India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி தலைமையில் போலீசார்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. நீதிமன்ற பணிகள், நிலுவையில் உள்ள வழக்குகள், சட்டவிரோத செயல்களுக்கு எதிரான நடவடிக்கைகள், தனிப்பிரிவு குறிப்பாணைகள் குறித்து கேட்டறிந்து, வழக்குகளை விரைவாக முடிக்க ஆலோசனை வழங்கினார்.
அரியலூர் மாவட்டம் செந்துறை காவல் நிலையத்தில் பணிபுரிந்து உடல்நலக் குறைவால் உயிரிழந்த முதல்நிலைக் காவலர் செல்வம் அவர்களது குடும்பத்திற்கு அரியலூர் மாவட்ட காவல்துறையினரின் பங்களிப்பு நிதி ரூ.5 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி வழங்கினார்கள். உடன் செந்துறை ஆய்வாளர் மற்றும் காவல்துறையின் கலந்து கொண்டனர்.
வண்டியூர், பிகேஎம் நகர், சௌராஸ்ட்ராபுரம், யாகப்பா நகர், சீமான் நகர், ஆனையூர், சொக்கலிங்கநகர், பெரியார் நகர், அசோக்நகர், ஹவுசிங் போர்டு, சிலையனேரி, விளாங்குடி, கூடல்நகர், பாத்திமா கல்லூரி, பரவை சந்தை, வானொலி நிலையம், பாசிங்காபுரம், வில்லாபுரம் ஹவுசிங்போர்டு, மயானரோடு, வெற்றி தியேட்டர், வில்லாபுரம் TNHB புதுநகர் உசிலம்பட்டி ரோடு, & சந்தைப்பேட்டை பகுதிகளில் நாளை காலை 9 – மாலை 5 மணி வரை மின்தடை.*ஷேர்
பெரம்பலூர் மக்களே நமது மாவட்டத்தில் இன்று மற்றும் நாளை மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. ⏩செந்துறை, ⏩நடுவலூர், ⏩தேளூர், ⏩கள்ளக்குறிச்சி கலெக்டர் ஆபீஸ், ஆகிய பகுதிகளில் இன்று 08.09.2025 மின்தடை அறிவிக்கட்டுள்ளது. நாளை 09.09.2025 ஆம் தேதி ⏩தூத்தூர், ⏩திருமானுர், ⏩திருமழப்பாடி, ⏩கீழப்பலூர் ஆகிய பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
புதுச்சேரி, பல்நோக்கு மருத்துவமனையை திறந்து வைத்து முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, காரைக்காலில் விபத்துக்கள் ஏற்பட்டால் தமிழகத்திற்கு செல்லும் நிலை இருந்தது. இது மாறி இந்த பல்நோக்கு மருத்துவமனை மூலம் உயர்தர சிகிச்சை பொதுமக்களுக்கு கிடைக்கும், அடுத்து காரைக்காலில் ஜிப்மர் மருத்துவமனை பயன்பாட்டிற்கு விரைவில் வரும், அப்போது மக்களுக்கு உயர்தர மருத்துவ வசதி இங்கேயே கிடைக்கும் என்றார்.
முத்தமிழ் கலைகளின் இலக்கிய சங்கமம் மற்றும் தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை சார்பில் கல்வித் தென்றல் விருது வழங்கும் நிகழ்வு இன்று திருச்சியில் நடைபெற்றது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் பணி புரியும் ஆசிரியர்கள் கார்த்திகேயன், மாயகிருஷ்ணன், கோபால் ஆகியோர் தலைமை ஆசிரியராகவும் ராஜமாணிக்கம், ராஜா, துரை ஆகியோர் பட்டதாரி ஆசிரியராகவும் ஜோதிவேல் ஆகியோருக்கு சிறந்த ஆசிரியர் விருதுகள் வழங்கப்பட்டது.
விருதுநகர் அடுத்த குல்லூர்சந்தை அருகே மெட்டுக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ்(25). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கந்தசாமி(22) என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இருவரும் ஒன்றாக மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் கந்தசாமி அரிவாளால் நாகராஜனை வெட்டி கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
▶️பேருந்து மற்றும் ரயில் டிக்கெட்களை ரத்து செய்வதாகக் கூறி கோவையைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்து ₹18 லட்சம் பறிக்கப்பட்டுள்ளது.▶️கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 50-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகியுள்ளன. ▶️https என்று தொடங்கும் இணையதள முகவரியையே நாம் பயன்படுத்த வேண்டும் ▶️எச்டிடிபி (http) என்ற இணைதளம் போலியாகும் ▶️பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என போலீசார் அறிவுரை. (SHARE பண்ணுங்க)
கைனூரில் உள்ள விநாயகர் கோயிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோயில் உண்டியல் உடைத்து பணத்தை ஒருவர் திருடி சென்றுள்ளார். இந்நிலையில் அரக்கோணம் டவுன் போலீசார் நேற்று செப்-7ஆம் தேதி ராமதாஸ் நகரில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது அந்த வழியாக பைக்கில் வந்த நபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அரக்கோணம் அகன் நகரை சேர்ந்த ஆனந்தன் என்பவர் கைனூர் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருடியது தெரிந்து கைது செய்தனர்.
விக்கிரவாண்டி, பனையபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி(65). இவர், கடந்த ஆக.25ம் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில், விக்கிரவாண்டி போலீஸார் வழக்குப் பதிந்து மாயமான சுப்பிரமணியைத் தேடி வந்தனர். இந்த நிலையில், அதே பகுதியில் உள்ள தனியார் கரும்பு வயலில் சுப்பிரமணி இறந்து அழுகிய நிலையில் கிடந்தது நேற்று(செப்.07) தெரியவந்தது. இதுகுறித்து விக்கிரவாண்டி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.