Tamilnadu

News August 10, 2025

சிறப்பாக பணியாற்றிய தேனிக்கு விருது

image

தமிழகத்தில் வளர்ச்சியில் பின்தங்கிய (போக்கஸ் பிளாக்) எனும் 50 வட்டாரங்கள் மேம்பாட்டு திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டன. அதில் 3 ஆண்டுகளில் ரூ.5 கோடி செலவில் அடிப்படை வசதிகள் சிறப்பாக செய்து முடித்த தேனி மாவட்டத்திற்கான விருதை சென்னையில் நடந்த விழாவில் மாநில திட்டக்குழு செயல் துணைத் தலைவர் ஜெயரஞ்சனிடம் மாவட்ட ஊராட்சி அதிகாரிகள் பெற்றனர். அவர்களை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பாராட்டினார்.

News August 10, 2025

போதைக்கு எதிரான உறுதிமொழி கலெக்டர் தகவல்

image

நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பு: “போதை பொருள் இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில் பல்வேறு நடவடிக்கைகள் அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நெல்லை மாவட்டத்தில் பள்ளிகளிலும் அனைத்து வகை கல்லூரிகளிலும் மாணவர்களை உள்ளடக்கிய போதை பொருள் ஒழிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக 11ஆம் தேதி தமிழ்நாடு தின உறுதிமொழி எடுக்கப்படும்.

News August 10, 2025

மண்டபத்தில் 1000 கிலோ கடத்தல் சுக்கு பறிமுதல்

image

மண்டபம் கடற்கரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் தாரிக்அமீன் தலைமையில் காவலர்கள் சரவணன் முத்துக்குமார் ஆகியோர் வேதாளை கடற்பகுதியில் வாகன தணிக்கை செய்தனர். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்த போது, அதில் இலங்கைக்கு கடத்துவதற்காக 1000 கிலோ சுக்கு என்பது தெரிய வந்து, சரக்கு வாகனத்தையும், சுக்கு மூடைகளையும் நிலையம் கொண்டு வந்தனர். தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.

News August 10, 2025

நாகை அவுரி திடலில் இலவச கண் சிகிச்சை முகாம்

image

நாகை புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அவுரி திடலில் இன்று (ஆக.10) காலை 8 மணி முதல் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமனது லயன்ஸ் கிளப் மற்றும் தனியார் கண் மருத்துவமனை இணைந்து நடைபெற உள்ளது. இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News August 10, 2025

கடலூர்: ரத்தசோகை பரிசோதனை செய்ய 71 குழுக்கள்

image

கடலூர் மாவட்டத்தில் பொதுமக்களிடம் இரத்தசோகை பரிசோதனைக்காக மருத்துவர், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர், செவிலியர், சுகாதார ஆய்வாளர், கிராமப்புற மருத்துவ அலுவலர், மருந்தாளர் ஆகிய 6 நபர்களை கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது. மாவட்ட முழுவதும் மொத்தம் 71 குழுக்கள் உருவாக்கப்பட்டு, ஒரு குழுவின் மூலம் ஒரு வாரத்திற்கு 300 நபர்களை பரிசோதித்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News August 10, 2025

புதுச்சேரி: தமிழ்நாடு கல்வி கொள்கையை பின்பற்ற வேண்டும்

image

புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் சிவா இன்று வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் புதுச்சேரி மாணவர்களின் எதிர்காலம் தழைக்க மீண்டும் தமிழ்நாடு கல்விக் கொள்கையை புதுச்சேரி அரசு பின்பற்ற வேண்டும் என்றும் இல்லையேல் மக்கள் திரள் போராட்டத்தை தி.மு.கழகம் முன்னெடுக்க நேரிடும் என்றும் புதுச்சேரி அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சிவா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News August 10, 2025

பல்கலைக்கழக சான்றிதழ் எழுத்து தேர்வு; ஆட்சியர் ஆய்வு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் பகுதி நேர நாட்டுப்புற கலை பயிற்சி மையத்தில், கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் கரகாட்டம், சிலம்பாட்டம் மற்றும் தப்பாட்டம் ஆகிய கலைஞர்களுக்கான பல்கலைக்கழக சான்றிதழ் எழுத்து தேர்வு நேற்று (ஆக.9) நடைபெற்றது. அதனை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார். உடன் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News August 10, 2025

அரியலூர் மாவட்டத்தில் ரோந்து பணி செல்லும் காவலர்கள் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை குறைக்கும் வகையில், அரியலூர் மாவட்டம் முழுவதும் தினம்தோறும், அரியலூர் மாவட்ட காவல் துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றைய (ஆகஸ்ட் 9) ரோந்துப் பணி செல்லக்கூடிய காவலர்களின் தொடர்பு எண் மாவட்ட காவல்துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளது. எனவே அவசரகால உதவிக்கு தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 10, 2025

விழுப்புரத்தில் இன்று மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்

image

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டம் அவலூர்பேட்டை ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் இன்று (ஆக.10) காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை விழுப்புரம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், அவலூர்பேட்டை ஊராட்சி மன்றம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. சுற்றுப் பகுதியில் உள்ள பொதுமக்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 10, 2025

காங்கிரஸ் புதிய நிர்வாகிகளை வாழ்த்திய எம்.பி

image

சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் வட்டார, நகர, பேரூராட்சி தலைவர்களுக்கான நியமன கடிதத்தை நேற்று (ஆக.09) காரைக்குடியில் சிவகங்கை எம்.பி.கார்த்தி ப.சிதம்பரம் நிர்வாகிகள் இடம் வழங்கி வாழ்த்தினார். உடன் மாவட்ட தலைவர் சஞ்சய் காந்தி, காரைக்குடி எம்எல்ஏ எஸ்.மாங்குடி மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், புதிய நிர்வாகிகள் இருந்தனர்.

error: Content is protected !!