Tamilnadu

News January 21, 2026

கோவையில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்!

image

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில், வரும் (ஜனவரி.23) மேட்டுப்பாளையம் சாலை, அரசு ஐ.டி.ஐ. கல்லூரி அருகே, தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில் 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொண்டு, 500க்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை வழங்கவுள்ளன. இதில் பங்கேற்க என்ற <>https://www.tnprivatejobs.tn.gov.in <<>>இணையதளம் மற்றும் 0422-2642388 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News January 21, 2026

பெரம்பலூர்: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News January 21, 2026

இராமநாதபுரம் ஜன.23 மிஸ் பண்ணிடாதீங்க..

image

இராமநாதபுரம் மாவட்டம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் (ஜன, 23) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இராமநாதபுரத்தில் நடைபெற உள்ளது. 18 முதல் 40 வயது வரை உள்ள, தகுதி வாய்ந்த நபர்கள் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 21, 2026

கடலூர்: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News January 21, 2026

வேளாண் விதைப்பைகள் திருடிய உதவி அலுவலர் சஸ்பெண்ட்

image

வேப்பனப்பள்ளியில் உள்ள வட்டார வேளாண் மையத்தில் ஜன-15 அன்று அரசு விடுமுறை நாளில் உதவி அலுவலர் முருகன் என்பவர் அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த விதை பைகளை திருடிச் செல்ல முயன்றார். இதுகுறித்து உதவி இயக்குனர் சிவமணி அளித்த புகாரின்பேரில் வேப்பனப்பள்ளி போலீசில் வழக்குபதிவு செய்தனர். தொடர்ந்து முருகன் இணை இயக்குனர் காளியப்பன் முருகனை ஜன-20 சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

News January 21, 2026

வேலூரில்: ரயிலில் சென்றவர் பலி!

image

அரக்கோணத்தில் இருந்து வேலூர் செல்லும் பயணிகள் ரயில் நேற்று (ஜன.20) காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது ரயிலில் பயணித்த 60 வயதுடைய முதியவர் சுயநினைவின்றி இருப்பதாக காட்பாடி ரயில்வே போலீசருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார், டாக்டர்கள் முதியவரை இறக்கி பரிசோதனை செய்தனர். அப்போது முதியவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News January 21, 2026

இராமநாதபுரத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

image

இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆயுதப்படை மைதானத்தில் நாட்டின் 77-வது குடியரசு தின விழா ஜன.15 அன்று கொண்டாடபட உள்ளது. இதையொட்டி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தை தயார் செய்யும் பணி நேற்று நடைபெற்றது. தொடர்ந்து விருந்தினர்கள் வந்து செல்வவது, கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான பணிகள் நடைபெற உள்ளன. இதற்காக மைதானத்தை தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

News January 21, 2026

ராணிப்பேட்டையில் கூண்டோடு கைது!

image

ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிறுத்தத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் நேற்று (ஜன.20) மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சத்துணவு ஊழியர்களுக்கு கால வரை ஊதியம், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம், பணிக்கொடை, அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சம், சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். சாலை மறியலில் ஈடுபட்ட 200 பேரை போலீசார் கைது செய்தனர்.

News January 21, 2026

கிருஷ்ணகிரியில் கோர விபத்து!

image

உத்தனப்பள்ளி அடுத்த தர்மபுரி ஓசூர் நெடுஞ்சாலையில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த வனோஜ் கோவன் 37 என்பவர் ஜன-20 மதியம் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது கட்டுபாட்டை இழந்த வாகனம் சாலையில் கவிந்தது. இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக உத்தனப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர

News January 21, 2026

செங்கல்பட்டு: நள்ளிரவில் எரிந்த கோரத்தீ

image

கடப்பாக்கம்: பனையூரில் நேற்று (ஐன-20) ஏற்பட்ட மின் கசிவு காரணமாக குடிசை வீடு தீப்பிடித்து எரிந்து சேதம் அடைந்தது. வீட்டிலிருந்த மின் ஒயர்களின் ஏற்பட்ட கசிவால் தீ பரவியதை கண்ட குடும்பத்தினர் உடனடியாக வெளியேறி உயிர் தப்பினர். மேலும் தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். எனினும் குடிசை முழுவதும் எரிந்து நாசமானது, இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!