Tamilnadu

News April 16, 2025

நடக்காத விதிமீறல்; வாகனங்களுக்கு அபராதம்

image

சென்னையில் சாலை விதிகளை முறையாக பின்பற்றி வாகனம் ஓட்டுவோருக்கும், விதிமீறலில் ஈடுபட்டதாக மொபைல் போன் எண்ணிற்கு அபராத ரசீது வருவது, ஓட்டுநர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சமீபத்தில், இத்தகைய மோசடியில் ஈடுபட்ட நான்கு பேர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்துள்ளோம் எனவும், இத்தகைய குளறுபடி இருந்தால், காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கலாம் என போலீசார் கூறியுள்ளனர். SHARE IT.

News April 16, 2025

கள்ளக்குறிச்சி: புதிய விதிமுறையால் ஏமாற்றம்

image

கள்ளக்குறிச்சியில் அரசு போக்குவரத்துக் கழகங்களில் 25 மண்டலங்களில் காலியாக உள்ள 3,274 டிரைவர், கண்டெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியானது. தற்போது புதிய விதிமுறையால் டிரைவர், கண்டெக்டர் பணிக்கு தனி, தனியாக விண்ணப்பிக்க முடியாது. இரண்டு லைசென்ஸ்களும் வைத்திருக்கும் நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பதால் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதக கூறுகின்றனர்.

News April 16, 2025

வாழ்வாதார உறுதிச் சான்றிதழை சமர்ப்பிக்க கடைசி நாள் அறிவிப்பு

image

புதுச்சேரி அரசு ஓய்வூதியதாரர்கள் 2025ஆம் ஆண்டிற்கான வாழ்வாதார உறுதிச் சான்றிதழை வரும் மே 2 முதல் 30ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இச்சான்றிதழைகருவூலகத்திற்கு நேரில் வந்தோ (அ) தபால் அலுவலக சேவையை பயன்படுத்துவதன் வாயிலாகவோ பதிவு செய்யலாம். 2025ஆம் ஆண்டிற்கான வாழ்வுறுதிச் சான்றிதழை 30.05.2025க்குள் சமர்ப்பிக்கத் தவறினால் மேற்கொண்டு ஓய்வூதியம் வழங்க இயலாது என DAT இயக்குனர் அறிவித்துள்ளார்.

News April 16, 2025

சமூக ஆர்வலர்களுக்கு பாராட்டு விழா

image

கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவை மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நீர் பாதுகாப்பில் சிறப்பாக செயல்படுபவர்களை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் இணைந்து பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட
உள்ளது. நீர் பாதுகாப்பில் செயல்படுபவர்களின் விவரங்கள் மாநகராட்சியின் ஒருங்கிணைந்த கட்டுப்பாடு மையத்திற்கு அனுப்புமாறு என்றார்

News April 16, 2025

சேலம் மாவட்ட விவசாயிகளின் கவனத்திற்கு!

image

“விலை ஆதரவு திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் பச்சைப்பயறு மற்றும் உளுந்து சாகுபடி செய்துள்ள விவசாயிகள் சேலம் மற்றும் மேச்சேரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை அணுகி பயன்பெறலாம்.விவசாயிகள் சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, வங்கி சேமிப்புக் கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்களுடன் விளைபொருட்களை விற்பனை செய்துகொள்ளலாம்” என சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News April 16, 2025

கோட்டகுப்பத்தில் இலங்கை அகதி விபத்தில் மரணம்

image

மரக்காணம் வட்டம், கீழ்புத்துப்பட்டு இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த முத்துக்குமார். கோட்டக்குப்பத்தை அடுத்த அனிச்சம்குப்பம் பகுதியில் சாலையில் நடந்து சென்றார். அப்போது, அங்கு புதுச்சேரி-சென்னை கிழக்கு கடற்கரை சாலையைக் கடக்க சென்னையிலிருந்து புதுச்சேரி நோக்கிச் சென்ற தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்து முத்துக்குமார் மீது மோதியதில் உயிரிழந்தார். கோட்டகுப்பம் போலீஸ் வழக்கு பதிவு.

News April 16, 2025

நில மோசடி: திருச்சி காவல்துறை எச்சரிக்கை

image

நில மோசடியை தடுக்கும் வகையில் திருச்சி மாவட்ட காவல்துறை இன்று விழிப்புணர்வு செய்தி வெளியிட்டுள்ளது. அதில், “ஒரு இடத்தை வாங்கும் முன் சொத்தின் உரிமைகள், வரிகள் மற்றும் ஏதேனும் பிரச்னைகள் இல்லை என்பதை உறுதிப்படுத்த <>அதிகாரபூர்வ இணையதளத்தில்<<>> ஆவணங்களை சரிபார்த்துக் கொள்ளவும். மேலும் நில மோசடியில் பாதிக்கப்படாமல் விழிப்புணர்வுடன் இருக்கவும்” கூறப்பட்டுள்ளது. இதனை உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..

News April 16, 2025

நாமக்கல்லில் இன்று  சிறப்பு ரயில் இயக்கம்

image

நாமக்கலில் இருந்து இன்று (புதன்) முதல் திங்கள் வரையிலான நாட்களில் காலை 8:30 மணிக்கு கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ செல்ல 20671 மதுரை – பெங்களூரூ வந்தே பாரத் ரயிலிலும், மாலை 5:25 மணிக்கு நாமக்கலில் இருந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை செல்ல 20672 பெங்களூரூ – மதுரை வந்தேபாரத் ரயிலிலும் டிக்கெட் இருப்பு விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.

News April 16, 2025

குறைகளை அனுப்ப தென்காசி எம்பி வேண்டுகோள்

image

தென்னக ரயில்வே வருடாந்திர ஆலோசனைக் கூட்டம் வரும் ஏப்ரல் கடைசி மாதத்தில் நடைபெற உள்ளது. தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மக்கள் ரயில்வே துறை சார்ந்த கோரிக்கைகள் மற்றும் கருத்துக்களை எனக்கு தொலைபேசி மற்றும் வாட்ஸ் அப் நம்பர் 6382081840 மூலமாக தெரிவிக்குமாறு தென்காசி எம்பி ராணி ஸ்ரீகுமார் தெரிவித்துள்ளார்

News April 16, 2025

லாரி டிரைவர் தற்கொலை-போலீசார் விசாரணை

image

உப்பிலியபுரத்தை அடுத்த நாகநல்லூரைச் சேர்ந்த லாரி டிரைவர் கண்ணன்(38) என்பவர் கடந்த சில வருடங்களாக கிட்னி பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில், மன அழுத்தத்தால் விஷம் குடித்ததாகவும், குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் வழியிலேயே உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!