஞ்சிக்கோயில்), வெங்கம்பூர் பேரூராட்சி(திருமகள் திருமண மண்டபம், வெங்கம்பூர்).

error: Content is protected !!