Tamilnadu

News August 22, 2025

திருப்பூரில் வேலைவாய்ப்பு முகாம்

image

திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணி முதல் மதியம் 1 மணி வரை திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் (அறை எண் 139) நடைபெறவுள்ளது. 
மேலும் விவரங்களுக்கு 9499056944 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் மனிஷ் கூறியுள்ளார்.

News August 22, 2025

வந்தாரை வாழ வைக்கும் நம்ம சென்னை!

image

மதராஸ் பட்டணமாக 386 ஆண்டுகளுக்கு முன்பு 1639-ம் ஆண்டு இதே நாளில் (ஆக.22) சென்னை தோற்றுவிக்கப்பட்டது. வந்தாரை வாழ வைக்கும் சென்னை. அப்பெருமைக்கு சொந்தம் கொண்டாடுவதில் சென்னைக்கு முக்கிய பங்கு உண்டு. மதராஸ் பட்டணம், சென்னப் பட்டணம், மெட்ராஸ் என ஒவ்வொரு பெயர்கள் மாறினாலும், இன்று வரை சென்னை என்ற பெயருடன் நவீன இந்தியாவின் அடையாளமாக காட்சி அளிக்கிறது. சென்னையில் உங்களுக்கு பிடித்ததை கமெண்ட் பண்ணுங்க.

News August 22, 2025

அறிவித்தார் கோவை கலெக்டர்!

image

கோவை: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) கோயம்புத்தூர் – பொள்ளாச்சி சாலையில் உள்ள ஈச்சனாரி ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது. இந்த முகாமில் 270-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளனர். இதில் , 8 மற்றும் 10-ம் வகுப்பு,ஐடிஐ, இன்ஜினியரிங்,டிகிரி, செவிலியர்கள் என அனைத்துத் தரப்பினரும் கலந்துகொள்ளலாம் என கலெக்டர் பவன்குமார் தெரிவித்துள்ளார். SHAREIT

News August 22, 2025

நாகை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

image

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழாவானது வருகிற 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் 8-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் 29-ந்தேதி அன்று ஒருநாள் மட்டும் நாகை மற்றும் கீழ்வேளூர் தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஈடுசெய்ய செப்டம்பர் 13-ந்தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வேலை நாளாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க

News August 22, 2025

அறிவித்தார் சேலம் கலெக்டர்!

image

சேலம் மக்களே.. விவசாயிகள் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில் பதிவுசெய்து பயன்பெறலாம். விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழுவைச் சேர்ந்த விவசாயிகள் www.tnhorticulture.tn.gov.in என்ற வலைதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, தெரிவித்துள்ளார். இதனை உங்கள் பகுதி விவசாயிகளுக்கு SHARE பண்ணுங்க

News August 22, 2025

நெல்லை: காவல்துறை சிசிடிவி கேமராவை திருடி விற்ற சம்பவம்

image

பாப்பாக்குடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்களை கண்காணிக்கும் வகையில் முக்கிய இடங்களில் சிசிடிவி கேமிராக்கள் காவல்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 18ம் தேதி இரவு போலீசார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது காசி தர்மம் பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்கள் சேதமடைந்தும், ஒரு கேமிரா காணாமல் போயிருந்தது, விசாரணை நடத்தி அதே பகுதியில் உள்ள 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

News August 22, 2025

திருச்சி: உதவி மைய எண்கள் அறிவிப்பு

image

திருச்சி மாநகராட்சியில் பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் 0431-3524200, 83001 13000 என்ற டோல் ஃப்ரீ எண்களில் தொடர்பு கொண்டு குடிநீர் சேவை, தெருவிளக்கு பழுதுகள், திடக்கழிவு அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு புகார்களை தெரிவிக்கலாம். இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 22, 2025

கிருஷ்ணகிரி மக்களே செம வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க

image

கிருஷ்ணகிரி இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பாக இளைஞர்கள் பயன்பெறும் வகையில் இலவச இரண்டு சக்கர வாகன பழுது நீக்க பயிற்சி அளிக்க உள்ளது. 18-45 வயது வரை உள்ள இளைஞர்கள் நாளைக்குள் விண்ணப்பிக்கலாம். நாளை முதல் வகுப்புகள் தொடங்கும். பயிற்சி முடிந்த பின்பு அரசு சான்றிதழும், தொழில் தொடங்குவதற்கான வங்கி கடன் உதவியும் செய்து தரப்படும். மேலும் 9442247921 தொடர்பு கொள்ளவும். ஷேர் IT

News August 22, 2025

ஆக.30 ஆம் தேதி வரை இதை செய்ய வேண்டாம்

image

தமிழகத்தில் இருந்து தினமும், 1,000 லாரிகள் வரை வாடகைக்கு இயக்கப் படுகின்றன. அங்கு சரக்கு களை இறக்கி விட்டு, காலி யாக நிற்கும் லாரிகளை, அங்குள்ள சிலர், கடந்த ஆண்டு சதுர்த்தியின்போது சிலைகளை கரைக்க பயன் படுத்தினர். எனவே வரும் ஆக.30 ஆந்திரா, தெலுங்கானாவுக்கு சரக்கு ஏற்றிச்செல்லும் லாரிகள், லோடை இறக்கி விட்டு காலி லாரிகளை, அங்கு நிறுத்த வேண்டாம்,” எனமாநில லாரி உரிமையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News August 22, 2025

ராணிப்பேட்டை: எழுத்துத் தேர்விற்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு

image

இராணிப்பேட்டை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் உள்ள பணியிட எழுத்துத் தேர்விற்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு தொடங்கப்பட உள்ளது. எனவே இத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் https://forms.gle/L5W420Mnu7BKjo9FA Google link மூலம் தங்களது விவரங்களை பதிவு செய்து இவ்வகுப்பில் கலந்து கொள்ளலாம்.

error: Content is protected !!