Tamilnadu

News March 23, 2025

சிவகங்கை:இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரன்ட்

image

சிவகங்கை மாவட்டம் பள்ளத்துரை சேர்ந்தவர் பழனி என்ற பழனிச்சாமி.இவர் மீது 2023ம் ஆண்டு காரைக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் போலீசார் போக்சோ வழக்குப் பதிவு செய்தனர். வழக்கு விசாரணை சிவகங்கையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடக்கிறது. அப்போது பணியிலிருந்த இன்ஸ்பெக்டர் சில்வியா ஜாஸ்மின் சாட்சி சொல்ல வரவில்லை.இதை தொடர்ந்து அவருக்குப் பிடி வாரன்ட் பிறபித்து நீதிபதி உத்தரவிட்டார்.

News March 23, 2025

8 வயது சிறுவனிடம் பாலியல் அத்துமீறல்!

image

தி.மலை, செங்கம் அருகே 8 வயது சிறுவன் வழக்கம் போல் பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்பொழுது சமையல்காரராக பணிபுரிந்து வரும் 45 வயதான முருகன் என்பவர் மது போதையில் அந்த சிறுவனை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்றுள்ளார். பின் சிறுவனின் ஆடைகளை கழற்றி நிர்வாணமாக்கி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அவ்வழியே வந்த சிலர் முருகனை பிடித்து அடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

News March 23, 2025

பெண்ணின் கழுத்தை அறுத்து முன்னாள் காதலன் கைது 

image

வாழப்பாடி அடுத்த மாரியம்மன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சின்ராஜ் (27). அவரது மனைவி வனிதா (23). கடந்த 14ல், வாழப்பாடி அரசு பஸ் டிப்போ அருகே வனிதா சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த சேலம், கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த வனிதாவின் முன்னாள் காதலர் வேடராஜி (26), வாக்குவாதத்தில் ஈடுபட்டு, மறைத்து வைத்திருந்த கத்தியால் தாக்கினார். இந்தநிலையில்வாழப்பாடி போலீசார் நேற்று, வேடராஜை கைது செய்தனர். 

News March 23, 2025

திருவாரூர் அருகே சிக்கிய குட்கா பொருட்கள்

image

வடுவூர் காவல் சரகம் தனிப்பிரிவு காவலர்களுக்கு வந்த ரகசிய தகவலை அடுத்து வடுவூர் காவல்துறையினர் அத்திக்கோட்டை பகுதியைச் சேர்ந்த முத்துசாமி என்பவரின் வீட்டை சோதனை செய்தனர். அப்போது அங்கு ரூ.1,10 ,000 மதிப்பிலான குட்கா பொருட்கள் மொத்த விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது. உடனடியாக காவல்துறையினர் முத்துசாமியை கைது செய்து அவரை சிறையில் அடைத்தனர்.

News March 23, 2025

தர்மபுரி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல் 

image

கோடை வெயில் அதிகரித்து வரும் சூழ்நிலையில், வெயில் தாக்கத்தில் நம்மை பாதுகாத்துக் கொள்ள வியர்வை எளிதாக வெளியேறும் வகையில் தளர்ந்த, காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிவது. மோர், இளநீர், உப்பு கலந்த எலுமிச்சை பழச்சாறு ஆகியவற்றைப் பருகலாம். வெயில் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஆஸ்பிரின் மற்றும் பாராசிட்டமால் மாத்திரைகளை கொடுக்கக்கூடாது என மாவட்ட கலெக்டர் சதீஸ் தெரிவித்துள்ளார்.

News March 23, 2025

கூலித் தொழிலாளி தோட்டத்தில் தற்கொலை

image

சிவகாசி அருகே கட்டளைபட்டி பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி பொன்னுச்சாமி (48). இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் மது பழக்கத்திற்கு அடிமையாகி சம்பளப் பணத்தை மனைவிக்கு கொடுக்காமல் இருந்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ராமலட்சுமி குழந்தைகளுடன் அவரது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இதனால் மன உளைச்சலடைந்த பொன்னுச்சாமி நேற்று அருகில் உள்ள தோட்டத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

News March 23, 2025

திருச்சி ரயில்வே முக்கிய அறிவிப்பு

image

ரயில்வே பாதுகாப்பு படை அலுவலகம் ரயில் பயணிகளின் நலன் குறித்து தொடர்ந்து முக்கிய அறிவிப்பு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், ரயிலில் பயணம் செல்லும் பயணிகள் ரயில்வே தண்டவாளங்களை கடப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே, விலை மதிப்புள்ள உங்கள் உயிரை இழக்க வேண்டாம் எனவும், பிளாட்பாரங்களுக்கு செல்ல, மேல்தளம் அல்லது சப்வே உபயோகப்படுத்துமாறு கூறப்பட்டுள்ளது.

News March 23, 2025

தீ விபத்தில் வீட்டை இழந்தவர்களுக்கு நிவாரண உதவி

image

சீர்காழி அருகே காத்திருப்பு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த ஸ்டாலின் என்பவரது மனைவி தீபா. இவரது கூரை வீடு இரு தினங்களுக்கு முன்பு தீப்பிடித்து எரிந்து முழுவதும் சேதம் அடைந்தது. இதனை அறிந்த சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் ஒன்றிய செயலாளர் பஞ்சு குமார் ஆகியோர் பாதிக்கப்பட்ட தீபாவை நேரில் சந்தித்து நிதி உதவியும் நிவாரண பொருட்களையும் வழங்கி ஆறுதல் கூறினர்.

News March 23, 2025

திருச்சியில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களை பாராட்டிய கமிஷனர்

image

திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் 2025 பிப்ரவரி மாதத்திற்கான கலந்தாய்வு கூட்டம் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாநகர காவல் துணை ஆணையர் சிபின் ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பணி பாராட்டு சான்றிதழ் வழங்கி மாநகர காவல் ஆணையர் காமினி பாராட்டினார்.

News March 23, 2025

தூத்துக்குடி மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு -நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் இப்போது வெளியிட்டுள்ளது.

error: Content is protected !!