Tamilnadu

News March 25, 2025

6 தலைமுறைகளாக பொங்கல் கொண்டாடாத கிராமம்

image

தென்காசி மாவட்டம் கடையம் அருகே கேளையாப்பிள்ளையூர் கிராமத்தில், தங்கள் முன்னோர்கள் கூறியதற்கு இணங்க கடந்த 6 தலைமுறைகளுக்கும் மேலாக பொங்கல் கொண்டாடாமல் உள்ளதாக அக்கிராம மக்கள் தெரிவித்தனர். மேலும், தை மாதம் மூன்றாம் வாரத்தில் உச்சினி மாகாளி அம்மன் கோவிலில் பொங்கல் வைத்து தாங்கள் கொண்டாடுவதாகவும், வீடுகளுக்கு முன் பொங்கல் வைப்பதில்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். *நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News March 25, 2025

திருவாரூர் கலெக்டர் விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

image

திருவாரூர் மாவட்டத்தில் பி.எம். கிசான் திட்டத்தில் நிதி உதவி பெற்று வரும் விவசாயிகள் தங்களது நில உடமை பதிவுகளை வரும் மார்ச்.31ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளுமாறு திருவாரூர் கலெக்டர் மோகனச்சந்திரன்  தெரிவித்துள்ளார்.அதுபோல இதுவரை பி.எம் கிசான் திட்டத்தில் பதிவு செய்யாத விவசாயிகள் வரும் 31-ஆம் தேதிக்குள் தங்களது விபரங்களை சரிபார்த்து பதிவு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். SHARE NOW!

News March 25, 2025

வேலூரில் உயர்கல்வி மாபெரும் கருத்தரங்கு

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள நேதாஜி ஸ்டேடியத்தில் ஏப்ரல் 12,13 ஆகிய தேதிகளில் வழிகாட்டி உயர்கல்வி கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற உள்ளது. இதில் 10,12 வகுப்பு முடித்த மாணவர்கள் எங்கு படிக்கலாம் என்ன படிக்கலாம் என்று ஆலோசனை வழங்க உள்ளனர். இந்த அறிய வாய்ப்பை வேலூர் மாவட்ட மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் விஐடி வேந்தர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சைலேந்திரபாபு கலந்து கொள்ளனர்.

News March 25, 2025

கோடநாடு கொலை: ஜெயலலிதா வளர்ப்பு மகனுக்கு சம்மன்

image

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக இன்று (மார்ச் 25) ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். மார்ச் 27ம் தேதி கோவை சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடநாடு எஸ்டேட் பங்குதாரராக இருந்ததன் அடிப்படையில் சுதாகரனுக்கு சம்மன் அனுப்பியதாக சி.பி.சி.ஐ.டி., தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

News March 25, 2025

சேலம் மாவட்டத்தில் 3 அறிவுசார் மையங்கள் அமைகிறது!

image

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 25) நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கை அறிவிப்புகளை அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டுள்ளார். அதன்படி, போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் பயிற்சி பெற ஏதுவாக நடப்பாண்டில் வாழப்பாடி, கருப்பூர், ஜலகண்டாபுரம் உள்பட தமிழகத்தில் 20 பேரூராட்சிகளில் ரூ.33 கோடியில் அறிவுசார் மையங்கள் அமைகிறது.

News March 25, 2025

மதுரைக்கு புதிய டிஐஜி நியமனம்

image

மதுரை காவல் சரகத்தின் டிஐஜி பணியிடம் நீண்ட நாட்களாக காலியாக இருந்த நிலையில் ராமநாதபுரம் சரக டிஐஜியாக பணியாற்றி வந்த அபினவ் குமார் மதுரை சரக டிஐஜி யாக நியமனம் செய்து உள்துறை செயலகம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று தமிழகம் முழுவதும் பத்து டிஐஜிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News March 25, 2025

சேலத்திற்கு மெட்ரோ ரயில் வருமா? 

image

சேலத்திற்கு மெட்ரோ ரயில் வருமா? என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். மீண்டும் குழு அமைத்து ஆய்வுச் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். கோவை, மதுரை, திருச்சியில் மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும் மெட்ரோ ரயில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் சேலத்திலும் மெட்ரோ ரயில் விடுவது தொடர்பாக மெட்ரோ நிர்வாகம் மீண்டும் குழு அமைத்து ஆய்வுச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

News March 25, 2025

சென்னையில் ரூ.200 கோடியில் நடைபாதைகள்

image

சென்னை பெருநகரில் 170 கி.மீ. நீளத்திற்கு நடைபாதைகள் அமைக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மானியக்கோரிக்கையில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். நாய்க்கடி பிரச்னைக்கு தீர்வு காணும்படி முதல்வர் அறிவுறுத்தி உள்ளதால், நாய்க்கடி பிரச்னைக்கு தீர்வு காண அனைத்து நகரங்களிலும் நாய் கருத்தடை மையம் அமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

News March 25, 2025

தத்தகிரி முருகன் கோயில் பற்றி தெரியுமா?

image

நாமக்கல் நகரத்திலிருந்து 10 கிமீ தொலைவிலுள்ள கிராமமான முத்துகாபட்டி கிராமத்திற்கு அருகில் வழியிலேயே அமைந்துள்ள கோவில் தத்தகிரி முருகன் கோவில். இந்த கோவில் ஒரு சிறிய மலையின் மீது அமைந்துள்ளது. புகழ் பெற்ற முருக பக்தரான கிருபானந்த வாரியார் இந்த கோவிலில் அமைதி மற்றும் சாந்தம் பெறுவதற்காக அடிக்கடி வந்து சென்றதாக சொல்லப்படுகிறது. ஷேர் செய்யவும்.

News March 25, 2025

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 இலவச மாதிரி தேர்வு

image

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (மார்ச் 26) காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 இலவச மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள நபர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது94990 55943, 0424-2275860 என்ற எண்களை தொடர்பு கொண்டு கட்டாயம் முன்பதிவு செய்ய வேண்டும்.

error: Content is protected !!