Tamilnadu

News August 8, 2025

விழுப்புரம் மாவட்டத்திற்கு புதிய 4 வழி சாலை

image

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் – புதுச்சேரி இடையே 4 வழி சாலை அமைக்கப்படும் என பிரதமர் மோடி தலைமையில் இன்று (ஆக.8) டெல்லியில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.2,157 கோடி மதிப்பீட்டில் 4 வழி சாலை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

News August 8, 2025

நாமக்கல்: முட்டை விலை 5 பைசா உயர்வு

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 8) மாலை நாமக்கல் மண்டல என்இசிசி தலைவர் பொன்னி சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முட்டை விலை 5 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.60 பைசாவாக நிர்ணயிக்கப்பட்டது.

News August 8, 2025

சேலம் மாவட்டத்தில் போலி ஸ்காலர்ஷிப் மோசடி எச்சரிக்கை!

image

சேலம் மாவட்டத்தில் அறிமுகமில்லாதவர்கள் தொடர்பு கொண்டு, குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி QR குறியீட்டை ஸ்கேன் செய்து PIN எண்ணை சொல்லும் மோசடிகள் நடைபெறுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கி கணக்கிலிருந்து பணம் திருடப்படும் அபாயம் உள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆன்லைன் நிதி மோசடி புகார்களுக்கு 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

News August 8, 2025

தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர அவகாசம் நீட்டிப்பு

image

அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளர்கள் சேர்க்கைக்கு வரும் ஆக.31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் தெரிவித்துள்ளார். இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் மாத உதவித்தொகை ரூ‌.750, சீருடை, காலணி, பஸ் பாஸ் உள்ளிட்ட 10 வகையான சலுகைகள் வழங்கப்படுகிறது.

News August 8, 2025

சேலம் ரயில் பயணிகளின் கவனத்திற்கு!

image

வரும் ஆக.10- ஆம் தேதி அன்று சேலம் வழியாக செல்லும் ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் (13352), எர்ணாகுளம்-கேஎஸ்ஆர் பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் (12678) மாற்றுப் பாதையில் இயக்கப்படுவதால், கோவை ரயில் நிலையம் செல்லாது. மாறாக, போத்தனூர் ரயில் நிலையத்தில் நின்றுச் செல்லும், என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

News August 8, 2025

கடலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்கள் நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெற விருப்பமில்லை எனில் அவர்களது உரிமத்தினை விட்டுக்கொடுப்பது தொடர்பாக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை வலைதளத்தின் (www.tnpds.gov.in) மூலமாக குடும்ப அட்டையினை பொருளில்லா குடும்ப அட்டையாக வகைமாற்றம் செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

News August 8, 2025

நாமக்கல்: மத்திய அரசு வேலை: அரிய வாய்ப்பு!

image

இந்திய விமானப்படைக்கு அக்னிவீரர் பிரிவுக்கு, அக்னிவீரர் ஆட்சேர்ப்பு திரளணி தாம்பரம் விமானப்படை நிலையத்தில் வரும் செப்டம்பர் 2-ம் தேதி முதல் ஆண்களுக்கும் 5-ம் தேதி முதல் பெண்களுக்கும் நடைபெற உள்ளது. விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தை நேரிலோ அல்லது 04286-222260 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். மேலும் விபரங்ககுக்கு<> இங்க கிளிக்<<>> பண்ணுங்க.

News August 8, 2025

சிவகங்கை: அனைத்து சேவையும் ஒரே லிங்கில்..

image

சிவகங்கை மக்களே.. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். இந்த <>லிங்கை<<>> கிளிக் செய்து அனைத்து சேவையையும் இதிலே பெறலாம். மேலும், இந்த சேவையைப் பெற உதவி தேவைப்பட்டால் 9884924299 என்ற உதவி எண்ணை அழைக்கலாம். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். Share பண்ணுங்க.

News August 8, 2025

திருச்சி ரயில்வே கோட்டத்தில் ரூ.86 லட்சம் அபராதம் வசூல்

image

திருச்சி ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரயில் டிக்கெட் இன்றி பயணம் செய்தது, முன் பதிவு இல்லா டிக்கெட் வைத்துக் கொண்டு உயர்தர வகுப்புகளில் பயணம் செய்தது, அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக லக்கேஜ் எடுத்து செல்வது உள்ளிட்ட வகையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 17,065 பயணிகளிடம் இருந்து ரூ.86,30,076 அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக திருச்சி ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News August 8, 2025

கீரமங்கலத்தில் “அகல் விளக்கு திட்டம்” நாளை தொடக்கம்

image

கீரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு உடல்,நலம், சமூக ரீதியாக பல்வேறு இடையூறுகள் நேரடியாகவும் செல்போன் பயன்படுத்துவதன் மூலமாகவும் இணையதளம் வாயிலாகவும் ஏற்படுகிறது. இந்த பிரச்சனைகள் இருந்து விடுபட முடியாமல் சிலர் தவறான முடிவை எடுத்து விடுகின்றனர். இது போன்ற பிரச்சனை இருந்து மாணவிகளை மீட்டு அகல் விளக்கு திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி நாளை தொடக்கிவைகிறார்.

error: Content is protected !!