Tamilnadu

News August 22, 2025

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்!

image

“உங்களுடன் ஸ்டாலின்” இரண்டாவது கட்ட முகாம் நாளை (ஆகஸ்ட் 22) திருப்பத்தூர் நகராட்சி வார்டுகள் 11, 12, 13, வாணியம்பாடி நகராட்சி வார்டுகள் 16, 17, மற்றும் குரிசிலாப்பட்டு, கோணப்பட்டு, புத்தகரம், சுந்தரம்பள்ளி, சோமலாபுரம், சத்தம்பாக்கம் ஆகிய ஊராட்சிகளில் இந்த முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் தங்கள் குறைகளை நேரடியாக மனு அளிக்கலாம்.

News August 22, 2025

கரூர் : குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது

image

கரூர் நங்கவரத்தை சேர்ந்தவர் ராஜா. இவருக்கும் அவரது உறவினரான முருகானந்ததிற்கும் கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை இருந்துள்ளது. இதில் கடந்த மாதம் 28ஆம் தேதி ராஜாவின் அப்பா செல்வராஜை முருகானந்தம் கத்தியால் குத்தியுள்ளார். நங்கவரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது மாவட்ட எஸ்பி பரிந்துரையில் அவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

News August 22, 2025

திண்டுக்கல்: மாரத்தான் ஆட்சியர் அறிவிப்பு

image

திண்டுக்கல் 12-வது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு வாருங்கள் ஓடுவோம், வாசிப்பை நோக்கி என்ற குறிக்கோளுடன் 23-ம் தேதி காலை 06.00 மணிக்கு டட்லி பள்ளி மைதானத்திலிருந்து அங்குவிலாஸ் பள்ளி மைதானம் வரை “விழிப்புணர்வு மாரத்தான்” நடத்தப்படவுள்ளது. இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்கள், பொதுமக்கள் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News August 22, 2025

தருமபுரியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடைபெறும் இடங்கள்

image

தர்மபுரி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 22) ஸ்டாலின் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. காரிமங்கலம் (ஸ்ரீ துளசியம்மாள் திருமண மண்டபம்), காரிமங்கலம் (VPRC கட்டிடம் அனுமந்தபுரம்), கடகத்தூர் (விநாயகா திருமண மண்டபம்), நல்லம்பள்ளி (மானியதானஅள்ளி சமுதாய கூடம்), மொரப்பூர் (சமூகக்கூடம் ஈச்சம்பாடி), பாலக்கோடு (VPRC கட்டிடம், புலிக்கரை) ஆகிய இடங்களில் இந்த முகாம்கள் நடத்தப்படும்.

News August 22, 2025

குன்னூரில் இன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

image

குன்னூர் சிம்ஸ் பார்க் அருகே உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் இன்று காலை 11 மணி முதல் 12.30 மணி வரை, மின்னு நுகர்வோர் குறைதீர் கூட்டம், செயற்பொறியாளர் சேகர் தலைமையில் நடைபெற உள்ளது. குன்னூர் நகரம் , எடப்பள்ளி, எடக்காடு, கோத்தகிரி நகரம், நெடுகுலா, அரவேணு, உபதலை குந்தா, சேலாஸ் வெஸ்ட் புரூக், ஆகிய பகுதிகளை சேர்ந்த மின் நுகர்வோர்கள் தங்களது குறைகளை நேரில் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 22, 2025

பேரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கை

image

கோவை பேரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் Advanced CNC, Aeronautical Structure, Multimedia போன்ற பிரிவுகளில் நேரடி சேர்க்கை 31.08.2025 வரை நீட்டிக்கப்பட்டது. 8ம் மற்றும் 10ம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கட்டுமான தொழிலாளர் நலவாரிய அட்டை அவசியம். இலவச சைக்கிள், பாடநூல்கள், உதவித்தொகை ரூ.750 வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு என்ற 88254 34331, 9566531310 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

News August 22, 2025

செங்கல்பட்டில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

image

செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நாளை (ஆகஸ்ட் 22) காலை 10:30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியர் சினேகா தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில், விவசாயிகள் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம். மாவட்ட விவசாயிகள் அனைவரும் இக்கூட்டத்தில் பங்கேற்கலாம் என ஆட்சியர் அலுவலகம் அறிவித்துள்ளது.

News August 22, 2025

விவசாயிகள் குறைதீர் கூட்டம்- ஆட்சியர் அறிவிப்பு

image

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் வருகின்ற ஆக.29ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் மாவட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் தலைமையில் நேரடியாக நடைபெற உள்ளது. எனவே விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தங்கள் பொதுக் கோரிக்கைகளை கூட்டத்தில் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தர்பாக ராஜ் தெரிவித்துள்ளார்.

News August 22, 2025

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்!

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (ஆக.22) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முகையூர் வட்டாரம் ஆலம்பாடி JPM திருமண மஹால், வி.அரியலூர் ஊராட்சி தொடக்கப்பள்ளி வளாகம், நகர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம், வெங்கந்தூர் கிராம சேவை மைய கட்டிடம், TV நல்லூர் வட்டாரத்திற்கு பெரியசெவலை கூட்டுறவு சர்க்கரை ஆலை திருமண மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற உள்ளது.

News August 22, 2025

திருப்பூரில் விநாயகர் சிலைகள் கரைக்க இடங்கள் ஒதுக்கீடு

image

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுவது வழக்கம். விசர்சனம் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை கரைக்க திருப்பூர் மாவட்டத்தில் சாமளாபுரம், ஆண்டிபாளையம், பொங்கலூர், எஸ் வி புரம், கணியூர், கொடிமேடு உள்ளிட்ட பகுதிகளில் வாய்க்கால் மற்றும் குளங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!