India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
SBI அல்லது வேறு ஏதேனும் வங்கி கணக்கின் செயலி போல் WhatsApp – ல் வரும் -.apk File – களை Click செய்து உங்களுடைய வங்கி கணக்கு விவரங்களை உள்ளீடு செய்யாதீர்கள்.
மீறி செய்தால் உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை இழப்பீர்கள். இது போன்று ஏமாற்றப்பட்டால் 1930 என்ற இலவச எண்ணை அழைக்கவும். அல்லது www.cybercrime.gov.in என்ற வலைதள முகவரியில் புகாரளிக்கவும்.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், கம்பைநல்லூர் அம்ருதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ என்ற முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை, மாவட்ட ஆட்சியர் சதீஸ் இன்று (செப்.6) பார்வையிட்டார். அப்போது, அரசுத் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
தீபாவளிப் பண்டிகைக்கு ரயில்களில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்துவிட்ட நிலையில், பயணிகளின் தேவையை கருத்தில்கொண்டு, தென்னக ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, விழுப்புரம் வழியாகச் செல்லும் செங்கோட்டை, நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட நெரிசல் மிகுந்த வழித்தடங்களில் இயக்கப்படும் விரைவு ரயில்களில், ஓரிரு பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
காட்பாடி அடுத்த கிறிஸ்டியான் பேட்டை சோதனை சாவடியில் இன்று (செப்டம்பர் 06) காட்பாடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட 400 கிலோ குட்கா பொருட்கள் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து குட்கா கடத்திய ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த விக்ரம் பவாட்டி (40) என்பவரை கைது செய்தனர்.
ஆவணி மாத பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, தி.மலைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, கூட்ட நெரிசல் மற்றும் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில், பாதுகாப்பு பணிக்காக வேலூர் மாவட்டத்தில் இருந்து, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை தலைமையில், 200 போலீசார், இன்று (செப்.6) தி.மலை மாவட்டத்திற்குப் புறப்பட்டுச் சென்றனர். என வேலூர் மாவட்ட SP தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி (செப்டம்பர்:6) இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம் காவல்துறை சார்பில் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டது. இரவு நேரங்களில் பெண்கள் குழந்தைகள் பொதுமக்கள் அவசர தேவைக்கு இலவச டோல்ப்ரீ என் 100 அல்லது காவலர்களின் தனிப்பட்ட மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறது.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று (செப்.6) 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல் நடைபெற்றது. நேர்காணலில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பணியாற்றத் தேவையான பயிற்சி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி, மருத்துவ சேவைகளை வலுப்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காஞ்சிபுரம் காந்தி சாலையில் அமைந்துள்ள வழக்கறுத்தீஸ்வரர் சிவாலயம், முனிவர்கள், தேவர்கள் இடையே ஏற்பட்ட விவாதத்தை தீர்ப்பதற்காக, இறைவன் இங்கு தோன்றியதாக ஐதீகம். இக்கோயிலில், வழக்குகளில் சிக்கியவர்களும், தொழில் மற்றும் பதவியில் உயர்வு வேண்டுவோரும் 16 வாரங்கள் தீபம் ஏற்றி வலம் வந்தால் பிரச்சினைகள் தீரும் என நம்பப்படுகிறது. பல அரசியல்வாதிகள், பிரபலங்கள் இக்கோயிலில் வழிபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 06.09.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். அவிநாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை, காங்கேயம், தாராபுரம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் அலுவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர தேவைக்கு 100 என்ற எண்ணை அழைக்கலாம்.
தருமபுரி மாவட்ட வேளாண்மை அலுவலர்கள் சங்கத்திற்கு, நான்காவது முறையாக மாவட்டத் தலைவராக, காரிமங்கலம் உதவி வேளாண்மை அலுவலர் கிருஷ்ணன், ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவருக்கு, விவசாயிகள் மற்றும் வேளாண்மை அலுவலர்கள் தரப்பில் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
Sorry, no posts matched your criteria.