India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்கல்பட்டு போந்தூர் பகுதியை சேர்ந்த ராஜமாணிகம், பாலியல் தொல்லை வழக்கில் கைது செய்யப்பட்டு 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றர். 2022ஆம் ஆண்டில் புழல் சிறையில் அடைக்கப்பட்டு, பல்வேறு உடல் நலக்குறைவுகளால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த 9-ந் தேதி ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து புழல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஈரோட்டில் வரும் 22ஆம் தேதி வரை அங்கன்வாடி மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில், வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. இதில், மாவட்டம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கப்பட உள்ளது. மேலும், குழந்தைகள் வைத்திருப்பவர்களுக்கு Share பண்ணுங்க.
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை சார்பில் சங்கமம் – நம்ம ஊரு திருவிழாவில் பங்கேற்க விரும்பும் கலைக்குழுக்களின் பதிவு நிகழ்ச்சி ராமநாதபுரம் அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் மார்ச் 22, 23 காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் ஒவ்வொரு கலைக்குழுவின் 5 நிமிட வீடியோ பதிவு செய்யப்பட்டு தேர்வுக் குழுவால் கலைக்குழுக்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
ஆரணியை அடுத்த காமக்கூர் பாளையத்தை சேர்ந்த தாமோதரன் மகன் ஜெயராமன் (13), தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இவர், நேற்று முன்தினம் அவர்களுடைய கோழிப்பண்ணையில் உள்ள மரத்தில் சேலை கட்டி விளையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென சேலை அவரது கழுத்தை இறுக்கியதில் சம்பவ இடத்திலேயே ஜெயராமன் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செஞ்சி அருகே வசிக்கும் 16 வயது சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. அரசு மருத்துமனையில் சோதனை செய்ததில் சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சிறுமியிடம் பெற்றோர் விசாரித்ததில், காட்டு சித்தாமூர் கிராமத்தைச் சேர்ந்த வினித்குமார் (23, பாலியல் வன்கொடுமை செய்தது தெரிவந்தது. புகாரின்பேரில் செஞ்சி அனைத்து மகளிர் காவல்துறையினர், வினித்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
சங்கராபுரம், கள்ளக்குறிச்சி சாலையில் மைலம்பாறை அருகே சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் வீரன், கோவிந்தன் தலைமையிலான காவலர்கள் நேற்று வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது குடிபோதை, ஓட்டுநர் உரிமம் இல்லாதிரத்தல், அதி வேகம், ஹல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாதிருத்தல் உள்ளிட்ட பல்வேறு விதி மீறல்களில் ஈடுபட்ட, 36 பேர் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு பகுதியில் அமைந்துள்ள கிரேஸ் கல்வி குழுமம் கிரேஸ் இன்ஜினியரிங் மற்றும் பாலிடெக்னிக் காலேஜ் வைத்து தனியார் தொலைக்காட்சியின் சரிகமப சீசன் 5 காண நேர்முகத்தேர்வு வரும் வெள்ளிக்கிழமை (மார்ச் 21) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் திறமையாக பாடும் மாணவ மாணவிகள் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த புலவர்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ராஜூ. நேற்று (மார்ச்.18) அதிக அளவு மதுபோதையில் இருந்த இவர், தனது மனைவி காஞ்சானவை கத்தியால் சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த காஞ்சானவை அவரது உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து காஞ்சனாவின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த ஆலங்காயம் காவல்துறையினர் ராஜூவை கைது செய்தனர்.
ஸ்கில் இந்தியன் மற்றும் தமிழ்நாடு கல்வி உதவி மையம்(Tnedusupport) இணைந்து நடத்தும் +2 மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை தேர்வு ஆன்லைன் மற்றும் நேரடி முறையில் நடைபெற உள்ளது. இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ₹25,000, இரண்டாம் பரிசு ₹15,000, மூன்றாம் பரிசு ₹10,000 மேலும் 1000 மாணவர்களுக்கு ஆறுதல் பரிசு, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட உள்ளது.
சேலம் மாநகராட்சியில் உள்ள நகர்ப்புற சுகாதார நிலையங்களில் 36 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பப் படிவங்களை பதிவு செய்ய இங்கே <
Sorry, no posts matched your criteria.