India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மே தினத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்ட நிலையில், நாளை திருக்காரவாசல் ஊராட்சியில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் கலந்து கொள்ள உள்ளார். கிராம சபை கூட்டங்களில் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல் மற்றும் இதரப் பொருட்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு -நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
ஜாமியா கல்வி அறக்கட்டளை மற்றும் சேலம் முஸ்லிம் கல்வி சங்கம் சார்பில் அனைத்து சமுதாய பெண்களுக்கான கட்டணமில்லா ஆங்கிலப் பேச்சு பயிற்சி மே 01- ஆம் தேதி சேலம் கோட்டை ஸ்டோக்ஸ் ஹாலில் நடைபெறுகிறது. காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை வகுப்புகள் நடைபெறும். கூடுதல் விவரங்களுக்கு 63826-67729, 94432-17286 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்புக் கொள்ளலாம்.
இன்று (ஏப்ரல். 30) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என்று காவல்துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
குமாரகோவில் தேசிய நெடுஞ்சாலையில் 2 சுற்றுலா வேன்கள் நேருக்கு வேன் மோதி விபத்துக்குள்ளானதில், டிரைவர் குழந்தைகள் உட்பட படுகாயமடைந்த 15பேர், ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு சிகிட்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், விபத்து குறித்து தக்கலை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (ஏப்ரல்- 30) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
✅ மெரினா கடற்கரை, சேப்பாக்கம்
✅ எலியட்ஸ் கடற்கரை, பெசன்ட் நகர்
✅ கோவளம் கடற்கரை, கோவளம்
✅ திருவான்மியூர் கடற்கரை, திருவான்மியூர்
✅ வி.ஜி.பி கோல்டன் கடற்கரை, ஈஞ்சபக்கம்
✅ நீலாங்கரை கடற்கரை
✅ Breezy கடற்கரை, வால்மீகி நகர்
✅ பட்டினம்பாக்கம் கடற்கரை
✅ மஹாபலிபுரம் கடற்கரை
உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணி இங்கெல்லாம் போலாம்னு கூப்பிடுங்க
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று ஏப்ரல் 30-ம் தேதி இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் வெளியாகியுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று ( 30.04.2025 ) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள். பொதுமக்கள் இரவு நேர அவசர உதவிக்காக இரவு பணியில் இருக்கும் காவலர்களை தொடர்பு கொள்ளலாம் என புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது
சென்னை போலீசாரின் “Knights on Night Rounds” (30.04.2025) இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும். பகிரவும்
Sorry, no posts matched your criteria.