India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வருகின்ற ஆக.11-ந் தேதி காலை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், விரைவு போக்குவரத்து கழகம் மற்றும் பல முன்னணி தொழிற் நிறுவனங்கள் கலந்து கொண்டு ஐடிஐ பயிற்சி முடித்த மாணவர்களை அப்ரண்டிஸ் (தொழிற் பழகுநர்) பயிற்சிக்கு தேர்வு செய்ய உள்ளன. எனவே ஐடிஐ பயிற்சி முடித்த மாணவர்கள் இம்முகாமில் பங்கேற்று பயன் பெறுமாறு ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரம் – பனாரஸ் வாராந்திர அதிவேக விரைவு ரயில் இனி செவ்வாய்க்கிழமை தோறும் புதுகை ரயில் நிலையத்தில் இரண்டு நிமிடம் (அதிகாலை 3:33 மணிக்கு வந்து 3:35 மணிக்கு புறப்படும்) நின்று செல்லும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும், காரைக்குடிக்கு 2:58க்கு வந்து 3 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று (07.08.2025) முட்டை விலை சிறிய அளவில் உயர்வு கண்டுள்ளது. ஒரு முட்டைக்கு ₹4.55 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், 100 முப்படைகளுக்கான விலை ₹455 ஆக உள்ளது. கடந்த வாரத்தை ஒப்பிடும்போது விலையில் சுமார் 8% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விலை மாற்றம் கோழி பண்ணை உரிமையாளர்களுக்கு நல்வாழ்வை ஏற்படுத்தும் நிலையில், வியாபாரிகளும் விவசாயிகளும் சந்தோஷம் தெரிவித்துள்ளனர்.
புதுகை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் வரும் 9ம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை, வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னிலையில், பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. இதில் குடும்ப அட்டைதாரர்கள் கலந்து கொண்டு, பெயர் சேர்த்தல், நீக்கம், புதிய அட்டை பெறுவதற்கான விண்ணப்பங்கள், வழங்கப்பட உள்ளன. இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் அருணா கேட்டுக் கொண்டுள்ளார்.
குடிமங்கலத்தில் ssi சண்முகவேல் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளில் ஒருவராக கருதப்படும் மணிகண்டனை போலீசார் என்கவுண்டர் செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட இடத்திற்கு அழைத்து சென்ற போது, சரவணக்குமார் என்ற உதவி ஆய்வாளரை வெட்டி விட்டு தப்ப முயன்றபோது, போலீசார் சுட்டதில் சம்பவயிடத்திலேயே மணிகண்டன் பலியானார். உடுமலை அரசு மருத்துவமனைக்கு போலீசார் பரிசோதனைக்காக அழைத்து வந்துள்ளனர்.
திருப்பூர் குடிமங்கலம் பகுதியில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேல் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த மணிகண்டன் என்பவரை பிடித்த போலீசார், அவரை கொலை நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்து மணிகண்டன், காவல் ஆய்வாளர் ஒருவரை வெட்டுவிட்டு தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. பின்னர் போலீசார் மணிகண்டம் மீது துப்பாக்கிசூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருவள்ளூரில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம்/ ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் வேலைவாய்ப்பு முகாம் இன்று (ஆகஸ்ட் 7) நடைபெறவுள்ளது. இந்த முகாம், பட்டாபிராமில் உள்ள தருமமூர்த்தி இராவ் பகதூர் கலவல் கண்ணன் இந்துக் கல்லூரியில் காலை 9 மணிக்கு தொடங்கவுள்ளது. ITI, டிப்ளமோ, பொறியியல், செவிலியர்கள் & டிகிரி படித்தவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். உங்க பகுதியில் உள்ளவர்களுக்கு பகிர்ந்து தெரியப்படுத்துங்க
குமரிக்கு நண்பர்களாவோ, குடும்பமாகவோ சுற்றுலா செல்பவர்களா நீங்க.. இனிமே தங்குவதற்கு அதிக பணம் செலவழித்து LODGE தேடி அலைய வேண்டாம். உங்களுக்காகவே அரசு போக்குவரத்துத்துறையின் மூலம் பயணிகள் தங்கும் விடுதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு குறைந்தபட்சமாக சாதாரண அறைக்கு ரூ.280ம், டீலக்ஸ் A/C அறைக்கு ரூ.1500ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நம்பரை 94877 11020 SAVE பண்ணிக்கோங்க. *ஷேர்*
புதுச்சேரியில், யோகாசன சாம்பியன்ஷிப் 2025 போட்டி வரும் 10ம் தேதி லாஸ்பேட்டை இ.சி.ஆரில் உள்ள ஸ்ரீ ராஜராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டி, 10, 14, 18, 28, 35, 45 மற்றும் 55 வயதிற்கு உட்பட்டோர் பிரிவுகளில் நடக்க இருக்கிறது. இப்போட்டியில் பங்கேற்க <
ஆம்பூரில் உணவுத் திருவிழா, மரபு விளையாட்டு திருவிழா, மரபு விதைத் திருவிழா வரும் 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 – இரவு 8 வரை ஆம்பூர் இந்து மேல்நிலைப்பள்ளியில் நடைபெறயுள்ளது. இதில் திருப்பத்தூர் மாவட்ட பொது மக்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி இலவசம். மேலும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. இந்த week end-க்கு பிளான் ரெடி.
Sorry, no posts matched your criteria.