Tamilnadu

News March 20, 2025

காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோயில் சிறப்பம்சங்கள்

image

காஞ்சிபுரம் காந்தி சாலையில் அமைந்துள்ள வழக்கறுத்தீஸ்வரர் சிவாலயம், முனிவர்கள், தேவர்கள் இடையே ஏற்பட்ட விவாதத்தை தீர்ப்பதற்காக, இறைவன் இங்கு தோன்றியதாக ஐதீகம். இக்கோயிலில், வழக்குகளில் சிக்கியவர்களும், தொழில் மற்றும் பதவியில் உயர்வு வேண்டுவோரும் 16 வாரங்கள் தீபம் ஏற்றி வலம் வந்தால் பிரச்சினைகள் தீரும் என நம்பப்படுகிறது. பல அரசியல்வாதிகள், பிரபலங்கள் இக்கோயிலில் வழிபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News March 20, 2025

தீராத வியாதிகளை தீர்க்கும் வைத்திய வீரராகவர்

image

திருவள்ளூரில் பிரசித்தி பெற்ற வீரராகவர் கோவில் உள்ளது. மூலவரை, வைத்திய வீரராகவர், பிணி தீர்க்கும் வீரராகவர் என்றும் பக்தர்கள் அழைக்கிறார்கள். இங்கு 3 அம்மாவாசைகளுக்கு தொடர்ந்து வந்து வழிபட்டால், தீராத வியாதிகள், வயிற்றுவலி, காய்ச்சல் ஆகியவை குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிகையாக உள்ளது. தவிர, திருமணத்தடை, குழந்தை பாக்கியம் போன்ற வேண்டுதலும் நிறைவேறும் என்பது ஐதீகம். ஷேர் பண்ணுங்க.

News March 20, 2025

தூத்துக்குடி முன்னாள் படை வீரர்களுக்கு சூப்பர் அறிவிப்பு

image

முன்னாள் படை வீரர்கள் நலன் கருதி காக்கும் கரங்கள் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் முன்னாள் படை வீரர்கள் சுயதொழில் துவங்க வங்கிகள் மூலம் ரூபாய் 1 கோடி வரை கடன் பெற வழிவகை செய்யப்படும். இதில் 30% மானியம், 0.3% வட்டி மானியம். தூத்துக்குடி மாவட்ட முன்னாள் படை வீரர்கள் இத்திட்டத்தில் பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர்  தெரிவித்துள்ளார். *தெரிந்த முன்னாள் படை வீரர்களுக்கு பகிரவும்*

News March 20, 2025

தேனி : இந்த கோவிலுக்கு இவ்வளவு சக்தியா?

image

தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பகுதியில் அமைந்துள்ளது வழிவிடும் முருகன் கோவில். இங்கு மூலவராக உள்ள முருக பெருமானுக்கு தினசரி பல்வேறு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். கேரளா ஏலத்தோட்ட வேலைக்கு செல்லும் வேலையாட்கள் இந்த கோவிலில் தினசரி வழிபாடு நடத்திச் செல்கின்றனர். நெடுந்தூர பயணத் திட்டம் நிறைவேறாமல் இருந்தால் இங்கு வழிபட்டுச் சென்றால் பயணத்தடை நீங்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

News March 20, 2025

வீட்டு மனைகளாக மாற்ற அனுமதிக்க கூடாது – ராமதாஸ்

image

கிளியனூர் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் இன்று விலை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற அனுமதிக்க கூடாது. முப்போகம் விளையும் பூமியாக இருந்தாலும் பிளாட் போட்டு விற்கும் நிலை உள்ளது. தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளில் 40 லட்சம் ஏக்கர் பரப்பளவு விலை நிலங்கள் பட்டாவாக மாற்றம் முப்போகம் விளையும் பூமியாக இருந்தாலும் பிளாட் போட்டு விற்கும் நிலை உள்ளது. ஏரி குளம் நீர்நிலைகளை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் இல்லை கூறினார்.

News March 20, 2025

ரம்ஜான்- சேலம் வழியாக சிறப்பு ரயில் அறிவிப்பு

image

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, வரும் மார்ச் 30- ஆம் தேதி சேலம் வழியாக சென்னை சென்ட்ரலில் இருந்து போத்தனூருக்கும், மறுமார்க்கத்தில், மார்ச் 31- ஆம் தேதி போத்தனூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில்கள், சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 20, 2025

வேலூர் CMC கல்லூரியில் வேலை

image

வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் Senior Resident, Jr. Psychologist உள்ளிட்ட 3 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதி: MA, M.Sc (Psychology), MS (Ophthalmology), MD (Dermatology). அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் வரும் 29ஆம் தேதிக்குள் விண்ணப்பிலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT

News March 20, 2025

தருமபுரிக்கு விரைவில் சிப்காட் – அமைச்சர்

image

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பேசிய பென்னாகரம் எம்.எல்.ஏ ஜி.கே.மணி, “தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் அமைக்க அரசு முன்வர வேண்டும்” என்றார். அவருக்கு பதிலளித்த தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, “தருமபுரியில் சிப்காட் அமைப்பதற்கான பணிகள் தொடங்கியிருப்பதாகவும், விரைவில் நடைமுறைக்கு வரும்” என்றார். இதன்மூலம் தருமபுரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும்

News March 20, 2025

ராணிப்பேட்டை: பொதுமக்கள் பாதுகாத்துக் கொள்வது குறித்த கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று வெப்ப அலை பரவலில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது குறித்த கூட்டம் நடைபெற்றது. இதில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப்படை கமாண்டர் கபில், பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் ரூபி பாய் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News March 20, 2025

சென்னை திரிசூலத்தில் சோழர் கால கோயில்

image

சென்னை திரிசூலத்தில், 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர் காலத்து திரிசூலநாதர் திருக்கோயில்கோயில் உள்ளது. இக்கோயில் தேவாரத்தில் வைப்புத்தலமாக பாடப்பட்டுள்ளது. மலைகள் சூழ்ந்த பகுதியில் அருள்பாலிப்பதால் திரிசூலநாதர் என்று அழைக்கப்படுகிறார். இங்கு வந்து வழிபட்டால் ராகு கேது தோஷங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. தவிர பிணி, திருமணத்தடை நீங்க இங்கு வழிபடுகிரார்கள். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!