India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் இன்று (ஆக .09) காலை 10 மணியளவில் திருப்பத்தூர்- குரும்பர் தெரு, உடைய முத்தூர், நாட்றம்பள்ளி- கோனாபட்டு, வாணியம்பாடி- கிருஷ்ணாபுரம், ஆம்பூர்- பச்சகுப்பம் ஆகிய நியாய விலை கடைகளில் இந்த முகாம் நடைபெறுகிறது. குடும்ப அட்டையில் பெயர் நீக்கம், பெயர் சேர்த்தல், புதிய அட்டை விண்ணப்பித்தல் போன்ற சேவைகளை பெறலாம். ஷேர் பண்ணுங்க
திருச்சி மாவட்டத்தில் தொழிற்பழகுநர் (அப்ரண்டிஸ்) சேர்க்கை முகாம் வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி காலை 10 மணி அளவில், திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ளது. இதில் ஐ.டி.ஐ முடித்துவிட்டு இதுவரை தொழிற்பயிற்சி பெறாதவர்கள் கலந்து கொள்ளலாம். இதுதொடர்பான மேலும் விபரங்களுக்கு 0431-2553314 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை இளைஞர்களே, தமிழக சுற்றுசூழல் துறையில் புராஜக்ட் அசோசியேட், கணக்கு அதிகாரி, உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி, தட்டச்சு என பணிக்கேற்ற தகுதியுடையோர்<
நாமக்கல்: தமிழகம், புதுச்சேரியில் இருந்து இந்திய விமானப்படைக்கு ‘அக்னிவீரா்’ ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுக்கான ஆள்சேர்ப்பு முகாம், சென்னை தாம்பரம் விமானப்படை நிலையத்தில் செப். 2ஆம் தேதி முதல் ஆண்களுக்கும், 5ஆம் தேதி முதல் பெண்களுக்கும் நடைபெற உள்ளது. இதில், தகுதியுள்ள ஆண்கள், பெண்கள் பங்கேற்று பயனடையுமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தில் தான் கி.பி 949ல் முதலாம் பராந்தகனின் மகன் ராஜாதித்யனுக்கும், ராஷ்டிரகூடர்களின் கங்க இளவரசர் பூட்டுகனுக்கும் இடையே போர் ஏற்பட்டது. ஆதித்த கரிகாலனை போல வீரமிக்க சோழ இளவரசனான ராஜாதித்யன் இந்த போரில் வீரமரணம் அடைந்தான். இவரது வீரத்தை போற்றும் விதமாக தான் அரக்கோணம் CISF ஆட்சேர்ப்பு பயிற்சி மையம் ராஜாதித்ய சோழன் (RTC), தக்கோலம் என மறுபெயரிடப்பட்டது. ஷேர் பண்ணுங்க
மடப்புரம் அஜித் உயிரிழந்த வழக்கில், கார் சாவியை நீண்ட நேரம் கழித்து தன்னிடம் கொடுத்ததாக நிகிதா கூறியிருந்தார். மேலும் காரை வடகரை வரை அஜித்தும், அவர் நண்பரும் ஓட்டி வந்ததாக கூறப்பட்டது. இதில், சிபிஐ அதிகாரிகள் வடகரையில் விசாரணையை தொடங்கினர். CCTV காட்சிகளை ஆய்வு செய்ததில், நிகிதா தான் காரை ஓட்டி வந்ததும், பார்க்கிங்கை விட்டு கார் வெளியே செல்லவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சேலம் ஆகஸ்ட் 9 இன்றைய முக்கிய நிகழ்வுகள் ▶️ காலை 9:30 மணி தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் மாநாடு மெய்யனூர் ▶️காலை 11 மணி அரசு அனைத்து துறை எஸ்சி எஸ்டி பணியாளர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் கோட்டை மைதானம்▶️ காலை 11 மணி விவேகானந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நலன் காக்கும் மருத்துவ முகாம் இடங்கணசாலை▶️ மின்னாம்பள்ளி மகேந்திரா பொறியியல் கல்லூரியில் தனியார் துறையில் வேலைவாய்ப்பு முகாம், ஆகியவை நடைபெறுகிறது.
தி.மலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கியது. இன்று (ஆக.09) தி.மலை மாவட்டத்தில் கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே!. மற்றவர்களுக்கும் ஷேர் செய்து மழை நிலவரம் பற்றி தெரியப்படுத்துங்கள்.
பொன்னேரி கவரப்பேட்டை இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக 17 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி கடற்கரை- கும்மிடிப்பூண்டி (09.40, 12.40 மணி), மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் சூலுருபேட்டை(10.15, 12.10,1.05 மணி) , மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் கும்மிடிபூண்டி( 10.35, 11.35 மணி), சூலூர்பேட்டை – நெல்லூர் (3.50 மணி), மூர் மார்க்கெட் வளாகம் ஆவடி(11.40 மணி) <<17348126>>தொடர்ச்சி<<>>
கும்மிடிப்பூண்டி – சென்னை (10.45 மணி), கும்மிடிப்பூண்டி ( மதியம் 1, 3.15 மணி), சூலூர்பேட்டை (1.15, 3.10மணி ), கும்மிடிப்பூண்டி மூர் மார்க்கெட் ( 2.30 மணி) நெல்லூர் சூலூர்பேட்டை (மாலை 6.45) சூலூர்பேட்டை மூர் சந்தை (இரவு 9) ரயில்கள் ரத்து செய்யப்பட்டு, காலை 10:30 மூர் சந்தை – பொன்னேரி, காலை 11:35 மூர் சந்தை -மீஞ்சூர், மதியம் 12:40 கடற்கரை- பொன்னேரி தடத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது
Sorry, no posts matched your criteria.