Tamilnadu

News March 14, 2025

போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கிய ஆட்சியர்

image

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறுதானிய விழாவினை முன்னிட்டு மாவட்ட அளவில் நடைபெற்ற சமையல் போட்டி மற்றும் வினாடி வினா போட்டியில் வெற்றிபெற்றவர்களை பாராட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று (14.03.2025) பரிசுகளை வழங்கினார். அப்போது பல்வேறு துறைகளின் அதிகாரிகள் மற்றும் போட்டியில் பங்கு பெற்றவர்கள் உடன் இருந்தனர்.

News March 14, 2025

மதுரை மாநகராட்சிக்கு 5 கோடி :புதிய அறிவிப்பு  

image

மதுரை மாநகராட்சி உட்பட தமிழகம்  முழுவதும் இருக்கக்கூடிய 30 மாநகராட்சி பகுதிகளில் 5 கோடி ரூபாய் மதிப்பில் புதிய  நூலகம் அமைக்கப்படும் என தமிழக சட்டப்பேரவை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.ஏற்கனவே கலைஞர் நூற்றாண்டு நூலகம் உள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு நூலகம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது .

News March 14, 2025

குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம்

image

தருமபுரி மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் வருகின்ற 17.03.2025 முதல் 22.03.2025 வரை நடைபெற உள்ளது. பொது மக்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவம் கொடுத்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என ஆட்சியர் சதிஷ் தெரிவித்துள்ளார்.

News March 14, 2025

இன்ஸ்டாவின் ஃபேக் ஐடி ஆசாமி ; ஸ்கெட்ச் போட்டு பிடித்த இளம்பெண்

image

திண்டுக்கல்: இன்ஸ்டாகிராமில் ஃபேக் ஐடி மூலம் இளம்பெண்ணிடம் தோழி போல் பழகிய நபர் ஆபாச படத்தை அப்பெண்ணிற்கு அனுப்பியுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண் ஆபாச படம் அனுப்பிய நபரிடம் ’நேரில் பேச வேண்டும் வாருங்கள்’ என அந்த நபரை ஆசை வார்த்தை காட்டி அழைத்துள்ளார். நேரில் சந்திக்க வந்த அந்த நபரை உறவினர்களுடன் சென்று மடக்கிப் பிடித்த அப்பெண் நடு ரோட்டிலேயே வைத்து தர்ம அடி கொடுத்துள்ளார்.

News March 14, 2025

தேனியில் ஓபிஸ் செல்லும் கோவில்கள்

image

தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். இவர் சில
முக்கிய முடிவுகளை எடுக்க தேனி மாவட்டத்தில் இருக்கும் வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில், உத்தமபாளையம் காளத்தீஸ்வரர் கோயில், பெரியகுளம் பாலசுப்பிரமணியசுவாமி கோயில், கைலாசபட்டி கைலாசநாதர் கோயில் உள்ளிட்ட கோவில்களுக்கு சென்று வழிபடுவார்.

News March 14, 2025

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

திருவள்ளூர் மாவட்ட அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் 2024-25 ஆம் ஆண்டிற்கான சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் மற்றும் உரிமக் கட்டணம் ஆகியன வசூலிக்கும் பொருட்டு நாளை மற்றும் நாளை மறுநாள் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. கிராம மக்கள் அனைவரும் இந்த சிறப்பு முகாமினை பயன்படுத்தி வரியினங்களை செலுத்தி ஊராட்சியின் வளர்ச்சிக்கு துணை புரியுமாறு ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

News March 14, 2025

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (14.03.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் உட்கோட்ட அதிகாரியை, மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 14, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( மார்ச் -14) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் 9884098100.

News March 14, 2025

பாளையங்கோட்டை சிறை ADSP சஸ்பெண்ட்

image

பாளையங்கோட்டை சிறை கூடுதல் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் வசந்த கண்ணன் இன்று பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சிறைக் கைதிகள் பொருட்கள் தயாரிக்க மூலப் பொருட்கள் வாங்கிய முறைகேட்டில் பாளையங்கோட்டை சிறைச்சாலை கூடுதல் கண்காணிப்பாளர் வசந்த கண்ணன் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மதுரை உயர்நீதிமன்ற கிளை இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

News March 14, 2025

சிறுவர் அரசு குழந்தைகள் இல்லத்தில் ஆட்சியர் ஆய்வு

image

காரை கூட்டுரோட்டில் அமைந்துள்ள சிறுவர்களுக்கான அரசு குழந்தைகள் இல்லத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு வழங்கப்படும் உணவு முறைகள் மற்றும் பாதுகாப்பு முறைகள் குறித்து கேட்டறிந்தார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அனுசுயா, கண்காணிப்பாளர்கள் கண்ணன் ராதா விஜயகுமார் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

error: Content is protected !!