Tamilnadu

News May 7, 2025

ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

image

பாணாவரம் அடுத்த கீழ்வீராணம் கிராமத்தைச் சேர்ந்த நித்தியானந்தம் என்பவரது மகன் நிஷாந்த் (6). இவரது உறவினர் ஆற்காட்டைச் சேர்ந்த தமிழ்வாணன் என்பவரது மகன் வீரவேல் (8), கோடை விடுமுறையை முன்னிட்டு நிஷாந்த் வீட்டுக்கு வந்திருந்தார். நேற்று சூரைக்குளம் ஏரியில் குளிக்க இருவரும் சென்றனர். அப்போது மீன்களைப் பார்க்க தண்ணீரில் இறங்கியபோது, ஆழமான பகுதிக்கு தண்ணீர் இழுத்து சென்றதால் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

News May 7, 2025

ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

image

பாணாவரம் அடுத்த கீழ்வீராணம் கிராமத்தைச் சேர்ந்த நித்தியானந்தம் என்பவரது மகன் நிஷாந்த் (6). இவரது உறவினர் ஆற்காட்டைச் சேர்ந்த தமிழ்வாணன் என்பவரது மகன் வீரவேல் (8), கோடை விடுமுறையை முன்னிட்டு நிஷாந்த் வீட்டுக்கு வந்திருந்தார். நேற்று சூரைக்குளம் ஏரியில் குளிக்க இருவரும் சென்றனர். அப்போது மீன்களைப் பார்க்க தண்ணீரில் இறங்கியபோது, ஆழமான பகுதிக்கு தண்ணீர் இழுத்து சென்றதால் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

News May 7, 2025

நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

image

திருப்பூரைச் சேர்ந்தவர் காசிநாதன். இவரது மகன் கமலேஷ் (14). வெள்ளகோவில் அருகே கள்ளமடை பகுதியில் உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் உறவினர்களுடன் சேர்ந்து அங்குள்ள செயல்படாத கல் குவாரிக்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது சிறுவன் கமலேஷ் நீரில் மூழ்கி உயிரிழந்தான். இது குறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News May 7, 2025

பெரம்பலூர்: டாஸ்மாக் விடுமுறை – ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று மே தினைத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின்(டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபான சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக் கூடங்கள் ஆகியவை இயங்க கூடாது. அவ்வாறு இயங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் கிரேஷ் பச்சாவ் அறிவித்துள்ளார்.

News May 7, 2025

தேனியில் இளைஞர் மர்ம மரணம்

image

கம்பம் பாரதியார் நகர் 4வது தெருவை சேர்ந்தவர் கெளதம் . இவரது வீட்டில் பேச்சு மூச்சு இன்றி மயங்கிய நிலையில் இருந்து உள்ளார். இவரை மீட்ட உறவினர்கள் கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்ட நிலையில் கெளதம் இறந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதனை தொடர்ந்து உடற்கூறு ஆய்வு அறைக்கு அனுப்பி வைத்து, கம்பம் தெற்கு போலீஸார் கெளதம் இறப்பு சம்பந்தமாக விசாரணை செய்து வருகின்றனர்.

News May 7, 2025

நாகர்கோவில் வருகிறார் துணை முதலமைச்சர்

image

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை (மே.2) குமரி மாவட்டம் வருகிறார். நாளை பிற்பகல் 3.30 மணிக்கு தூத்துக்குடி வரும் அவர் அங்கிருந்து கார் மூலம் நாகர்கோவில் வருகிறார். நாகர்கோவில் திமுக மாநில மீனவர் அணி செயலாளர் இல்ல திருமண விழாவில் அவர் கலந்து கொள்கிறார். இந்த விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ், உணவு ஆணையத் தலைவர் சுரேஷ் ராஜன் உட்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

News May 7, 2025

கஞ்சா விற்பனை மையமாக மாறுகிறதா கோவில்பட்டி?

image

கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவில்பட்டி மூப்பன்பட்டியில் போலீசார் 23 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். வேறு ஒரு இடத்தில் 1 கிலோ கஞ்சா பிடிபட்டது. நேற்று 22 கிலோ கஞ்சா பிடிபட்டுள்ளது. ஒடிசா போன்ற இடங்களில் இருந்து கடத்தி வரும் கஞ்சா கோவில்பட்டியில் இருந்து மற்ற பகுதிகளுக்கு பரிமாற்றம் செய்யப்படுவதாகவும் காவல்துறை நடவடிக்கை எடுத்து, ரோந்து மேற்கொள்ள கோரிக்கை.

News May 7, 2025

திருவள்ளூர் அருகே போலி மருத்துவர் கைது

image

திருவள்ளூர் மாவட்டம் நசரேத்பேட்டையை சேர்ந்த 9 வகுப்பு மட்டுமே படித்த எஸ்தர்(32) என்ற பெண் கிளினிக் நடத்தி மருத்துவம் பார்ப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, மருத்துவர் பாபு தலைமையில் அதிகாரிகள் அங்கு சோதனைக்கு சென்றனர். அப்போது ஒருவர் வயிறு வலி என நடித்தார். தொடர்ந்து, அவருக்கு ஊசி போட முயன்ற எஸ்தரை அதிகாரிகள் கைது செய்து, கிளினிக்கிற்கு சீல் வைத்தனர். *நண்பர்களுக்கு பகிர்ந்து உஷார் படுத்தவும்.

News May 7, 2025

குழந்தை இல்லா சோகம்; இளைஞர் தற்கொலை

image

விழுப்புரம் அருகே ஈச்சங்காடு கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகன் கார்த்திக்(27). அரசு போக்குவரத்து கழக தற்காலிக கண்டெக்டர். திருமணமாகி 5 ஆண்டுகள் கடந்தும் குழந்தை இல்லை. இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த கார்த்திக், தனது வீட்டு மேல்தள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். ”தற்கொலை எதற்கு தீர்வு அல்ல”

News May 7, 2025

‘அ’ வடிவில் நின்று விழிப்புணர்வு

image

காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலக வளாகத்தில், பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு ‘தமிழ் மணக்கும் வார’ விழா நடந்தது. இந்த விழாவிற்கு, காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு இணை பதிவாளர் ஜெயஸ்ரீ தலைமை வகித்தார். அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலைய பயிற்சியாளர்கள் ‘அ’ வடிவில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பல்வேறு போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு, மண்டல இணைப்பதிவாளர் பரிசு வழங்கினார்.

error: Content is protected !!