India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் மாவட்டம் முழுவதிலும் தீபாவளி தினத்தன்று மாவட்ட காவல்துறை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது தீபாவளி அன்று மது அருந்தி வாகனம் ஓட்டியதாக 85 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் பொது இடங்களில் மது அருந்தியதாக 190 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் அக்.30 அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட விவசாயம் தொடர்பான மனுக்களுக்கு பதில் அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மழைக்கால பிரச்சனைகளை வாட்ஸ் அப்பில் தெரிவியுங்கள். மழை காலங்கள் மற்றும் புயல் வீசும் நேரங்களில் நிகழும் சம்பவங்களை அவ்வப்போது படம் பிடித்து அல்லது வீடியோவாக பதிவு செய்து 8300929401 என்ற whatsapp எண்ணில் தொடர்பு கொள்ளலாம். *தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க*
மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. சீர்காழி, திருவெண்காடு, குத்தாலம், செம்பனார்கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவலர்களின் நேரடி தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
சிவகாசி அருகே திருத்தங்கல் அருள்மிகு மீனாட்சி அம்பிகை சமேத அருள்மிகு கருநெல்லிநாத சுவாமி திருக்கோயில், அருள்மிகு பழனியாண்டவர் சன்னதி கந்தசஷ்டி திருக்கல்யாண விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான கந்த சஷ்டி திருக்கல்யாண விழா 31.10.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 7.45 மணியிலிருந்து 8.45 மணிக்குள் நடைபெற உள்ளது.
சென்னையில் இன்று (22.10.2025) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.
பெங்களூரு – ஓசூர் மெட்ரோ இணைப்புத் திட்டம் ‘தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமில்லை’ என கர்நாடக அரசிடம் BMRCL மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ நிர்வாகம், 25 kV AC மின் இழுவையை பயன்படுத்தி ஓசூர் – பொம்மசந்திரா வழித்தடத்தை இணைக்க முன்மொழிந்ததாக கூறப்படும் நிலையில், பெங்களூரு மெட்ரோ முழுவதும் 750V DC மின் இழுவை மூலம் இயங்குவதால் இணைப்புக்கு சாத்தியமில்லை என BMRCL கூறியுள்ளது.
மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை, பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் ராமேஸ்வரம் விவேகானந்தா மெட்ரிக். பள்ளியில் அக்.25 காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இதில் இருதயம், மகப்பேறு, மகளிர், நுரையீரல், நரம்பியல், குழந்தைகள் நலம், நீரிழிவு உள்பட பல்வேறு நோய் பாதித்தோருக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (22.10.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று(அக்.22) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.