India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகாசி பேருந்து நிலைய பகுதியில் உள்ள ஸ்ரீ துர்க்கை பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இன்று ஆடிமாதம் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு ஸ்ரீ வேப்பிலைக்காரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வேப்பிலையால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றதை தொடர்ந்து கூழ் காய்ச்சி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
பெரம்பலூர் போஸ்ட் ஆபீஸ் தெருவில் உள்ள ஒரு மருந்துக் கடை முன்பு சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் நேற்று இறந்து கிடந்தார். இதனைக் கண்ட அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து பெரம்பலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டிற்கான கலைத்திருவிழாப் போட்டிகள், அரசு பள்ளி மாணவர்கள் ஆகியோருக்கு “பசுமையும் பாரம்பரியமும்” என்ற தலைப்பில் 4-8-2025 முதல் நடைபெறவுள்ளது.
இதில் பள்ளி அளவிலான அனைத்து மாணவ, மாணவிகளையும் ஊக்கப்படுத்தி போட்டிகளில் பங்கு பெற பள்ளித் தலைமையாசிரியர்கள் தயார் செய்ய வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி தெரிவித்துள்ளார்.
சேலம்: மாநகர காவல் ஆணையாளர் அனில்குமார் கிரி இன்று(ஆக.5) வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிக்கையில், ’கிரிப்டோ கரன்சி சம்மந்தமாக பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணையில் உள்ளது. இதில், சிலர் கிரிப்டோ கரன்சிக்கும் இந்த வழக்கிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை எனக் கூறி கிரிப்டோ கரன்சி இணைய வலியுறுத்தி வருவதாக தெரிகிறது. வழக்கு நடைபெறுவதால் பொதுமக்கள் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம்’ எனக் கூறியுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் 15.07.2025 முதல் 02.08.2025 வரை நடைபெற்ற ’உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 37,012 கோரிக்கை மனுக்களும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கோரிக்கை விண்ணப்பமாக மொத்தம் 44,247 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன என சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், மாநில திட்டக்குழு ஆணையத்தால் கடந்த 1ம் தேதி நடத்தப்பட்ட கருத்தரங்கில் பூதப்பாண்டி அரசு மருத்துவனையில் வளமிகு வட்டார வளர்ச்சித்திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்பட்ட வளர்ச்சிப் பணிகளுக்கு சிறந்த நடைமுறைக்கான விருது (Best Practices Award) வழங்கப்பட்டது என்று கூறியுள்ளார்.
விழுப்புரம் மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை புக் செய்யலாம். ஷேர் பண்ணுங்க.
செங்கல்பட்டில் புதிய ரேஷன் அட்டை (மின்னணு கார்டு) வாங்க இனி அலைச்சல் தேவையில்லை. புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்கவும், புதிய ரேஷன் அட்டை விண்ணப்பத்தின் நிலை குறித்து அறியவும் தமிழ்நாடு அரசு ஆன்லைன் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. <
நெல்லையில் ஐடி ஊழியர் கவின் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி, குற்றவாளி சுர்ஜித்தின் தயார் கிருஷ்ணகுமாரிக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அவர், ஆகஸ்ட் 15க்குள் நெல்லை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில், புதிய ரேஷன் அட்டை (ஸ்மார்ட் கார்டு) வாங்க இனி அலைச்சல் தேவையில்லை. புதிய ரேஷன் அட்டைக்கு (ஸ்மார்ட் கார்டுக்கு) விண்ணப்பிக்கவும், புதிய ரேஷன் அட்டை விண்ணப்பத்தின் நிலை குறித்து அறியவும் தமிழ்நாடு அரசு ஆன்லைன் சேவையை வழங்கி வருகிறது. இந்த <
Sorry, no posts matched your criteria.