Tamilnadu

News March 24, 2025

செங்கல்பட்டில் தலைவிரித்தாடும் போதை கலாச்சாரம்

image

தமிழக அரசு போதை பொருட்களுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வந்தாலும் செங்கை முழுவதும் கஞ்சா, குட்கா, போதை ஊசி போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. தினந்தோறும் கிலோ கணக்கில் கஞ்சா, குட்கா போன்றவை காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்படுகிறது. போதை பொருள் விற்பனை செய்வதும் அதை பயன்படுத்துவதும் அதிக அளவில் இளைஞர்களே ஈடுபட்டுவருகின்றனர். தலைவிரித்தாடும் போதை கலாச்சாரத்தை கட்டுப்படுத்த மக்கள் கோரிக்கை.

News March 24, 2025

இயற்கை எழில் கொஞ்சும் புளியஞ்சோலை

image

வனப்பகுதியில் மலை அடிவாரத்தில் நீரோடைகளும், சிற்றருவிகளும் நிறைந்த பசுமையான மற்றும் ஓர் அழகான சுற்றுலா இடம் புளியஞ்சோலை. கொல்லிமலைகளின் உச்சியில் ”தட்சினகங்கா” என்று அழைக்கப்படும் நீர்வீழ்ச்சியின் மருத்துவ குணங்கள் நிறைந்த நீர், புளியஞ்சோலையை அடைந்து, காவிரியின் துணை நதியான கொள்ளிடத்தில் இணைகிறது. இது ஒரு வற்றாத நீரோடையாகும். இந்த லீவுக்கு மறக்காம இங்க போங்க. உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க…

News March 24, 2025

சென்னையில் தலைவிரித்தாடும் போதை கலாச்சாரம்

image

தமிழக அரசு போதை பொருட்களுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வந்தாலும் சென்னை முழுவதும் கஞ்சா, குட்கா, போதை ஊசி போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. தினந்தோறும் கிலோ கணக்கில் கஞ்சா, குட்கா போன்றவை காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்படுகிறது. போதை பொருள் விற்பனை செய்வதும் அதை பயன்படுத்துவதும் அதிக அளவில் இளைஞர்களே ஈடுபட்டுவருகின்றனர். தலைவிரித்தாடும் போதை கலாச்சாரத்தை கட்டுப்படுத்த மக்கள் கோரிக்கை.

News March 24, 2025

மரத்தில் கார் மோதி விபத்து மாணவி பரிதாப பலி

image

தாம்பரத்தைச் சேர்ந்தவர் முகமது ஆவேஷ், இவர், நேற்று காலை ஆந்திர, வரதையாபாளையம் நீர்வீழ்ச்சிக்கு, காரில் 8 பேர் பயணித்த நிலையில், கும்மிடிப்பூண்டி அருகே பெரியவேடு பகுதியில், முன்னாள் சென்ற லாரி ஒன்று குறுக்கிட்டதால், காரை இடதுபுறமாக திருப்ப முயன்றார். கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த தென்னை மரம் மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் கல்லூரி மாணவி சம்ரீன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News March 24, 2025

தஞ்சையில் இரண்டு நாட்களுக்கு குடிநீர் நிறுத்தம்

image

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம் நகராட்சி, பேராவூரணி, பெருமகளூர் பேரூராட்சிகள் மற்றும் பாபநாசம், திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு, திருவோணம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியங்களில், மார்ச்.26, 27 ஆகிய இரண்டு நாட்களுக்கு குடிநீர் நிறுத்தப்படும் என தஞ்சாவூர் நிர்வாகப் பொறியாளர் ப.நாகராஜ் தெரிவித்துள்ளார். உங்கள் பகுதி மக்களுக்கு SHARE பண்ணுங்க..

News March 24, 2025

சேலத்தில் பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி சிமெண்ட்

image

சேலம் சன்னியாசிகுண்டு பகுதியில் தனியாருக்கு சொந்தமான மூன்று குடோன்களில் பிரபல நிறுவனங்களில் காலாவதியான சிமென்ட் கட்டிகளை கொண்டு வந்து, அதனை அரைத்து போலியான சிமெண்ட் தயாரித்து வருவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து ஆயிரம் மூட்டை சிமெண்ட்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதை மற்றவர்களுக்கும் பகிரவும்.

News March 24, 2025

செம்பனார்கோயில் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

image

செம்பனார்கோயில் கஞ்சா நகரம் பகுதியை சேர்ந்தவர் அகோர முருகன் (54) விவசாயக் கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டிற்கு வெளியே வந்தபோது அங்கு அருந்து கிடந்த மின்கம்பியை தொட்டதில் மின்சாரம் பாய்ந்து அவர் தூக்கி வீசப்பட்டார். மருத்துவமனை செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். செம்பனார்கோயில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 24, 2025

சதுரகிரிக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி

image

மதுரை மாவட்டம் சாப்டூர் அடுத்து அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்யச் செல்வது வழக்கம். இந்நிலையில் பங்குனி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு வரும் 27-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை 4 நாள்கள் பக்தர்கள் மலையேறிச் சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர் அனுமதி அளித்துள்ளனர். SHARE செய்யவும்.

News March 24, 2025

வரலாற்றை பேசும் சென்னராயப் பெருமாள் கோவில்

image

அதியமான் கோட்டையில் தான் இந்த சென்னராயப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. மத்திய தொல்லியல் துறையின் பராமரிப்பில் இருக்கும் இக்கோயிலின் மகாமண்டபத்தின் விதானத்தில் மகாபாரத, இராமாயண காட்சிகளை விளக்கும் பழங்கால சுவரோவியங்கள் உள்ளன. இவை சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்தவையாகக் கருதப்படுகிறன. இக்கோவில் இன்றளவும் தர்மபுரி மக்களின் வாழ்வியலையும் வரலாற்றையும் எடுத்துக்கூறும் சான்றாகவே உள்ளது.

News March 24, 2025

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், உங்களுக்கு கல்வி உதவித்தொகை கிடைத்துள்ளது என்று சொல்லி, QR Code ஐ ஸ்கேன் செய்ய சொன்னால் செய்ய வேண்டாம் எனவும், இந்த வழியில் நூதனமாக மோசடிகள் நடைபெறுகிறது. எனவே பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற ஏதேனும் புகார்கள் இருந்தால் 1930 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ள அறிவுறுத்தல்.

error: Content is protected !!