India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி: மாவட்டத்தைச் சேர்ந்த கராத்தே, சிலம்பம், விளையாட்டு பயிற்சி ஆகியவற்றில் தேர்ந்த பெண் பயிற்சியாளர்களா நீங்கள்..? உங்களுக்கான அரசாங்கத்தின் அரிய வாய்ப்பு. காலிப் பணியிடங்களின் விவரம்: தற்காப்பு கலை பயிற்சியாளர்(ரூ.9,000 சம்பளம்), விளையாட்டு பயிற்சியாளர்(ரூ.15,000 சம்பளம்). விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வருகிற 26ஆம் தேதிக்குள் மேலே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கூட்டுறவு துறை சார்பில் ரேஷன் கடை பணியாளர்களுக்கு 2-ம் கட்ட புத்தாக்க பயிற்சி முகாம் நேற்று (மார்ச் 23) நடந்தது. இந்த பயிற்சி முகாமை கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் (பொது விநியோக திட்டம்) சத்திய நாராயணன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் காட்பாடி, வேலூர், கணியம்பாடி ஆகிய 3 வட்டாரங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
திருவாரூர் அருகே மடப்புரம் ஓடம்போக்கி ஆற்றங்கரையில் அமர்ந்து 1835ஆம் ஆண்டு தட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஜீவசாமதி அடைந்தார். சிறப்பு என்னவென்றால் இவரின் சமாதி மண்ணுக்கு அடியில் மூடப்படாமல் உள்ளது. மடாதிபதி மட்டும் உள்ளே இறங்கி பூஜை செய்வார். இங்கு ஆவணி உத்திரத்தன்று குருபூஜை சிறப்பு வாய்ந்ததாகும். மேலும் உங்களுக்குத் தெரிந்த சிறப்பு வாய்ந்த இடங்களை கமெண்ட பண்ணுங்க..தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க..
சகுந்தலா ஜகந்நாதன் அருங்காட்சியகம் என்பது காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு நாட்டுப்புறக் கலை அருங்காட்சியகம் ஆகும், இது சர் சி.பி. ராமசாமி ஐயர் வாழ்ந்த 400 ஆண்டுகள் பழமையான வீட்டில் அமைந்துள்ளது. இங்கு பழங்காலப் பொருட்களான பாரம்பரிய ஓவியம், பழங்கால பாம் இலைகள், இசைக்கருவிகள், கற்சிலைகள், பாரம்பரிய உடைகள், கைத்தறி உடைகள், நகை மற்றும் உள்நாட்டு புத்தகங்கள் ஆகியவை இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உயர்கல்வி உதவித்தொகை பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ச.உமா தெரிவித்துள்ளார். ஏழ்மை நிலையில் உள்ள மாணவா்களுக்கு அவா்கள் படிக்கும் காலத்தில் ஒருமுறை மட்டும் ரூ. 50,000 வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இதில் பயன்பெற நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக பாதுகாப்பு திட்ட (ஜி-பிரிவு) அலுவலகத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அளிக்கலாம்.
ராமநாதபுரத்தில் கோடை வெயிலால் அடிக்கடி நீராதாரங்களை மக்கள் தேடும் நிலையில் சாலையோரங்களில் தற்காலிகமாக தண்ணீர் பழம், கரும்புச்சாறு, இளநீர், சர்பத் கடைகள் தோற்றியுள்ளன. திறந்தவெளியில் இவை விற்பனை செய்யப்படுவதால் மணல் துகள்கள்,துாசிகள் படிவது,அதிகளவில் செயற்கை வண்ணங்கள் சேர்க்கும் நிலையும் உள்ளது. எனவே உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இதில் ஆய்வு செய்து தரமான குளிர்பானங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் புக்கிரவாரியைச் சேர்ந்த செல்வக்குமார் சங்கீதா தம்பதிக்கு, கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, 3 குழந்தைகள் உள்ளனர். செல்வக்குமார் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததால், கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் ஏற்பட்ட தகராறில், சங்கீதாவை தாக்கி செல்வக்குமார் கொலை மிரட்டல் விடுத்தார். வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து செல்வக்குமாரை கைது செய்தனர்.
கரூரில் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள 16 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு 8th, B.Com, B.Sc, BA, Diploma, ITI, M.Sc, MA, MBBS, Nursing, PG Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.8,500 முதல் ரூ.60,000 வரை வரை வழங்கப்படும். விண்ணப்பிங்க இங்கு <
விழுப்புரம் கண்டாச்சிபுரம் அடுத்த காரணை ஊராட்சியைச் சேர்ந்தவர் அருணகிரி (42). விவசாயியான இவர், 4 கறவை மாடுகளை வளர்த்து வந்தார். வீட்டின் அருகில் உள்ள நிலத்தில் கட்டப்பட்டிருந்த 4 சினை மாடுகளும் இறந்து கிடந்தன. தகவலறிந்த வி.ஏ.ஓ., அன்புவிழி மற்றும் ஆயந்துார் கால்நடை மருத்துவர் ரவி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். இறந்த மாடுகளுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட நல்வாழ்வு சங்கம் சார்பாக பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன Nurse, Medical Officer, Health Inspector என மொத்தமாக 4 காலியிடங்கள் இந்த வேலைக்கு இருக்கிறது. தபால் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். தகுதியான நபர்களுக்கு ரூ.8,500 முதல் ரூ.60,000 வரை சம்பளம் கிடைக்கும். <
Sorry, no posts matched your criteria.