India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் காவல் நிலையம் சிறந்த காவல் நிலையமாக தேர்ந்ததடுக்கப்பட்டது. அதற்கான சான்றிதழ் மற்றும் கேடயத்தை இன்று தமிழக DGP வெங்கட்ராமன், ADGP டேவிட்சன் தேவாசீர்வாதம் வடக்கு மண்டல ஜஜி ஆஸ்ரா கர்க் ஆகியோர் முன்னிலையில் கச்சிராயபாளையம் உதவி ஆய்வாளர் ஆனந்தராஜ் பெற்று கொண்டார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (செப்.,7) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
புதுவை பண்ட சோழநல்லூர் முருகன் மகன் சுபாஷ் (23) ஏரிப்பாக்கம் தனியார்
நிறுவன ஊழியர் இவர் குடிபழக்கம் காரணமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து கொண்டு ரூ20,000 அக்காவிடம் கேட்டுள்ளார். அவர் மறுக்கவே அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு பணம் கேட்டு தொல்லை கொடுத்துள்ளார். பணம் கிடைக்காத விரக்தியில் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (செப்.,7) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் இன்று திருச்சியில் நடைபெற்ற விழாவில்10 & 12-ம் வகுப்புகளில் 100% தேர்ச்சி வழங்கிய தலைமை ஆசிரியர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. அதில் அமைச்சர் நேரு சிறப்புரை ஆற்றினார். கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சான்றிதழ் வழங்கி வாழ்த்துரை வழங்கினார். பெரம்பலூர் மாவட்ட தலைமை ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (செப்.07) இரவு 10:00 மணி முதல் நாளை காலை 6:00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவல் அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் அல்லது 100 அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. மயிலாடுதுறை குத்தாலம் மணல்மேடு பொறையார் செம்பனார்கோயில் சீர்காழி திருவெண்காடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று இரவு 11 மணி முதல் நாளை காலை 6:00 மணி வரை ரோந்து பணியில் ஈடுபட உள்ள போலீசாரின் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு குற்ற சம்பவங்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்.
சேலம் மாவட்டத்தில் இன்று (07.09.2025) மறுநாள் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் 7) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மூங்கப்பட்டி நெடுஞ்சாலையில், மொபட் மீது இருசக்கர வாகனம் மோதியதில் ஜிட்டன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி வைகுந்தன் (28) பலத்த காயமடைந்தார். இவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். இந்த நிலையில் இவர் பலனின்றி உயிரிழந்தார். விபத்து தொடர்பாக பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.