India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரி அரசு வேளாண், விவசாயிகள் நலத் துறையில் பணியாற்றும் அதிகாரிகள் நலச் சங்கம் சாா்பில் ஆண்டுதோறும் தொழில்நுட்பக் கையேடு வெளியிடப்படுகிறது. அதில், வேளாண் தொழில்நுட்ப வல்லுநர்களின் பெயா், பதவி மற்றும் தொடர்புக்கு கைப்பேசி எண்கள் உள்ளிட்டவையும். மேலும் துறை சம்பந்தப்பட்ட முக்கிய இடங்கள், மழைப் பொழிவு உள்ளிட்ட பருவநிலை புள்ளிவிவரங்கள், பூச்சி மேலாண்மை தொழில்நுட்பங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
புனித தோமையர் மலை போலீசார் நேற்று மாலை, ஜிஎஸ்டி ரோட்டில் உள்ள தபால் அலுவலகம் அருகில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சந்தேகப்படும்படி வந்த 2 பேரை சோதனை செய்தபோது, 25 கிராம் ஹெராயின் வைத்திருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து அவர்களை கைது செய்து மேற்கொண்ட விசாரித்ததில் அஸ்ஸாம்மை சேர்ந்த மன்சூல் இஸ்லாம் (28), முபாரக் அலி (27) ஆகிய இருவரை கைது செய்தனர்.
அகஸ்தியம் பள்ளி வேதாரண்யத்திலிருந்து திருத்துறைப்பூண்டி வழியாக சென்னை மற்றும் திருச்சி உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு ரயில் கோச் மாறாமல் செல்லும் வகையில் நேரடி ரயில் போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும் என்று வேதாரண்யம் வர்த்தகர் சங்கத்தினர் தென்னக ரயில்வே திருச்சி கோட்ட பொது மேலாளருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுச்சேரி காவல்துறை சிறப்பு அதிகாரி ஏழுமலை, காவல் துறையில் உள்ள பல்வேறு பிரிவுகளுக்கு நேற்று அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2024ம் ஆண்டு ஜூலை முதல் 2025ம் ஆண்டு ஜனவரி மாதம்வரை போலீஸ் அதிகாரிகள் செய்த வீரதீர செயல்களை பட்டியலிட்டு இந்த விருதுக்கு அனுப்ப, பரிந்துரைகளை வரும் 24ம் தேதிக்குள் டில்லியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்க கூறப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில்,உள்ள தனியார் பள்ளிகளில் 25% சதவீத இலவச கட்டாய கல்வி மூலம் எல்.கே.ஜி வகுப்பில் மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பம் இன்று முதல் தொடங்கியுள்ளது. 22/4/2025 இன்று முதல் தொடங்கி இறுதி நாள் 25/5/2025 வரை விண்ணப்பிக்க அந்தந்த தனியார் பள்ளிகளில் விளம்பரம் மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. rte.tnschools.gov.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தமிழக பள்ளிகளைத் துறை ஏற்பாடு செய்துள்ளது.
சென்னை புறநகர் ஏ.சி. மின்சார ரயில் சேவைக்கு ரூ.35 முதல் ரூ.105 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயணிகள் இந்த கட்டணம் அதிகமாக இருப்பதாக கூறினாலும், தெற்கு ரயில்வே நிர்வாகம் அதற்கு மாற்றம் செய்ய முடியாது என தெரிவித்துள்ளது. பயணிகள் கருத்துக்களை 63747 13251 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பலாம். மேலும், முக்கிய நேரங்களில் கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 61 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பங்களை காலியாக உள்ள குழந்தைகள் மையத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க நாளையே (ஏப்.23) கடைசி நாள். ஊதியம் ரூ.7700-24,200 வரை வழங்கப்படும். இதை SHARE பண்ணுங்க.
தமிழகத்தில் போலீசாருக்கு சங்கம் இல்லாதது ஏன்’ என உயர்நீதி மன்றம் மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. காவல்துறையினருக்கு வார விடுப்பு வழங்கும் உத்தரவை அமல்படுத்த கோரி காவலர் மதுரை ஆஸ்டின்பட்டி காவலர் செந்தில் குமார் தாக்கல் செய்த மனுவில், போலீசாருக்கு வார விடுமுறை வழங்க வேண்டும் என்ற அரசு உத்தரவு எவ்வகையில் பின்பற்றப்படுகிறது’ என தமிழக டி.ஜி. பி., பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று(ஏப்.22) பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி உடனடியாக தீர்வுகான உத்தரவிட்டார். இதில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், துணை ஆணையாளர்கள் சுல்தானா, குமரேசன் என பலரும் கலந்து கொண்டனர்.
நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வருகிற 25-ந் தேதி காலை 10 மணிக்கு “நன்னீர் மீன்வளர்ப்பு” என்ற தலைப்பில் ஒரு நாள் இலவச பயிற்சி நடைபெற உள்ளது. இதில் வேலை இல்லாத பட்டதாரிகள், விவசாயிகள், இல்லத்தரசிகள் மற்றும் சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்கள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் முதுநிலை கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
Sorry, no posts matched your criteria.