Tamilnadu

News August 22, 2025

அரசு ஐடிஐக்களில் சேர ஆக.31 கடைசி நாள்!

image

சேலம் மாவட்டத்தில் கோரிமேடு அரசு ஐடிஐ, மகளிர் ஐடிஐ, மேட்டூர் ஐடிஐ, கருமந்துறை பழங்குடியினர் ஐடிஐ என 4 அரசு ஐடிஐக்களில் 2025- 26ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க வரும் ஆக.31- ஆம் தேதி கடைசி நாளாகும். மாதந்தோறும் ரூபாய் 750 உதவித்தொகை, காலணி, சைக்கிள், சீருடை, வரைப்படக் கருவி, பேருந்து பாஸ் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளுடன் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.

News August 22, 2025

தி.மலையில் இனி அரசு ஆபீஸ் போக தேவையில்லை!

image

தி.மலை மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். <>இங்கு<<>> கிளிக் செய்து இன்று (ஆகஸ்ட் 22) தி,மலை ’உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்களை தெரிந்துகொள்ளுங்கள். ஷேர்!

News August 22, 2025

பெரம்பலூரில் இன்று சிறப்பு முகாம் – கலெக்டர்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெறாத மாணவர்கள் உயர்கல்வியில் சேர ஏதுவாக ‘உயர்வுக்கு படி’ முகாம் இன்று பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இதில் மாணவர்கள் உயிர்கல்வியில் சேரவும், எளிதாக கல்வி கடன் வழி வகை செய்து தரப்படும். எனவே இதனை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு பெரம்பலூர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News August 22, 2025

மயிலாடுதுறையில் இன்று வேலைவாய்ப்பு முகாம்

image

மயிலாடுதுறை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மயிலாடுதுறை யூனியன் கிளப்பில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. வேலை தேடும் இளைஞர்கள் தங்களது சுயவிவர அறிக்கை அசல் கல்வி சான்றிதழ்கள் ஆதார் அட்டை பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News August 22, 2025

கால்நடைப் பராமரிப்பு கடன் ரூபாய் 67.46 கோடியைத் தாண்டியது

image

சேலம் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் நடப்பாண்டில் கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 12,342 விவசாயிகளுக்கு ரூபாய் 67.46 கோடி கால்நடை பராமரிப்பு கடன் வழங்கப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்பு கடனாக கறவை மாடு ஒன்று பராமரிக்க ரூபாய் 14,000-ம், அதிகபட்சமாக இத்திட்டத்தில் ரூபாய் 2 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது, எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News August 22, 2025

இருசக்கர வாகன பராமரித்தல், பழுது நீக்குதல் இலவச பயிற்சி!

image

இந்தியன் வங்கி சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் சேலம் கொண்டலாம்பட்டி பைபாஸ் அருகில் உள்ள R.R திருமண மண்டபத்தில் இருசக்கர வாகனம் பராமரித்தல், பழுது நீக்குதல் இலவச பயிற்சி 30 நாட்கள் நடைபெறவுள்ளது. பயிற்சியில் சேர விரும்புபவர்கள் ஆக.30- க்கும் நேரில் வரவும். கூடுதல் விவரங்களுக்கு 0427 -2274478 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம்.

News August 22, 2025

தென்காசி: ரூ.96,000 சம்பளத்தில் கூட்டுறவு வங்கியில் பணி

image

தென்காசி மக்களே; தமிழ்நாடு கூட்டுறவு நிறுவனங்கள் / மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் 2513 (உதவியாளர் / மேற்பார்வையாளர் / எழுத்தர் / இளநிலை உதவியாளர்) பதவிகளை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஆக.29ம் தேதி மாலை 05.45 மணி வரை. விருப்பமுள்ளவர்கள் லிங்கில் <>கிளிக்<<>> செய்து அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும். *ஷேர் பண்ணுங்க

News August 22, 2025

தாம்பரம்: உடனடி தீர்வு எல்லாமே ஈஸி!

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் நடைபெறுகின்றன. இதில், சாதி சான்றிதழ், பட்டா மாற்றம், மகளிர் உரிமைத் தொகை, மருத்துவ காப்பீட்டு அட்டை, ஆதார், ரேஷன் அட்டை திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு அலுவலகங்களுக்கு அலையாமல், <>இந்த லிங்கில்<<>> கிளிக் செய்து சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்து தெரிந்துகொண்டு, நேரில் சென்று விண்ணப்பித்து பயன் பெறுங்கள். SHARE பண்ணுங்க.

News August 22, 2025

திருவள்ளூரில் வேலைவாய்ப்பு முகாம்.. மிஸ் பண்ணிடாதீங்க

image

திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் இன்று (ஆக. 22) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 10th, 12th, டிப்ளோமா மற்றும் ஐ.டி.ஐ படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். 25க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. <>இந்த <<>>லிங்கில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு இந்த 9488466468 எண்ணில் அழைக்கலாம். நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க

News August 22, 2025

ராம்நாட்டில் சிதைந்து கிடந்த ஆண் உடலால் பரபரப்பு!

image

ராமநாதபுரம்: சக்கரைகோட்டை ரயில்வே கேட் பகுதியில் நேற்று(ஆக.21) காலையில் ரயிலில் அடிபட்டு 50 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் முழுவதுமாக நசுங்கி, துண்டு துண்டாக முகம் சிதைந்து முற்றிலும் அடையாளம் காண முடியாத நிலையில் கிடந்தது. இறந்து கிடந்த நபர் யார்?, இது தற்கொலையா (அ) தவறி விழுந்தாரா? என்ற கோணத்தில் ரயில்வே போலீசார் மற்றும் கேணிக்கரை போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

error: Content is protected !!