Tamilnadu

News May 7, 2025

நெல்லையில் காப்பகத்தில் தங்கிப் படித்த சிறுமி உயிரிழப்பு

image

பேட்டை நரிக்குறவர் பகுதியைச் சேர்ந்த மதுரை வீரன் மகள் முத்துலட்சுமி. (16) பாளை அருகே பர்கிட் மாநகர் காப்பகத்தில் தங்கி அருகே உள்ள பள்ளியில் படித்து வந்தார்.உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் அவரை காப்பக ஊழியர்கள் பாளை அரசு மருத்துவமனைக்கு நேற்று கொண்டு சென்றனர். செல்லும் வழியில் அவர் இறந்தார். இது குறித்து பாளை வட்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 7, 2025

நெல்லையில் காப்பகத்தில் தங்கிப் படித்த சிறுமி உயிரிழப்பு

image

பேட்டை நரிக்குறவர் பகுதியைச் சேர்ந்த மதுரை வீரன் மகள் முத்துலட்சுமி. (16) பாளை அருகே பர்கிட் மாநகர் காப்பகத்தில் தங்கி அருகே உள்ள பள்ளியில் படித்து வந்தார்.உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் அவரை காப்பக ஊழியர்கள் பாளை அரசு மருத்துவமனைக்கு நேற்று கொண்டு சென்றனர். செல்லும் வழியில் அவர் இறந்தார். இது குறித்து பாளை வட்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 7, 2025

புதுக்கோட்டை: கருக்கலைப்பு மாத்திரை விற்ற கடைக்கு சீல்

image

ஹரியானாவில் இருந்து மணமேல்குடியிலுள்ள தனியார் மருந்துக் கடைக்கு 100 கருக்கலைப்பு மாத்திரைகள் வாங்கப்பட்டுள்ளதாக புதுகை மண்டல மருந்துக் கட்டுப்பாட்டு அலுவலகத்துக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து நேற்று அங்கு விரைந்த அதிகாரிகள் அந்த மருந்துக் கடையில் ஆய்வு மேற்கொண்டனர். அதில், சட்டவிரோதமாக கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மருந்துக் கடைக்கு சீல் வைத்தனர்.

News May 7, 2025

புதுக்கோட்டை: கருக்கலைப்பு மாத்திரை விற்ற கடைக்கு சீல்

image

ஹரியானாவில் இருந்து மணமேல்குடியிலுள்ள தனியார் மருந்துக் கடைக்கு 100 கருக்கலைப்பு மாத்திரைகள் வாங்கப்பட்டுள்ளதாக புதுகை மண்டல மருந்துக் கட்டுப்பாட்டு அலுவலகத்துக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து நேற்று அங்கு விரைந்த அதிகாரிகள் அந்த மருந்துக் கடையில் ஆய்வு மேற்கொண்டனர். அதில், சட்டவிரோதமாக கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மருந்துக் கடைக்கு சீல் வைத்தனர்.

News May 7, 2025

திருப்பத்தூரில் 16 வயது சிறுமியை திருமணம் செய்த நபர் கைது

image

திருப்பத்தூர் அடுத்த சிம்மணபுதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜதுரை. இவருக்கு ஏற்கெனவே திருமணம் ஆன நிலையில், அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் நேற்று (ஏப்.30) ராஜதுரையை திருப்பத்தூர் கிராமிய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். *ஏற்கனவே திருமணமாகியும் சிறுமியை திருமணம் செய்தது குறித்து உங்கள் கருத்து என்ன?

News May 7, 2025

திருப்பத்தூரில் 16 வயது சிறுமியை திருமணம் செய்த நபர் கைது

image

திருப்பத்தூர் அடுத்த சிம்மணபுதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜதுரை. இவருக்கு ஏற்கெனவே திருமணம் ஆன நிலையில், அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் நேற்று (ஏப்.30) ராஜதுரையை திருப்பத்தூர் கிராமிய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். *ஏற்கனவே திருமணமாகியும் சிறுமியை திருமணம் செய்தது குறித்து உங்கள் கருத்து என்ன?

News May 7, 2025

திருச்சியில் நூதன முறையில் கள்ளநோட்டு விநியோகம்

image

திருச்சியில் சமீப காலமாக கள்ளநோட்டுகளின் புழக்கம் அதிகரித்ததை தொடர்ந்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது திருச்சி அருகே ஆளவந்தான்நல்லூரை சேர்ந்த பவுல்ராஜ் என்பவர் ரூ.500 கள்ளநோட்டுகளை அச்சடித்து செலவு செய்து வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், கள்ளநோட்டு அச்சிட அவர் பயன்படுத்திய பிரிண்டர், ஸ்மார்ட் போன், இங்க் பாட்டில்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

News May 7, 2025

திருச்சியில் நூதன முறையில் கள்ளநோட்டு விநியோகம்

image

திருச்சியில் சமீப காலமாக கள்ளநோட்டுகளின் புழக்கம் அதிகரித்ததை தொடர்ந்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது திருச்சி அருகே ஆளவந்தான்நல்லூரை சேர்ந்த பவுல்ராஜ் என்பவர் ரூ.500 கள்ளநோட்டுகளை அச்சடித்து செலவு செய்து வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், கள்ளநோட்டு அச்சிட அவர் பயன்படுத்திய பிரிண்டர், ஸ்மார்ட் போன், இங்க் பாட்டில்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

News May 7, 2025

விவசாயி வெட்டி படுகொலை காவல்துறை விசாரணை

image

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள பெரியசாமிபுரத்தைச் சேர்ந்தவர் சிங்கராஜ் மகன் ஆபிரகாம். விவசாயியான இவர் இரவு வீட்டில் இருந்த போது மர்மநபர்கள் அவரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திலே அவர் பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த சின்ன கோவிலாங்குளம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முறையற்ற உறவால் கொலை நடந்ததாக தகவல்.

News May 7, 2025

விவசாயி வெட்டி படுகொலை காவல்துறை விசாரணை

image

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள பெரியசாமிபுரத்தைச் சேர்ந்தவர் சிங்கராஜ் மகன் ஆபிரகாம். விவசாயியான இவர் இரவு வீட்டில் இருந்த போது மர்மநபர்கள் அவரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திலே அவர் பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த சின்ன கோவிலாங்குளம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முறையற்ற உறவால் கொலை நடந்ததாக தகவல்.

error: Content is protected !!