India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிலப்பதிகாரத்தில் சேரன் செங்குட்டுவன் தலைநகராக ஆட்சி செய்த ஊர் ’கருவூர்’ என்கிற என்கிற எனக் குறிப்பிடப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே. ஆனால், கரூருக்கும் ரோமானிய பேரரசிற்கும் கூட ஒரு தொடர்பு உண்டு. ‘கோர்வோரா(Korevora)’ எனும் தென்னிந்தியாவில் உள்ள வர்த்தக நிலையம் பண்டைய கால ரோமாபுரி அரசிடம் வர்த்தகம் செய்துள்ளதாக கிரேக்க ஆய்வாளர் டால்மி குறிப்பிட்டுள்ளார். ஆம் அது ‘கரூர்’ தான்.
தென்காசி மாவட்டம் சிவகிரி சந்தைப்பேட்டை தெருவை சேர்ந்தவர் சக்தி ராகவேந்திரன்(44). சென்னை கிளாம்பாக்கம் ஜி3 காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்த ராகவேந்திரன், கடந்த 18ஆம் தேதி இரவு இயற்கை மரணம் அடைந்தார். தொடர்ந்து, நேற்று(மார்ச் 20) அவரது உடல் சிவகிரிக்கு கொண்டுவரப்பட்டு, 30 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர்,நடத்துனர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திற்கு 185 ஓட்டுநர், நடத்துநர் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சியுடன், 24 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் அவசியம். <
கடந்த ஜனவரி 27ஆம் தேதி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட காரைக்கால், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் 13 பேர் 50 நாட்களுக்குப் பின்னர் தாயகம் திரும்பினர். இதில் நாகை மாவட்டம், நம்பியார் நகரைச் சசிகுமார் (26), நந்தகுமார் (30), பாபு (31),குமரன் (28) தங்கள் சொந்த ஊருக்கு நேற்று வந்ததால் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 46 வயது பெண் ஜனவரியில் ஆன்மிக பயணமாக தி.மலை வந்தார்.கடந்த 17ம் தேதி வெங்கடேசன் (30) என்பவர் அவரிடம் மேலே உள்ள ஒரு குகையில் அமர்ந்து தியானம் செய்தால் முக்தி கிடைக்கும் என கூறி அழைத்துச் சென்றார்.கஞ்சா போதையில் இருந்த அவர் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து தப்பினார்.அப்பெண் பிரான்ஸ் நாட்டு துாதரகத்திற்கு தெரிவித்ததை அடுத்து திருவண்ணாமலை போலீசார் வெங்கடேசனை கைது செய்தனர்
திருநெல்வேலி மண்டல அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் உள்ள நாகர்கோவில் மாவட்டத்திற்கு 129 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன், 24 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருத்தல் அவசியம். <
சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி வனப்பகுதியில் உள்ள மாரியம்மன் மிகவும் சக்தி வாய்ந்த காவல் தெய்வமாகும். அக்காலத்தில், அங்கு மேய்க்கப்படும் காராம்பசு ஒன்று தினந்தோறும் பாலை ஒரு வேங்கை மரத்தின் அடியில் கணாங்கு புற்கள் சூழ்ந்த சுயம்பு லிங்கத் திருவுருவம் மீது தன்னிச்சையாக சுரந்துள்ளது. அப்போது அங்கிருந்த ஒருவருக்கு தெய்வ அருள் வந்து பண்ணாரி அம்மன் அங்கு இருப்பதாக வாக்கு தெரிவித்ததாக கூறப்படுகிறது. (ஷேர்)
மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் தரமற்றதாகவும் காலதாமதமாகவும் நடைபெறுவதாக நாடாளுமன்ற கூட்டத்தில் மயிலாடுதுறை எம்.பி சுதா குற்றம் சாட்டி பேசினார். இந்நிலையில் மயிலாடுதுறை பாராளுமன்றத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் நடைபெற்று வரும் திட்ட பணிகளை தெற்கு ரயில்வே பொது மேலாளர் இன்று ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
சென்னைக்கு அடுத்தபடியாக கோவை தொழில் ரீசியாகவும், கல்வி, வேலை வாய்ப்புகளில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்நிலையில் கோவை, சரவணம்பட்டி, காலாப்பட்டி, மலுமிச்சம்பட்டி, சூலூர், கோவைப்புதூர் பகுதியில் தொழில் பூங்கா, ஐடி பூங்காக்கள் வர இருப்பதற்கான மாஸ்டர் பிளானை அரசு தயார் செய்து வருகிறது. இதனால், அடுத்த 5-10 ஆண்டுகளில் இப்பகுதியில் ரியல் எஸ்டேட் மதிப்பு உச்சத்தை அடையவுள்ளது. (Share பண்ணுங்க)
தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துனர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சேலம் கோட்டத்தில் 486 ஓட்டுநர், நடத்துநர் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சியுடன், 24 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் அவசியம். இதற்கு மார்ச்.21 முதல் ஏப்ரல்.21 வரை விண்ணப்பிக்கலாம். (Share பண்ணுங்க)
Sorry, no posts matched your criteria.